India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விஜய் தேவரகொண்டா- ரஷ்மிகா மந்தனா இருவருக்கும் கடந்த அக்டோபர் 3-ம் தேதி, நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக கூறப்பட்டது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பே இன்னும் வெளியாகாத நிலையில், அவர்களின் திருமண தேதி குறித்த தகவலும் வெளிவந்துவிட்டது. அடுத்த வருடம், பிப்ரவரி 26-ம் தேதி, ராஜஸ்தானின் உதய்பூர் மாளிகையில் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

USA-வில் டிரம்ப் ஆட்சி அமைந்து ஓராண்டு ஆகிறது. இதனை கொண்டாடிய டிரம்ப், தான் வெற்றி பெற்றதன் மூலம் USA-வில் சுயாட்சி மீட்டெடுக்கப்பட்டதாக பேசியுள்ளார். அத்துடன், இந்த ஆட்சியும் மக்களும், பொருளாதாரத்தை காப்பாற்றி, சுதந்திரத்தை மீட்டதன் மூலம், நாட்டையே ஒன்றிணைந்து காப்பாற்றினோம் என தெரிவித்தார். மேலும், நியூயார்க்கில் குடியரசுக் கட்சி தோல்வியடைந்தது குறித்து கவலைப்பட தேவையில்லை என்றார்.

உலகக்கோப்பை தொடரில் பாதியில் இருந்து வெளியேறிய பிரதிகா ராவலுக்கு ஏன் பதக்கம் தரவில்லை என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இந்த சூழலில்தான், நேற்று PM மோடியுடன், இந்திய அணியினர் சந்திப்பு நடைபெற்றது. அதில், பிரதிகா ராவலும் இடம் பெற்றிருந்தார். அப்போது அவரும் மெடலுடன் இருந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், PM மோடியும் அடிக்கடி தொலைபேசியில் பேசுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்பில், இரு நாடுகளின் வர்த்தக குழுக்களும், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து தீவிர விவாதங்களில் ஈடுபட்டு வருவதாக வெள்ளை மாளிகை செய்தி செயலாளர் கரோலின் லீவிட் குறிப்பிட்டார். டிரம்ப், மோடி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசியலில் சில தவறுகளை தான் செய்துவிட்டதாக ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். தான் செய்த தவறுகளில் ஒன்று அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது; மற்றொன்று கட்சித் தலைவர் பதவியை அவரிடம் கொடுத்தது. அன்புமணியின் பேச்சும், செயலும் அருவருக்கத்தக்கதாக உள்ளதாக சாடிய அவர், அன்புமணி கும்பல் பற்றி பேசினால் என் வளர்ப்பு சரியில்லை என்பீர்கள்; அங்கு உள்ள எல்லோரும் நான் வளர்த்த பிள்ளைகள்தான் என மனம் உடைந்து பேசினார்.

மனிதன் சாகா வரம் பெற முடியுமா (அ) இறந்த மனிதனுக்கு உயிர் கொடுக்க முடியுமா என்ற ஆராய்ச்சிகள் பல காலமாக நடக்கிறாது. அதன் விளைவாக பல கண்டுபிடிப்புகளும் அறிமுகமாகியுள்ளது. தற்போது சோதனையில் இருக்கும் அந்த ஆராய்ச்சிகள் வெற்றியை கண்டுவிட்டால் மனிதர்களால் சாகாமல் பல நூற்றாண்டுகளுக்கு வாழமுடியுமாம். அது என்னென்ன ஆராய்ச்சிகள் என்பதை தெரிந்துகொள்ள போடோக்களை SWIPE பண்ணுங்க. உங்களுக்கு எவ்வளவு நாள் வாழ ஆசை?

கனமழையால் இன்று திருப்பத்தூர் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தி.மலை, வேலூர், விழுப்புரம், காஞ்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் 1 மணி வரை மழை வெளுத்து வாங்க வாய்ப்புள்ளதாக IMD எச்சரித்துள்ளது. அதேபோல், மதியத்திற்கு மேல் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், அரை நாள் விடுமுறை அளிக்கப்படுமா என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

நியூயார்க்கில் இந்திய வம்சாவளி முஸ்லிம் வேட்பாளரான ஸோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றதை ஒப்பிட்டு, மும்பை பாஜக நிர்வாகி அமித் சதாம் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கான் என்ற பெயர் கொண்ட எவரும் மும்பையில் மேயராக வரமுடியாது என்ற அவர், இது ஒருபோதும் நடக்காது என கூறியுள்ளார். ஆனால் மும்பையில் இதை நடத்திக்காட்ட சிலர் முற்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிஹாரில் உள்ள 243 தொகுதிகளில், முதல்கட்டமாக 121 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏராளமான மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 13% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் கட்ட தேர்தலில் 3.5 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ₹1 உயர்ந்து ₹164-க்கும், கிலோ வெள்ளி ₹1,000 உயர்ந்து ₹1,64,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து, வரும் நாள்களில் விலையில் மிகப்பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.