India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரயிலில் ₹4 கோடி பிடிபட்ட வழக்கில் ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு நயினார் நாகேந்திரன் ஆஜர் ஆவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வழக்கில் இன்று ஆஜராகுமாறு அவர் உள்பட பாஜகவினர் 4 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி இருந்தது. இந்நிலையில், இன்று அவர் ஆஜராகவில்லை என்றும், தேர்தல் முடிவுகளுக்கு பின் ஆஜராவார் என்றும் வழக்கறிஞர் மூலம் சிபிசிஐடி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, பாகிஸ்தான், நேபாள் ஆகிய மூன்று நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பைவிட எல்ஐசி நிர்வகித்து வரும் நிதியின் அளவு அதிகமென புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஐ.எம்.எஃப் தகவலின்படி, பாகிஸ்தான் ₹28.2 லட்சம் கோடி, இலங்கை ₹6.2 லட்சம் கோடி, நேபாள் ₹3.68 லட்சம் கோடி ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பை கொண்டுள்ளன. அதே நேரத்தில் எல்ஐசி ₹51.21 லட்சம் கோடி நிதியை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கத்து.
மும்பை தீவிரவாதத் தாக்குதலை மையமாக வைத்து தயாரான ‘மேஜர்’ படத்தை பார்த்து தன்னை அறியாமல் அழுதுவிட்டதாக நடிகர் காஜல் அகர்வால் கூறியுள்ளார். நிஜத்தில் அந்த தாக்குதலுக்கும் தனது வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறிய அவர், தாக்குதல் நடந்த தாஜ் ஓட்டலின் அருகில்தான் தன் வீடு இருந்தது என்றார். மேலும், அந்தப் படத்தை பார்த்ததில் இருந்து நீண்ட நேரம் அந்தக் கால நினைவை அசை போட்டதாகக் கூறினார்.
பணப்பரிமாற்ற முறைகேடு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு நீதிமன்றம் விரைவில் தண்டனை அறிவிக்கவுள்ளது. 235 ஆண்டுகால அமெரிக்க அரசியல் வரலாற்றில், முன்னாள் அதிபர் ஒருவர் குற்றவியல் வழக்கில் தண்டனை பெறுவது இதுவே முதல்முறையாகும். அவருக்கு 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது
ஒரு லட்சம் கிலோவுக்கும் (100 டன்) மேலான சொக்கத் தங்கத்தை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளது RBI. அதன் கையிருப்பில் சுமார் 822 டன் தங்கம் உள்ளது. ஆனால், அவற்றை வெளிநாடுகளில் சேமித்து வைக்கும் வழக்கம் சுதந்திரம் பெற்றது முதலே இருந்து வருகிறது. அந்நிலையை மாற்றும் விதமாக, அதற்கான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு நமக்கு சொந்தமான தங்கம், உள் நாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.
காவலர்கள், இன்ஸ்பெக்டர்களுக்கு பேருந்துகளில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கார்டை காட்டி, பேருந்துகளில் அவர்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள் இலவசமாகப் பயணிக்க முடியும் எனத் தெரிகிறது. அண்மையில் காவலருக்கும், நடத்துனருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, மாவட்ட எஸ்.பிக்கள், கமிஷனர்கள் வாயிலாக காவலர்களுக்கு ஜூலைக்குள் ஸ்மார்ட்கார்டு விநியோகிக்கப்பட உள்ளது.
PAN கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க இன்றே கடைசி நாளாகும். வரி செலுத்துவோர் அனைவரும் மே 31ஆம் தேதிக்குள் தங்களுடைய ஆதார் எண்ணை PAN உடன் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு இணைக்க தவறினால், அதிக டிடிஎஸ் தொகை பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் PAN எண் செயல்படாததாகக் கருதப்படும்.
பல தடைகளையும் மீறி தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டினப் பிரவேசம் நடந்து முடிந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். தருமபுரம் ஆதீன மடாதிபதியான குருஞான சம்மந்த சுவாமிகள் பல்லக்கில் எழுந்தருளி பட்டினப் பிரவேசம் மேற்கொண்டார். 70க்கும் அதிகமான பக்தர்கள் அவரை சுமந்து வலம் வந்தனர். மயிலாடுதுறை ஞானபுரீஸ்வரர் கோயிலில் 16ஆம் நூற்றாண்டு முதல் இந்நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இளம் வயதில் தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து மனம் திறந்திருக்கிறார் சின்னத்திரை நடிகை அஞ்சலி பாஸ்கர். ஒருமுறை அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது நடுத்தர வயதுடைய ஒருவர் உரசியதாகவும், அவரது வயிற்றில் ஓங்கி குத்து விட்டவுடன் அவர் இறங்கி சென்றுவிட்டதாகவும் அப்போது பேருந்தில் இருந்த யாரும் உதவிக்கு வரவில்லை என்றும் அஞ்சலி பாஸ்கர் ஆதங்கம் தெரிவித்தார்.
அண்மையில், சன் தொலைக்காட்சியில் ‘டாப் குக் டூப் குக்’ என்ற சமையல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் வடிவேலு பங்கேற்றார். அதில் வடிவேலு கண்கலங்கி பகிர்ந்த விஷயம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனக்கு வாழ்க்கையில் சோறு போட்ட தெய்வம் என்றால், அது ராஜ்கிரண் தான் என்று நினைவுகூர்ந்தார். சினிமாவிற்குள் தான் வருவதற்கு அவர் தான் காரணம் என்று கண்ணீர் மல்க பேசினார்.
Sorry, no posts matched your criteria.