India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்றுடன் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை முடிந்த நிலையில், அரசியல் சாசனத்தை காப்பதற்காக நின்ற கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு ராகுல் நன்றி தெரிவித்துள்ளார். நாட்டின் மகத்தான மக்களை வணங்குகிறேன் எனக் கூறிய அவர், INDIA கூட்டணி அரசு அமையும் என அஞ்சாநெஞ்சமுள்ள காங்., தொண்டர்களுக்கு தெரிவிக்கிறேன். தவறாக பிரதமர் திசை திருப்ப முயன்றும் பொதுநலன் சார்ந்த பிரச்னைகளில் போராடி வென்றுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
மனிதர்கள் ஒருநாளைக்கு குறைந்தது 6 மணி நேரமாவது தூங்க வேண்டும், இல்லையேல் கீழ்கண்ட பாதிப்புகள் ஏற்படுமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். * நோய்கள் உருவாக வாய்ப்பு *இதய நலன் பாதிக்கப்படக்கூடும் *புற்றுநோய் ஆபத்து அதிகரிக்கக்கூடும் *சிந்தனைத் திறன் குறையக்கூடும் *நினைவாற்றலை பாதிக்கக்கூடும் *தாம்பத்திய உறவை பாதிக்கக்கூடும் * உடல் எடை அதிகரிக்கக்கூடும் * தோளில் முதுமை தோற்றம் ஏற்படும்
விருந்தோம்பல் குணத்தால், நமது DNAவிலேயே சனாதன தர்மம் இருப்பதாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். சிக்கிம், கோவா மாநிலம் உருவான தின விழாவில் பேசிய அவர், இந்திய மக்களிடம் சனாதனம் பரவி இருப்பதாக தெரிவித்தார். அரசால் எதையும் தனியாக செய்ய முடியாது, மக்கள் நினைத்தால் மட்டுமே, எந்த ஒரு திட்டமும் வெற்றி பெறும் என்றும், அதுபோல, ஒற்றுமையை வலியுறுத்தும் சனாதனம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்றார்.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அரை மணி நேரம் கழித்து, மின்னணு வாக்கு இயந்திரங்களை எண்ண தேர்தல் அதிகாரி அனுமதி அளிப்பார். இறுதிச் சுற்று வரை மின்னணு இயந்திரங்கள் எண்ணப்படும். ஆனால், தபால் வாக்குகளை எண்ணி முடித்த பிறகே, மின்னணு வாக்கு இயந்திரத்தின் இறுதிச்சுற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.
சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்களை கடக்க, விராட் கோலிக்கு இன்னும் 267 ரன்கள் மட்டுமே தேவை. 34,357 ரன்களுடன் சச்சின் முதல் இடத்தில் இருக்க, 26,733 ரன்களுடன் விராட் கோலி 4ஆவது இடத்தில் உள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடர்களில், 2 முறை அதிகபட்ச ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை உடைய விராட் கோலி, வரப்போகும் உலகக் கோப்பைத் தொடரில் 27,000 ரன்களை நிச்சயம் கடப்பார் என ரசிகர்கள் பேரார்வத்துடன் உள்ளனர்.
தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் கடும் வெப்பம் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, ஜூன் 6ஆம் தேதிக்கு பதில் ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் கடந்த சில நாள்களாக வெப்பம் அதிகரித்து வருவதால், பள்ளித்திறப்பு தள்ளிப்போகுமா என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தமிழக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
கனிமொழி போட்டியிடும் நட்சத்திர தொகுதியான தூத்துக்குடியில், 2 வாக்கு சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவை அழிக்காமல் அலுவலர்கள் விட்டுவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அப்படியே ஓட்டுப்பதிவு நடந்தது முடிந்துவிட்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிகாரிகள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வாக்கு இயந்திரங்களை வேட்பாளர்களால் நியமிக்கப்பட்ட முகவர்கள் கையாள முடியாது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும், வாக்கு எண்ணும் மேசைக்கும், முகவர்களுக்கும் இடையே தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கும். இதனால், முகவர்கள் வாக்கு இயந்திரங்களை தொட முடியாது. அதே நேரம், முகவர்கள் வாக்கு இயந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளின் எண்ணிக்கையை பார்ப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டிருக்கும்.
உத்தர பிரதேச மாநிலம் புடானில் காவல் அதிகாரியின் இல்லத்திற்கு முடி வெட்ட தாமதமாக வந்ததாகக் கூறி, முடி திருத்தும் தொழிலாளியை லாக்கப்பில் அடைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது. முடி திருத்தும் தொழிலாளியான வினோத், மற்ற வாடிக்கையாளர்களுடன் பிஸியாக இருந்ததால், சில மணி நேரம் கழித்து காவல் அதிகாரியின் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனார்.
2023ஆம் ஆண்டுக்கான சிறந்த T20 கிரிக்கெட் வீரருக்கான ICC விருதை, இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் வென்றுள்ளார். நியூயார்க்கில் இருக்கும் அவருக்கு, ICC நிர்வாகம் விருதை அனுப்பி வைத்தது. பேட்டிங் தரவரிசையில் 861 புள்ளிகளுடன் இருக்கும் அவர், 2023இல் இந்திய அணியின் T20 கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், வரும் T20 உலகக் கோப்பையில், அவரது ஆதிக்கம் நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.