India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் உள்ள சிறப்பு பள்ளிகளில் ஜூன் 1 முதல் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் 175 சிறப்பு பள்ளிகளில் 5725 மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு, சத்துணவு மையத்தில் இருந்து உரிய நேரத்தில் மதிய உணவு கொண்டுச் சென்று வழங்கவும், இதற்கான பொறுப்பாளர்களை சம்பந்தப்பட்ட துறை மூலம் நியமிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல் நிலவுவதாக திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் பாஜக வெல்லும் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவிப்பதாகவும், ஆனால் உட்கட்சி பூசலால் அவரே கோவையில் வெற்றி பெறுவது கடினம் என செய்திகள் வருவதாகவும் தெரிவித்தார். மேலும், பாஜக 10 ஆண்டுகளில் எதையும் செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
ஆதித்யா என்ற நபர், காதலிக்கு தான் செய்த செலவுகளை மொத்தமாக Excel sheetஇல் குறித்து வந்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. கணக்காளரான (CA) அவர், 7 மாதங்களாக காதலிக்கு செய்த செலவுகளை நோட் செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் காதல் பிரிந்த நிலையில், இந்த Excel sheetஐ காதலிக்கு அனுப்பி அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதில், சுவாரஸ்யம் என்னவென்றால் பிறந்த நாள் பரிசுக்கு அவர் 18% ஜிஎஸ்டியை சேர்த்ததுதான்.
தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘ராயன்’ படத்திற்கான போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதனிடையே, ப்ரொமோஷன் பணிகளை தொடங்கியுள்ள படக்குழு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான 2 பாடல்களை வெளியிட்டது. இந்நிலையில், இப்படத்தின் பின்னணி இசைக்கான பணிகளை ஏ.ஆர்.ரஹ்மான் முடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது X பக்கத்தில் வெளியிட்டுள்ள தனுஷ், புயல் வந்துக் கொண்டிருப்பதாக பதிவிட்டுள்ளார்.
நிமோனியா காய்ச்சல் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனையில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இனி எந்த பிரச்னையும் இல்லை என்றாலும் 20 நாள்கள் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உலகக் கோப்பை டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ளது. பயிற்சிக்கு இடையில் கிடைக்கும் நேரத்தில், இந்திய அணி வீரர்கள் ஜாலியாக அமெரிக்காவை சுற்றிப் பார்த்து ரசித்து வருகின்றனர். அந்த வகையில், இளம் வீரர்கள் சூர்யகுமார், ஷிவம் துபே, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ஊரைச் சுற்றிப் பார்த்ததுடன் கையில் ஜூஸுடன் போஸ் கொடுத்து புகைப்படம் பதிவிட்டுள்ளனர். இது தற்போது வைரலாகி வருகிறது.
ஏழை மக்களின் வங்கி கணக்குகளில் கோடிக்கணக்கான ரூபாயை டெபாசிட் செய்ய இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வாரணாசியில் பிரசாரம் செய்த அவர், மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களில் உள்ள பெண்களின் பட்டியலை தயாரிக்க இருப்பதாகவும், அவர்களின் வங்கி கணக்கில் ஜூலை 5ஆம் தேதி ₹8,500 வரவு வைக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதன் மூலம், நாட்டின் அனைத்து ஏழை பெண்களும் பயன்பெற இருப்பதாக தெரிவித்தார்.
கட்டுமானத் துறைக்கு கடன் வழங்கும் வங்கிகள் 5% பாதுகாப்புத் தொகை தர வேண்டும் என RBI கூறியுள்ளது. இந்த முறையில், SBI வங்கி RBI-க்கு தற்போது ₹32,000 கோடி வழங்கும் நிலையில், புதிய விதி அமலானால் மேலும் ₹9000 கோடி ஒதுக்கும் சூழல் உண்டாகும். இதனால், கையிருப்புத் தொகை குறையும் என்பதால் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன் தொகையும் குறைய வாய்ப்புள்ளதால், புதிய விதியை கைவிட வங்கிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ரியல் எஸ்டேட், உள்கட்டமைப்புக்கான கடன் வழங்கும் வங்கிகள் 5% பாதுகாப்பு தொகை தர வேண்டும் என சமீபத்தில் RBI அறிவித்தது. இந்த விதி அமலாக உள்ள நிலையில், இதனால் கடன் வழங்குவது பெரிய அளவில் குறையும் என வங்கிகள் அச்சம் தெரிவித்துள்ளன. குறிப்பாக, உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான ஏலத்தில் பங்கேற்போரின் ஆர்வம் குறையும் எனக் கூறியுள்ள SBI உள்ளிட்ட வங்கிகள், புதிய விதியில் தளர்வு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளன.
போதை ஆசாமிகள் காவல்துறையினரை தாக்கும் சம்பவங்கள் கவலையளிப்பதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். திமுக அரசும், இதை தடுக்க வேண்டிய காவல்துறையினரும் விழிபிதுங்கி நிற்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர், இதனால், வியாபாரிகளும், பொதுமக்களும் அச்சத்தில் இருப்பதாக கூறியுள்ளார். காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Sorry, no posts matched your criteria.