India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலக பட்டினி தினமான மே 28ஆம் தேதி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம் வழங்க உள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் அறிவுறுத்தலின் படி, பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும், அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமாச்சல் மாநிலம் சிம்லாவில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், மக்களவைத் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவது உறுதி என்று கூறினார். அதே நேரத்தில் தேர்தலில் காங்கிரஸ் தோற்பது உறுதி என்றும், அந்தத் தோல்விக்கு இவிஎம் இயந்திரம் மீதும், மல்லிகார்ஜுன கார்கே மீதும் காங்கிரஸ் பழிபோட்டுவிடும் என்றும் அவர் விமர்சித்தார்.
எதிரணியை வெல்ல, கம்பீர் கொடுக்கும் திட்டங்கள் சரியாக இருப்பதாக KKR அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், டி20 போட்டி குறித்து கம்பீருக்கு நிறைய அனுபவம் இருக்கிறது என்றும், KKR அணிக்காக 2 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார் என்றும் கூறினார். மேலும், அவரது அறிவுரைகள் மூலம் இறுதிப்போட்டியிலும் தங்களால் வெல்ல முடியும் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
டெல்லி பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி அமைச்சர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். ராஜ்கோட் தீ விபத்தில் 24 பேர் உயிரிழந்த சோகம் தீர்வதற்குள் மீண்டும் ஒரு துக்க சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், பாரிசில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், சாதனையாளர்களான ஸ்பெயினைச் சேர்ந்த ரபேல் நடால், செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச் இருவரும் இளம் வீரர்களின் சவாலை எதிர்கொள்கின்றனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில், போபண்ணா-மேத்யூ எப்டன் ஜோடி பட்டம் வெல்லுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ‘ரெமல்’ புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. வங்கதேசத்தில் இருந்து 290 கிலோ மீட்டர் தெற்கு-தென் மேற்கில் நிலை கொண்டுள்ளது ரெமல் புயல். இப்புயல் இன்று இரவு வங்கதேசத்துக்கும், மேற்கு வங்கத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது 120 கிமீ., வேகத்தில் காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இபிஎஸ் மீது அதிமுக மூத்த தலைவர்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாகவும், தேர்தல் முடிவுக்கு பிறகு பூகம்பம் வெடிக்கலாம் எனவும் செய்தி வெளியானபடி உள்ளது. மக்களவைத் தேர்தலில் 10 இடங்களிலாவது அதிமுக வெல்ல வேண்டும், அதன்மூலம் தனது பதவியை தக்க வைக்கலாம் என நம்புகிறார் இபிஎஸ். ஒருவேளை, அதிமுக தோல்வியை சந்திக்கும் நிலை வந்தால், கட்சிக்குள் அவருக்கு நெருக்கடி ஏற்படும் எனப் பேசப்படுகிறது.
ஐபிஎல் வரலாற்றிலேயே, அதிக சிக்சர்கள் (1251) பதிவாகியது நடப்பு ஐபிஎல் தொடரில் தான். அதேபோல், ஒரு ஐபிஎல் தொடரில் எந்தவொரு அணியும் 150 சிக்சர்களை இதுவரை அடித்ததில்லை. ஆனால், இந்த சீசனில் ஹைதராபாத்- 175, பெங்களூரு- 165 சிக்சர்கள் அடித்து புதிய சாதனை படைத்தன. கொல்கத்தாவில் நடைபெற்ற KKR-PBKS இடையேயான ஐபிஎல் போட்டியில், 42 சிக்சர்கள் அடிக்கப்பட்டது. இதுவே அதிக சிக்சர்கள் பதிவான ஐபிஎல் போட்டியாகும்.
ஐபிஎல் வரலாற்றில், அதிகமுறை 200 ரன்களுக்கு மேலும் (41 முறை), அதிகமுறை 250 ரன்களுக்கு மேலும் (8 முறை) அடிக்கப்பட்டது நடப்பு சீசனில் தான். 2013இல் RCB அணி 263/5 ரன்கள் குவித்ததே, அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அதையும் இந்த சீசனில், RCB-க்கு எதிரான போட்டியில் 287/3 ரன்கள் குவித்து SRH அணி முறியடித்தது. குறிப்பாக, ஒரு போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து 500 ரன்கள் குவித்ததும் இந்த சீசனில் தான்.
மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய 17ஆவது சீசன் ஐபிஎல் தொடர், இன்றுடன் நிறைவடைய உள்ளது. இந்த சீசனின் முதல் 9 போட்டிகளிலும், சொந்த ஊர் மைதானங்களில் ஆடிய அணிகளே வெற்றி பெற்றன. இதுவரை எந்தவொரு ஐபிஎல் சீசனிலும் இப்படி நடந்தது கிடையாது. அதேபோல், CSK அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து எம்.எஸ்.தோனி விலகினார். 15 வருடங்களாக சென்னை அணியை வழிநடத்தி வந்த அவர், இத்தொடரில் சாதாரண வீரராக களமிறங்கினார்.
Sorry, no posts matched your criteria.