India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தெலுங்கு தேசம் 16 இடங்களிலும், ஜேடியூ 14 இடங்களிலும் என 2 கட்சிகளும் 30 இடங்களில் முன்னிலையில் இருப்பதன் காரணமாகவே பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பாஜக தனித்து 243 இடங்களில் மட்டுமே முன்னிலையில் வகிப்பதால் பெரும்பான்மைக்கு மேலும் 30 இடங்கள் தேவை என்ற நிலை உள்ளது. பாஜக ஆட்சியமைப்பதை தடுக்க ஜேடியூ, தெலுங்கு தேசம் கட்சிகளை இழுக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. எனினும், அது பலனளிப்பதாக தெரியவில்லை.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுகவின் நட்சத்திர வேர்பாளர் கனிமொழி 2,83,690 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் அதிமுக 2ஆவது இடத்தையும், பாஜக கூட்டணி வேட்பாளரை பின்னுக்கு தள்ளி நாம் தமிழர் கட்சி 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளர் முரசொலி 4,12,859 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து களம் கண்ட தேமுதிக வேட்பாளர் சிவநேசன் 1,53,441 வாக்குகளும், பாஜக வேட்பாளர் முருகானந்தம் 1,45,080 வாக்குகளும் பெற்று தோல்வியை தழுவியுள்ளனர்.
விஜய பிரபாகரன் வெற்றிபெற வேண்டி, விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா தியானம் செய்தார். மக்களவைத் தேர்தலில், அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்துள்ளது. விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட்டு இருந்தார். அவருக்கும், காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செய்த அவர், அங்கு சிறிது நேரம் தியானம் மேற்கொண்டார்.
கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் முன்னாள் முதல்வரும், மஜத தலைவருமான ஹெச்.டி. குமாரசாமி போட்டியிட்டார். அவருக்கு 8,51,881 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெங்கடரமண கவுடா 5,67,261 வாக்குகளை மட்டுமே பெற்றார். இதனால் குமாரசாமி 2,84,620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தருமபுரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் மணியிடம் பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி கடும் போராட்டத்திற்கு மத்தியில் தோல்வியடைந்தார். காலையில் இருந்து சவுமியாவும், மணியும் மாறிமாறி முன்னிலை பெற்று வந்த நிலையில், திடீர் திருப்பமாக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் சவுமியா தோல்வியடைந்தார்.
அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் உள்ள ஒரே மக்களவைத் தொகுதியில் பாஜக முன்னிலை பெற்றுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 43,058 வாக்குகளை பெற்றுள்ள பாஜக வேட்பாளர் பிஷ்ணு பதாரே, காங்கிரஸின் குல்தீப் ராய் ஷர்மாவைவிட 21,996 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். புதுச்சேரி (1) & லட்சத்தீவுகளில் (1) காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
திமுக கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சிக்கு மக்கள் அளித்திருக்கும் பரிசாகவே இந்த வெற்றி கருதப்படுகிறது. குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட திட்டங்கள் சாமானிய மக்களை வெகுவாகச் சென்றடைந்துள்ளது. அதன் காரணமாகவே 20 ஆண்டுகளுக்கு (2004) பிறகு, 39 தொகுதிகளிலும் திமுகவுக்கு வெற்றியைக் கொடுத்துள்ளனர்.
காங்கிரஸ் மூத்தத் தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை மற்றும் நியாய யாத்திரைகளை மேற்கொண்டார். அப்போது மக்கள் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் அதன் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதை முன்னிறுத்தியே காங்கிரஸ் பிரசாரம் செய்தது. தற்போது அக்கட்சி அதிக இடங்களில் வென்றிருப்பது, ராகுலின் யாத்திரைகளுக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
மோடியை முன்னிறுத்தி கடந்த 2 தேர்தல்களில் போட்டியிட்டு பாஜக வென்றது. இந்தத் தேர்தலிலும் மோடியை முன்னிறுத்தியே பாஜக களமிறங்கியது. இதனால் 400க்கும் மேல் வெல்வோம் என மோடி துணிச்சலாக கூறி வந்தார். இதைகேட்ட மக்களும், உண்மையாக இருக்குமோ என நினைத்தனர். ஆனால், 293 தொகுதிகளில் மட்டுமே பாஜக கூட்டணி முன்னிலை வகிப்பதால், மோடி மீதான இமேஜ் சரிந்து விட்டதா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Sorry, no posts matched your criteria.