India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னையில் திமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு நடத்தி வருகிறார். அப்போது, 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கட்டாயம் வெற்றிபெற்றே ஆகவேண்டும். தோல்வி அடைந்தால், மாவட்ட செயலாளர்கள் உட்பட அனைவரது பதவிகளும் பறிக்கப்படும் என்று நெல்லை உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தேர்தல் பணியை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் எதிரொலியாக, கட்சி கூட்டங்களுக்கு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் பேட்டியளித்த ஜெயக்குமார், கூட்டத்திற்கு CM, DCM ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சியில் விருப்பு, வெறுப்பின்றி பிற கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கூறிய அவர், திமுக ஆட்சியில் நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார்.

பிரபல கன்னட நடிகர் ஹரிஷ் ராய் சற்றுமுன் காலமானார். கே.ஜி.எஃப்-ல் காசிம் சாச்சா என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானார் ஹரிஷ் ராய். அதன்பின், அவரை ‘சாச்சா’ என்று ரசிகர்கள் அன்புடன் அழைத்து வந்தனர். இந்நிலையில், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகத்தினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

விமான பயணிகளின் புகார்களை தொடர்ந்து, டிக்கெட் ரத்து மற்றும் பணத்தை திருப்பி அளிக்கும் நடைமுறைகளை மாற்றியமைக்க, DGCA புதிய வரைவு விதிகளை முன்மொழிந்துள்ளது. குறிப்பாக விமான டிக்கெட் முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள் எந்த கூடுதல் கட்டணமும் இன்றி டிக்கெட்டை ரத்து செய்ய அல்லது மாற்ற முன்மொழியப்பட்டுள்ளது. இது குறித்து மக்களின் கருத்துகளை பெற்ற பின், நவ.30-க்கு பிறகு விதிகள் இறுதி செய்யப்படும்.

தவெக பொதுக்குழுவில் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்பட்ட நிலையில், அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சை தொடங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டிடிவியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தவெக எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதா என்பதை பொதுவெளியில் சொல்ல முடியாது என்று பதிலளித்தார். மேலும், விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமையும்; அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா- ரஷ்மிகா மந்தனா இருவருக்கும் கடந்த அக்டோபர் 3-ம் தேதி, நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக கூறப்பட்டது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பே இன்னும் வெளியாகாத நிலையில், அவர்களின் திருமண தேதி குறித்த தகவலும் வெளிவந்துவிட்டது. அடுத்த வருடம், பிப்ரவரி 26-ம் தேதி, ராஜஸ்தானின் உதய்பூர் மாளிகையில் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

USA-வில் டிரம்ப் ஆட்சி அமைந்து ஓராண்டு ஆகிறது. இதனை கொண்டாடிய டிரம்ப், தான் வெற்றி பெற்றதன் மூலம் USA-வில் சுயாட்சி மீட்டெடுக்கப்பட்டதாக பேசியுள்ளார். அத்துடன், இந்த ஆட்சியும் மக்களும், பொருளாதாரத்தை காப்பாற்றி, சுதந்திரத்தை மீட்டதன் மூலம், நாட்டையே ஒன்றிணைந்து காப்பாற்றினோம் என தெரிவித்தார். மேலும், நியூயார்க்கில் குடியரசுக் கட்சி தோல்வியடைந்தது குறித்து கவலைப்பட தேவையில்லை என்றார்.

உலகக்கோப்பை தொடரில் பாதியில் இருந்து வெளியேறிய பிரதிகா ராவலுக்கு ஏன் பதக்கம் தரவில்லை என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இந்த சூழலில்தான், நேற்று PM மோடியுடன், இந்திய அணியினர் சந்திப்பு நடைபெற்றது. அதில், பிரதிகா ராவலும் இடம் பெற்றிருந்தார். அப்போது அவரும் மெடலுடன் இருந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், PM மோடியும் அடிக்கடி தொலைபேசியில் பேசுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்பில், இரு நாடுகளின் வர்த்தக குழுக்களும், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து தீவிர விவாதங்களில் ஈடுபட்டு வருவதாக வெள்ளை மாளிகை செய்தி செயலாளர் கரோலின் லீவிட் குறிப்பிட்டார். டிரம்ப், மோடி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசியலில் சில தவறுகளை தான் செய்துவிட்டதாக ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். தான் செய்த தவறுகளில் ஒன்று அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது; மற்றொன்று கட்சித் தலைவர் பதவியை அவரிடம் கொடுத்தது. அன்புமணியின் பேச்சும், செயலும் அருவருக்கத்தக்கதாக உள்ளதாக சாடிய அவர், அன்புமணி கும்பல் பற்றி பேசினால் என் வளர்ப்பு சரியில்லை என்பீர்கள்; அங்கு உள்ள எல்லோரும் நான் வளர்த்த பிள்ளைகள்தான் என மனம் உடைந்து பேசினார்.
Sorry, no posts matched your criteria.