India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால், நூற்றுக்கணக்கான பெண்களுடன் தொடர்பில் இருந்த வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், கர்நாடகாவில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. இதனால், பிரஜ்வால் விவகாரம் கர்நாடக தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனத் தெரிகிறது. கர்நாடகாவில் பாஜக-மஜத இணைந்து போட்டியிட்டது.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் NDA (பாஜக) கூட்டணி 26 தொகுதிகள் வரை வெல்லும் என கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. இதற்கு பெங்களூருவில் நிலவும் தண்ணீர் பஞ்சம், காங்கிரஸ் அமைச்சர்கள் சிலர் மீதான ஊழல் புகார் போன்றவை காரணமாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.
*1896 – கம்பியில்லாத் தந்தியை கண்டுபிடித்ததற்கான காப்புரிமத்தை மார்க்கோனி பெற்றார்.
*1964 – பாலஸ்தீன விடுதலை இயக்கம் அமைக்கபட்டது.
*1966 – நாசாவின் சர்வெயர் 1 விண்கலம் சந்திரனில் இறங்கியது.
*1999 – பூட்டானில் முதல் முறையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
*2014 – இந்தியாவின் 29-வது மாநிலமாக தெலங்கானா அறிவிக்கப்பட்டது.
டெல்லியிலுள்ள 7 தொகுதிகளில் 6இல் பாஜக வெல்லும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் ஊழல் புகாரில் கைதானது, காங்கிரஸை எதிர்த்த ஆம் ஆத்மி, தற்போது அதனுடன் கூட்டணி அமைத்துள்ளது போன்றவை, INDIA கூட்டணி தோல்வியடைய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும், டெல்லியில் நடைபெற்ற G20 உச்சி மாநாடு போன்ற நடவடிக்கைகள், பாஜகவுக்கு வாக்கு கிடைக்க உதவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியானது. இதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணி 350 தொகுதிகளில் வெல்லும் என தெரிவித்துள்ளன. ஒருவேளை பாஜக மீண்டும் 3ஆவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தால் காங்கிரஸின் இளந்தலைவர் ராகுல்காந்தியின் அரசியல் வாழ்க்கைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
பாஜக கூட்டணியை வீழ்த்த, காங்., ஆம் ஆத்மி உள்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்து INDIA கூட்டணியை உருவாக்கின. ஆனாலும், 3ஆவது முறையாக பாஜக ஆட்சி அமையும் என கருத்துக்கணிப்புகள் வெளிவந்துள்ளன. இதற்கு, எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்படாததே காரணம் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். மேலும், சில மாநிலங்களில் INDIA கூட்டணியில் உள்ள கட்சிகளே தனித்து போட்டியிட்டதும் காரணமாக கூறப்படுகிறது.
▶குறள் பால்: பொருட்பால்
▶இயல்: நட்பியல்
▶அதிகாரம்: பெண்வழிச்சேறல்
▶குறள்: மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது.
▶பொருள்: கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, பாஜக மீண்டும் வென்றால் அது மோடி அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படும். குறிப்பாக, உலகளவில் இந்தியா, 5ஆவது பெரிய பொருளாதார நாடு, டிஜிட்டல் பரிவர்த்தனையில் முதலிடம், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு காரணங்களால் வெற்றி வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளதாக பார்க்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
3வது முறையாக பாஜக ஆட்சி அமையும் என கருத்துக்கணிப்புகள் கூறியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபடவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, தேர்தல் பத்திரம் மூலம் ஊழல், பெரு முதலாளிகளுக்கு பாஜக உதவுகிறது, CBI, EDஐ வைத்து மிரட்டுகிறது போன்ற பல்வேறு புகார்கள் முன் வைக்கப்பட்டன. ஆனால் அது எதுவுமே எதிர்க்கட்சிகளுக்கு கை கொடுக்கவில்லை என்கிறது கருத்துக்கணிப்பு முடிவுகள்.
இந்தியாவை பாஜக, காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி செய்து வருவதைப்போல, தமிழகத்தில் திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இந்த 2 திராவிட கட்சிகளுக்கும் மாற்றாக தமிழகத்தில் வேறெந்த கட்சியும் வளரவில்லை. இதற்கு MGR, கருணாநிதி, ஜெயலலிதா போன்ற, மறைந்த மூத்த தலைவர்கள் காரணம் என்றாலும், தங்களது தேவைகளை திமுக, அதிமுக நிறைவேற்றுவதாக மக்கள் கருதுவதே முக்கிய காரணம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sorry, no posts matched your criteria.