India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 450க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பப் பதிவு கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 2.35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், 1.87 லட்சம் பேர் கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் <
பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்னதாக, அமைச்சரவைக் கூட்டத்தில் மோடி பங்கேற்றார். அப்போது, வெற்றியும், தோல்வியும் அரசியலில் ஒரு அங்கம் எனவும், கடந்த 10 ஆண்டுகளில் பாஜக சிறப்பாக பணியாற்றி இருப்பதாகவும், வரும் காலங்களிலும் அதைத் தொடர்வோம் என தெரிவித்ததாக, தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்த பாஜக, இம்முறை ஆட்சி அமைக்க கூட்டணியை நம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் INDIA கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெறாத நிலையில், எந்த மாதிரியான முடிவு இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. என்டிஏ கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்படுமா? அல்லது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து ஆட்சிக்கு நெருக்கடி தரலாம் என்று முடிவு எடுக்கப்படுமா? என்பது சில மணி நேரங்களில் தெரிய வரும்.
7 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. தமிழ்நாடு, பஞ்சாப், சிக்கிம், மேகாலயா, மிசோராம், நாகலாந்து, மணிப்பூர், புதுவை மற்றும் சண்டிகரில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றிபெறவில்லை. தமிழகத்தில் திமுக தலைமையிலான INDIA கூட்டணி 39 இடங்களிலும், பஞ்சாப்பில் உள்ள 13 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் 7, ஆம் ஆத்மி 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.
ஒடிஷாவில் தனிப்பெரும்பான்மை பெற்ற பாஜக, முதல்முறையாக ஆட்சியமைக்க உள்ளது. முதல்வர் பதவிக்கான ரேஸில் அம்மாநில பாஜக மூத்த தலைவர்கள் இடையே கடும் போட்டி நிலவுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தேசிய துணைத் தலைவர் வைஜெயந்த் பாண்டா, அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஜுவல் ஓரம், சம்பித் பத்ரா ஆகியோர் இந்த ரேஸில் உள்ளனர். இவர்கள் அனைவரும் மக்களவைத் தேர்தலில் வென்றது குறிப்பிடத்தக்கது.
மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைய சுயேச்சை, சிறு கட்சிகளை சேர்ந்த மேலும் 10 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 240 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி கட்சிகளை பாஜக நம்பியிருக்கிறது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 10 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். இது பாஜகவுக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாள்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. நாளை மறுநாள் 835 பேருந்துகளும், 8ம் தேதி 570 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதேபோல் சென்னை திரும்ப வசதியாக 9ம் தேதி 705 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தெரிவித்தார்.
2026இல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில் வாங்கிய வாக்குகளை விட 6% குறைவாக வாங்கிய திமுக, 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்றதாக கூறுவது நகைப்பை ஏற்படுத்துவதாக கூறிய அவர், வரும் தேர்தலில் 30% வாக்குகளை பெற்று ஆட்சியில் அமருவோம் என்றார். நோட்டா கட்சி என்று பாஜகவை விமர்சித்த அதிமுகவுக்கு தற்போது புத்தி வந்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
இடைக்கால ஜாமினை நீட்டிக்கக்கோரிய டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மனுவை ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜூன் 2 வரை உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியிருந்த நிலையில், உடல் நிலை காரணமாக அதனை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க கோரி கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்றம் கீழமை நீதிமன்றத்திடம் முறையிட அறிவுறுத்தியிருந்த நிலையில், அந்த மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் இன்று நடைபெறும் T20 WC லீக் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட், நாக்-அவுட் போட்டிகளில் தாங்கள் வெற்றிக் கோட்டை கடக்கவில்லை என்பது உண்மைதான் என்றும், இந்த முறை உலகக்கோப்பையை நிச்சயம் வெல்லும் அணியை பெற்றுள்ளதாகவும், தங்களது அனுபவம் அதற்கு உதவும் எனவும் உறுதியுடன் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.