India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அமைச்சர் நேரு தொடர்புடைய இடங்களில் ED நடத்திய ரெய்டில் அரசு துறையில் கோடிக்கணக்கில் மோசடி நடந்திருப்பதாக தகவல் வெளியானது. இதனால் அரசியல் தலைவர்கள் அட்டாக் மோடில் இறங்க அறிவாலயம் அதிர்ந்துபோனது. இந்நிலையில், ED-யின் ஹிட் லிஸ்டில் மேலும் பல அமைச்சர்கள் இருக்கின்றனராம். அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர் பாபு, சக்கரபாணி, மூர்த்தி, அன்பில் மகேஷ் ஆகியோர் ED-யின் ரேடாரில் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2 நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹90,000-க்கும், கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹11,250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்ததன் எதிரொலியாக, நம்மூரிலும் உயர்ந்துள்ளது.

பிஹாரின் பரசட்டி பகுதியில் மர்ம நபர்கள் தனது கார் மீது கல்லெறிந்து தாக்கியதாக MLA-வும், NDA வேட்பாளருமான ஜோதி மாஞ்சி குற்றம்சாட்டினார். இதனால் காயமடைந்ததாக அவர் போலீஸில் புகாரளிக்க, விசாரணையும் தொடங்கியது. ஆனால், தாக்குதல் நடந்ததற்கான தடையமே இல்லை என போலீஸ் கூறியுள்ளனர். பாஜக இவ்விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியலில் அடுத்த சில வாரங்களில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போவதாக அன்புமணி தெரிவித்துள்ளார். தேர்தலின்போது பணத்தை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கி வெற்றிபெறலாம் என கணக்குப்போடும் திமுகவுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும்; 2026-ல் திமுக தோற்கடிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். அன்புமணியின் இந்த பேச்சு மூலம் விரைவில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிபர் டிரம்ப் அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். தொடர்ந்து ரஷ்யாவும், அமெரிக்காவும் மாறி மாறி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் அணு ஆயுத சோதனைகளுக்கான திட்டங்களை தயாரிக்க தனது உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ரஷ்யா ஒருவேளை அணு ஆயுத சோதனையை நடத்தினால், கடந்த 35 ஆண்டுகளாக உள்ள உலகளாவிய அணு ஆயுத சோதனைக்கான தடையை உடைத்துவிடும்.

NEP-ஐ தமிழ்நாடு எதிர்த்து வருவதோடு, தனியாக மாநில கல்விக்கொள்கையும் வடிவமைத்து வெளியிட்டது. இந்த TSEP-ஐ பின்பற்றி பாடத்திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில், ISRO தலைவர் நாராயணன் உள்ளிட்ட 13 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். பாட வல்லுநர்கள் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

பிஹாரில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி முழு உற்சாகத்துடன் வாக்களிக்குமாறு பிஹார் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்முறை வாக்காளர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இதனிடையே, நேற்று ராகுல் காந்தி வாக்குத் திருட்டை முறியடித்து, விழிப்புடன் செயல்பட்டு பிஹாரின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து லட்சக்கணக்கான குடும்ப தலைவிகள் காத்திருக்கின்றனர். இதில், எத்தனை பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், குறைந்தது 3 லட்சம் பெண்களுக்கு புதிதாக மகளிர் உரிமைத்தொகை ₹1000 வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

SA அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படாததால், நெட்டிசன்கள் BCCI-யை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ரஞ்சி தொடரில் 3 ஆட்டங்களில் ஷமி 15 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும் அடங்கும். உடல் தகுதி & பார்மை நிரூபித்த பிறகும், ஏன் ஷமியை தேர்ந்தெடுக்கவில்லை என்ற விமர்சனம் சோஷியல் மீடியாவில் அதிகரித்துள்ளது. ஷமிக்கு வாய்ப்பு அளித்திருக்கணுமா?

ரத்தம், அதீத Violence இல்லாத ஒரு ரஜினி படம் 2027 பொங்கலுக்கு ரிலீஸாகும் என கூறப்படுகிறது. காமெடி, சென்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகப்போகும் ரஜினி- சுந்தர்.சி படத்திற்கு யார் இசையமைப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. பலரும் ஹிப்ஹாப் தமிழாவை கொண்டுவந்தால், சூப்பராக இருக்கும் என்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க.. இந்த படத்துக்கு யார் கரெக்ட்டான இசையமைப்பாளராக இருப்பாங்க?
Sorry, no posts matched your criteria.