India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாக்கு எண்ணும் மேஜைகளுக்கு ஏற்றபடி, வேட்பாளர்கள் எத்தனை முகவர்களை வேண்டுமானாலும் நியமிக்க முடியும். அதே நேரம், வாக்கு எண்ணிக்கைக்கு 3 நாட்களுக்கு முன்னதாகவே தங்கள் முகவர்களின் புகைப்படம் அடங்கிய Form 18 விண்ணப்பத்தை வேட்பாளர் பூர்த்தி செய்து, தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். முகவர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
மோடி தமிழர்களை அவமதிக்கவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஒடிஷாவில் பிரசாரம் செய்த போது, அம்மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி வி.கே.பாண்டியனைதான் குறிப்பிட்டதாக கூறிய அவர், தனி நபரைப் பற்றி பேசுவது ஒட்டுமொத்த தமிழர்களை அவமதிப்பதாக கருத முடியாது என்றார். மேலும், தேர்தலில் வெற்றி பெற்று மோடி 3ஆவது முறையாக பிரதமராவது உறுதி எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தி.மலை, விழுப்புரம், சிவகங்கை, ராமநாதபுரம், குமரி, மயிலாடுதுறை, விருதுநகர், கடலூர் ஆகிய 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். குறிப்பாக பிரதமர் மோடி குமரி-க்கு சென்றுள்ள நிலையில், அங்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஐ.டி.சி., நிறுவனத்திலிருந்து அதன் ஹோட்டல் வணிகத்தை, ‘ஐ.டி.சி., ஹோட்டல்ஸ்’ என்ற துணை நிறுவனத்தின் கீழ் கொண்டு வர, இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்குரிய பூர்வாங்க பணிகள் நிறைவடைந்த பின், ஐ.டி.சி., ஹோட்டல்ஸ் பங்குகள் தனியாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என்றும், இந்த புதிய நிறுவனத்தில் ஐ.டி.சி., 40% பங்குகளை வைத்திருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்தல் மேற்பார்வையாளர்கள், தேர்தல் உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதி அளிக்கப்படும். மேலும், தேர்தலோடு தொடர்புடைய அரசு அதிகாரிகள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களும் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்ல முடியும்.
கமல் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா, நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு சென்னையில் உள்ள நேரு மைதானத்தில் நடைபெற உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் வரும் ஜூலை 12ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
சிறப்பு திருமண சட்டத்தின் மூலம் இந்து, இஸ்லாமியர் இடையே நடக்கும் திருமணம் முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் (ஷரியத்) கீழ் செல்லாது என ம.பி., ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இஸ்லாமிய ஆணுக்கும், இந்து பெண்ணுக்கும் இடையே கலப்பு திருமணத்தை பதிவு செய்து போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி மனு தாக்கல் செய்தனர். இதை ஏற்க மறுத்து, முஸ்லீம் சட்டத்தின் கீழ் இது “ஒழுங்கற்ற” திருமணமாக கருதப்படும் என கருத்து தெரிவித்துள்ளது.
ஆன்மீக பயணத்தை தொடங்கியுள்ள நடிகர் ரஜினி, இன்று உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள புனித ஸ்தலத்திற்கு சென்றுள்ளார். நேற்று விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆன்மீக பயணம், ஒவ்வொரு ஆண்டும் தனக்கு புது அனுபவத்தைப் தருகிறது என்றும், இம்முறையும் பெறப் போகிறேன் என்றும் தெரிவித்தார். ஒருவாரம் அங்கு தங்கி பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனிதத் தலங்களுக்குச் சென்று வழிபட உள்ளார்.
ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், ‘ஜியோ ஃபைனான்ஸ் App-இன் பீட்டா வெர்ஷனை வெளியிட்டுள்ளது. இந்த App மூலம், டிஜிட்டல் பேங்கிங், UPI பண பரிவர்த்தனைகள் மற்றும் கட்டணங்களை செலுத்தலாம். உடனடியாக டிஜிட்டல் வங்கி கணக்கைத் திறக்க முடியும். வங்கி கணக்குகள் மற்றும் சேமிப்புகளை இதில் பார்த்துக் கொள்ளலாம். எதிர்காலத்தில், வீட்டுக் கடன், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற பல்வேறு வசதிகள் கொண்டு வரப்படவுள்ளது.
▶’சீஷெல்ஸ்’ எனும் ராட்சத ஆமை – 200 ஆண்டுகள் வரை உயிர் வாழும். ▶’கொய்’ எனும் மீன் வகை – 226 ஆண்டுகள் வரை உயிர் வாழும். ▶பௌஹெட் திமிங்கிலம் – 100 முதல் 200 ஆண்டுகள் வரை உயிர் வாழும். (அதிக நாள் உயிர் வாழும் பாலூட்டி). ▶க்ரீன் லேண்ட் சுறா – 272 வருடங்கள் வரை உயிர்வாழும். ▶மக்காவ் எனும் கிளி வகை அதிக வருடங்கள் வாழும் பறவை இனம் (82 வருடங்கள்). ▶கடல் முள்ளெலிகள் – 150 முதல் 200 வருடங்கள் உயிர் வாழும்.
Sorry, no posts matched your criteria.