India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நினைத்த நேரத்தில் பையை எடுத்துக்கொண்டு பறக்க வேண்டுமா? பாஸ்போர்ட் இருந்தால் போதும், விசா தேவையில்லை. இது உங்களுக்கு தெரியுமா? உலகின் சில நாடுகளுக்கு, இந்தியர்கள் விசா இல்லாமல் எளிதாக பயணிக்கலாம். அவை எந்தெந்த நாடுகள் என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்கள் எந்த நாட்டுக்கு பறக்க போறீங்க. கமெண்ட்ல சொல்லுங்க.

வார விடுமுறையில் மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல சுமார் 1,000 சிறப்பு பஸ்களை TNSTC அறிவித்துள்ளது. அதன்படி, நாளை(நவ.7) முதல் 9-ம் தேதி வரை சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட இடங்களிலும், கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் இருந்தும் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. www.tnstc.in இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்தும் பயணிக்கலாம். SHARE IT.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிஹார் தேர்தலில், மதியம் ஒரு மணி வரை, 42.31% வாக்குகள் பதிவாகியுள்ளன. வழக்கத்தை விட இம்முறை பிஹார் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருவதை வாக்குப்பதிவு சதவீதம் தெளிவாக காட்டுகிறது. அதிகபட்சமாக கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 46.73% வாக்குகள் பதிவாகியுள்ளதாக EC தெரிவித்துள்ளது. பிஹாரில் முதற்கட்டமாக 121 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

பல்வேறு மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. குறிப்பாக, திருவள்ளூர், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி, திருப்பத்தூர், விழுப்புரம், தி.மலையில் இடியுடன் மழையும், கள்ளக்குறிச்சி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய உதவித்தொகை திட்டம் மூலம் கணவனை இழந்து வாடும் பெண்களுக்கு மாதந்தோறும் ₹1,200 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் பெண்களின் வயது 60-க்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ₹1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடாது. கிராம பஞ்சாயத்து (அ) மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பியுங்கள். பல பெண்களுக்கு பயனுள்ள இத்தகவலை SHARE பண்ணுங்க.

தான் ஆட்சிக்கு வந்தால் தண்ணீரை காசுக்கு விற்பதற்கும், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கும் தடை விதிப்பேன் என சீமான் கூறியுள்ளார். உணவு, காற்று, நீர் என அனைத்திலும் விஷம் கலந்திருப்பதாக கூறிய அவர், சுற்றுச்சூழலை காப்பதை விட்டுவிட்டு மரங்கள் மாநாட்டை நடத்தியதற்காக தன்னை கலாய்க்கின்றனர் என பேசியுள்ளார். மேலும், பிறந்த குழந்தைகளுக்கும் புற்றுநோய் வருவதாக கூறி வருத்தம் தெரிவித்தார்.

கரூர் துயரத்தை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், பேரணிகளுக்கு அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. கட்சி கூட்டம் நடத்துவதற்கு குறைந்தபட்சம் 5 நாளுக்கு முன் அனுமதி வழங்கப்படும்; அரசியல் கூட்டங்கள் நடத்த அரசியல் கட்சிகளிடம் ₹1-₹20 லட்சம் வரை வைப்பு தொகை வசூலிக்கப்படும். ரோடு ஷோ நடத்த உள்ள வழித்தடம், உரை நிகழ்த்த உள்ள இடம் குறிப்பிட பட வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

2026 தேர்தலில் வாய்ப்பு இருந்தால், திமுக கூட்டணியில் போட்டியிடுவோம் என்று, தனியரசு தெரிவித்துள்ளார். 2016 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து MLA ஆனவர் தனியரசு. சமீபமாக திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் இவர், இன்று CM ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். பின்னர் பேட்டியளித்த அவர், பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படும் அதிமுக, மேற்கு மண்டலத்தில் வலுவாக இல்லை என்றும் விமர்சித்தார்.

நாட்டிலேயே மதுபானத்துக்கு ’வீரன்’ என பெயர் வைத்து, அதை டாஸ்மாக்கில் விற்பனை செய்தது தமிழ்நாட்டில் மட்டுமே தான் என சீமான் விமர்சித்துள்ளார். இவையெல்லாம் பைத்தியக்காரத் தனமாக இருப்பதாக கூறிய அவர், வீரன் என்ற பெயரை TN அரசு இழிவுபடுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இதை காலக்கொடுமை என சுட்டிக்காட்டிய அவர், தமிழ் வளர்க்கும் மாநிலமா இப்படி செய்வது என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான 4-வது T20-யில் டாஸ் வென்ற ஆஸி., அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. 3-வது போட்டியில் விளையாடிய அணியே தொடருகிறது. பிளேயிங் XI: அபிஷேக் சர்மா, கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஜிதேஷ், துபே, அக்சர், சுந்தர், அர்ஷ்தீப், வருண் சக்கரவர்த்தி, பும்ரா.
Sorry, no posts matched your criteria.