News May 30, 2024

குட்கா வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றமா?

image

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்ட 21 பேர் மீதான குட்கா வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சமுதாயத்தில் சீர்கேட்டை விளைவிக்கும் இவ்வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு விசாரணையை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற சிபிஐ முதன்மை நீதிமன்றம் பரிந்துரைத்தது.

News May 30, 2024

2ஆவது சுற்றில் பி.வி.சிந்து தோல்வி

image

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் 2ஆவது சுற்றுப் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்துள்ளார். ஸ்பெயின் வீராங்கனை கரோலினாவுக்கு எதிரான இப்போட்டியில், சிந்து அபாரமாக விளையாடி 21-13 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினார். 2, 3ஆவது செட்டில் தடுமாறிய சிந்து, 11-21, 20-22 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்தார். இது கரோலினாவுக்கு எதிரான 6ஆவது தொடர் தோல்வி ஆகும்.

News May 30, 2024

சட்டப்பேரவை தேர்தல்: 1 வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள்

image

2009 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் துருவ் நாராயணன், மஜத வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை விட 1 வாக்கு அதிகம் பெற்று வென்றார். துருவ் நாராயணனுக்கு 40,752 வாக்குகளும், கிருஷ்ணமூர்த்திக்கு 40,751 வாக்குகளும் கிடைத்தன. 2008 ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் கல்யாண் சிங் செளஹான் (62,216), காங்கிரஸ் வேட்பாளர் சிபி ஜோஷியை (62,215) விட 1 வாக்கு அதிகம் பெற்று வென்றார்.

News May 30, 2024

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

image

திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை கேட்டு வேதனையடைந்தேன் என்று முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். திமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து கழகப்பணியையும், மக்கள் பணியையும் திறம்பட ஆற்றிய செயல்வீரர் பரமசிவம். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் எனக் கூறியுள்ளார்.

News May 30, 2024

பொருட்களை வாங்குவதால் மகிழ்ச்சி வருமா?

image

பணத்தால் பொருட்களை வாங்குவதை விட, இசை நிகழ்ச்சி, உணவு, சுற்றுலா செல்வது போன்றவற்றிற்காக பணத்தை செலவிடுவது மக்களுக்கு அதிக மகிழ்ச்சியை தருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழக குழு இது தொடர்பாக 1,400 பேரிடம் நடத்திய ஆய்வில், பணத்தை செலவு செய்த பின் ஏற்படும் உணர்வுகளை 1 முதல் 9 வரை அளவிட கோரப்பட்டது. முடிவில், பொருட்களுக்காக செலவிடுவது திருப்தி தரவில்லை எனத் தெரிய வந்தது.

News May 30, 2024

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்?

image

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு வரும் ஜூன் 24ஆம் தேதி முதல், மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 60% படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், பட்ஜெட் காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதனால், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பில் அஜித் இணைந்தார். அங்கு முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த பிறகு, மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

News May 30, 2024

INDvsPAK போட்டிக்கு கூடுதல் பாதுகாப்பு

image

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டி, வரும் ஜூன் 9ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெற உள்ளது. இந்நிலையில், மைதானத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ISIS அமைப்பு, மைதானத்தில் புகுந்து ‘Lone Wolf’ தாக்குதல் நடத்த போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. இந்த மிரட்டலை கருத்தில் கொண்டு, மைதானத்தில் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக நியூயார்க் காவல்துறை தெரிவித்துள்ளது.

News May 30, 2024

தமாகாவில் இருந்து ஈரோடு கவுதமன் விலகல்

image

பாஜகவின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து தமாகா மாநில நிர்வாகி ஈரோடு கவுதமன் அக்கட்சியில் இருந்து விலகினார். மூப்பனார், வாசனுடன் இணைந்து 40 ஆண்டு காலமாக அரசியலில் பயணித்து வந்த அவர், மோடியை கடுமையாக விமர்சித்ததோடு, அரசியல் ரீதியாக வாசனுடன் இனி பயணிக்க முடியாது என்ற நிலையில், தமாகாவில் இருந்து முற்றிலும் வெளியேறுவதாக கூறியுள்ளார். தன்னை போல கட்சியில் பலர் அதிருப்தியில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

News May 30, 2024

குமரியில் மோடி தியானம்: பின்னணி இதுவா? (2/3)

image

குமரியில் கடலுக்கு நடுவே இருக்கும் விவேகானந்தர் நினைவிடம் உள்ள பாறை மீது அமர்ந்து, சிவனை நினைத்து கன்னியாகுமரி தேவி தவம் இருந்ததாகவும், அந்த பாறை மீது கன்னியாகுமரி தேவியின் கால்தடம் உள்ளதாகவும் ஆன்மிக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஜுன் 1 இறுதிக்கட்ட தேர்தல் நடப்பதால் அன்று தொலைக்காட்சி நேரலையில் தோன்றி வாக்காளர்களை ஈர்க்கவே மோடி குமரி வருவதாக விமர்சித்து எதிர்க்கட்சிகள் புகார் அளித்துள்ளன.

News May 30, 2024

குமரியில் மோடி தியானம்: பின்னணி இதுவா?(1/3)

image

இந்தியாவின் ஆன்மிக தலைவர்களில் ஒருவரான விவேகானந்தர், குமரிக்கு 1892இல் வந்து தற்போது அவர் பெயரில் உள்ள மண்டபம் அமைந்துள்ள பாறை மீது 3 நாள்கள் தியானம் செய்தார். பிறகு 1893 சிகாகோவில் நடந்த உலக சமய மாநாட்டில் பங்கேற்று பேசி உலகப் புகழ்பெற்றார். இதனால் குமரியில் அவர் பெயரில் விவேகானந்தர் நினைவிடம் கட்டப்பட்டது. இன்று அங்கு வரும் மோடி, அந்த பாறை மீது அமர்ந்து தியானம் செய்யவுள்ளார்.

error: Content is protected !!