India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பரபரப்பான சமூக சூழலில், மக்களிடையே மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பல்வேறு செயல்பாடுகள் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். *ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் தியானம் செய்யலாம். *மனதுக்கு நெருக்கமானவர்களுடன் நேரத்தை செலவிடலாம். *ஓவியம் வரைதல், இசை கருவிகள் வாசித்தல் போன்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். *நல்ல புத்தகங்களை வாசிக்கலாம்.
வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நட்டா இல்லத்தில் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவிற்கு சாதகமாக வெளியான நிலையில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல் உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் முடிவுக்குப் பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதாகத் தெரிகிறது.
இங்கிலாந்தில் அடமானம் வைத்து மீட்கப்பட்ட 100.28 டன் தங்கம், மீண்டும் இந்தியாவிற்கே கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது நிலவும் பல்வேறு சர்வதேச பிரச்னைகள் காரணமாக, அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் மூலம், பேங்க் ஆஃப் இங்கிலாந்துக்கு இந்தியா செலுத்தி வந்த லாக்கர் செலவு குறையும். தற்போது, இந்தியாவுக்கு சொந்தமாக 822 டன் தங்கம் உள்ளது. இதில், 413.9 டன் தங்கம் வெளிநாடுகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தி.மலை, குமரி, நெல்லை, தேனி, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கைக்கு சில மணி நேரமே இருக்கும் நிலையில், INDIA கூட்டணித் தலைவர்களுக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்புகள் பாஜகவிற்கு சாதகமாக வந்தாலும், அதில் மாற்றம் ஏற்படலாம். ஒருவேளை தொங்கு நாடாளுமன்றம் அமையும் பட்சத்தில் பிரச்னை வெடிக்க வாய்ப்புள்ளது. அப்படியொரு சூழல் நிலவினால், உடனே முடிவெடுக்க, கூட்டணித் தலைவர்களை காங்., அழைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கை பிரிந்துவிட்டதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வந்தது. தங்களுடைய திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நடாஷா நீக்கியது, இந்த தகவலை உறுதிபடுத்தும் விதமாக அமைந்தது. இந்த சூழலில், அந்த புகைப்படங்களை மீண்டும் பதிவேற்றியுள்ளார் நடாஷா. இதன் மூலம், இருவரும் திருமண உறவில் நீடித்து வருவதை சூசகமாக உறுதி செய்துள்ளனர்.
பெங்களூருவில் நடந்த போதை விருந்தில் பங்கேற்ற வழக்கில், தெலுங்கு திரைப்பட நடிகை ஹேமாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். பண்ணை வீட்டில் மே 19ஆம் தேதி நடந்த சோதனையில் 150க்கும் மேற்பட்டோர் சிக்கினர். போதை விருந்தில் ஹேமாவும் பங்கேற்றதாக தகவல் வெளியான நிலையில், அவர் அதை மறுத்து வந்தார். அவருக்கு நடத்திய சோதனையில் போதை பொருள் உட்கொண்டது உறுதியானதை அடுத்து, கைது செய்யப்பட்டுள்ளார்.
நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், INDIA கூட்டணியின் மூத்த தலைவர்கள் அனைவரும் நாளை மறுநாள் வரை டெல்லியில் தங்கியிருக்க காங்., அழைப்பு விடுத்துள்ளது. தேர்தல் முடிவுக்குப் பின் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், முடிவில் குளறுபடி இருந்தால் குடியரசுத் தலைவரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தேவை ஏற்பட்டால் ஆர்ப்பாட்டம் நடத்த தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
T20 உலகக் கோப்பைக்காக மொத்தம் ₹93,51,23,062 கோடி பரிசுத் தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் வெற்றிபெறும் அணிக்கு ₹20.3 கோடியும், 2ஆம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ₹10.6 கோடியும் பரிசாக வழங்கப்படும். அரையிறுதியில் தோல்வியடைந்த அணிகளுக்கு தலா ₹6.5 கோடி, இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்த அணிகளுக்கு தலா ₹3.1 கோடி, 9 -12ஆவது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா 2 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும்.
நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, தாம்பரம் ரயில் நிலையத்தில், நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடையவர்கள் ₹4 கோடி எடுத்து சென்ற போது பிடிபட்டது. இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்துக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்த சம்மனை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.