News June 9, 2024

நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்: ராகுல்

image

நீட் வினாத்தாள் கசிந்ததை அரசு தொடர்ந்து மறுத்து வருவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், நீட் தேர்வு முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என்றும், இளைஞர்களின் குரல் நசுக்கப்படுவதை ஏற்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா கூட்டணி மீது இளைஞர்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், முறைகேட்டை அரசு மறுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

News June 9, 2024

மாநிலங்களவையில் இருந்து முதலில் பிரதமரானவர் யார்?

image

இந்திரா காந்தி நாட்டின் பிரதமராக 3 முறை பதவி வகித்துள்ளார். அவரது காலத்திலேயே வங்கதேச விடுதலைப் போர் நடைபெற்றது. அப்போரில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்து, வங்கதேசத்துக்கு விடுதலை பெற்றுத் தந்தது. அவரே இந்தியாவின் முதல் பெண் பிரதமரும் ஆவார். இதுபோல பல பெருமைகளுக்கு சொந்தகாரரான இந்திரா காந்தியே மாநிலங்களவையில் இருந்து பிரதமரான முதல் எம்பி என்ற பெருமையை கொண்டுள்ளார்.

News June 9, 2024

7,000 ஜாம்பி நிறுவனங்களால் நெருக்கடி ஏற்படும்

image

கடனில் சிக்கி, வட்டி கட்ட முடியாமல் மோசமான நிதி நிலையில், தவிக்கும் நிறுவனங்கள் ‘ஜாம்பி நிறுவனங்கள்’ என அழைக்கப்படுகின்றன. உலகளவில் கடந்த 10 ஆண்டுகளில், இத்தகைய
நிறுவனங்களின் எண்ணிக்கை 7,000 ஐ எட்டியுள்ளதாக (கடன் மதிப்பு $1.1 டிரில்லியன்) எனக் கூறப்படுகிறது இந்த நிறுவனங்களை கடனில் இருந்து மீட்கவில்லையென்றால், கடும் வேலைவாய்ப்பின்மை நெருக்கடி ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

News June 9, 2024

தேநீர் விருந்தில் கலந்து கொண்டவர்கள்

image

மோடி 3.0 அமைச்சரவையில் பங்கேற்கும் புதிய அமைச்சர்களுக்கு தனது இல்லத்தில் தேநீர் விருந்து அளித்து வருகிறார் மோடி. இதில், அமித் ஷா, ஜெ.பி.நட்டா, ராஜ்நாத் சிங், சிவராஜ் சிங் சவுஹான், நிர்மலா சீதாராமன், ஜெய்ஷங்கர், ஜோதிராதித்ய சந்தியா, பியூஷ் கோயல், குமாரசாமி, சிராக் பாஸ்வான், கிரண் ரிஜிஜு, மனோகர் லால் கட்டார் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுள் பெரும்பாலானோர் அமைச்சர்களாக இருக்கலாம்.

News June 9, 2024

6 மாத விடுப்பில் சென்ற வி.கே.பாண்டியனின் மனைவி

image

ஒடிஷாவில் படுதோல்வியை சந்தித்த பின், முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் மூளையாக செயல்பட்ட வி.கே.பாண்டியன், பொதுவெளிக்கு வரவே இல்லை என கூறப்படுகிறது. டெல்லியில் தங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், அவரது மனைவியும், ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா கார்த்திகேயன், தற்போது பணியில் இருந்து 6 மாத விடுப்பில் சென்றுள்ளார். 10ஆம் வகுப்பு தேர்வு எழுதப்போகும் தனது மகளை கவனித்து கொள்ள விடுப்பு எடுத்துள்ளார்.

News June 9, 2024

பிரதமருக்கு அரசியலமைப்பு வழங்கிய அதிகாரங்கள் என்ன?

image

மக்களாட்சி நாட்டில் பிரதமரே முக்கிய முடிவுகளை எடுத்து செயல்படுத்துவார். அவருக்கென சில தனி அதிகாரம் அரசியலமைப்பு சட்டம் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. அவை என்னென்ன? *மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு தலைமை தாங்கும் அதிகாரம் *அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் *அமைச்சரவை குழுக்களை நியமிக்கும் அதிகாரம் *சர்வதேச மாநாடுகளில் இந்திய பிரதிநிதியாக பங்கேற்கும் அதிகாரம்.

News June 9, 2024

தமிழக பாஜகவில் வலுக்கும் மோதல்

image

தமிழக பாஜகவுக்குள் குற்றப் பின்னணி கொண்டோருக்கு பதவி வழங்கப்படுவதாக தமிழிசை சௌந்தரராஜன் கூறிய குற்றச்சாட்டுக்கு கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. அண்ணாமலை ஆதரவாளரான திருச்சி சூர்யா, தமிழிசையை சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழிசை, அண்ணாமலை இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

News June 9, 2024

கேபினட் அமைச்சர், இணை அமைச்சர் என்ன வித்தியாசம்?

image

மத்திய அமைச்சரவையில் கேபினட், இணை, துணை என 3 வித அமைச்சர்கள் இருப்பார்கள். இந்த 3 அமைச்சர்களும் அமைச்சரவைக்கு தலைவர் என்ற முறையில் பிரதமருக்கு கட்டுப்பட்டவர்கள் ஆவர். மூத்த தலைவர்களும், அனுபவசாலிகளுமே கேபினட் அமைச்சராக நியமிக்கப்படுவர். அவர்களின் ஆலோசனைகளை பிரதமர் கேட்பதுண்டு. கேபினட் அமைச்சர் எண்ணிக்கை 20 வரையும், மற்ற அமைச்சர் எண்ணிக்கை 70 வரையும் இருக்கலாம்.

News June 9, 2024

கோலியின் அனுபவத்தை முறியடிக்க முடியாது: ரோஹித்

image

பயிற்சி ஆட்டத்தில் விளையாடாவிட்டாலும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு தயாராக கோலிக்கு போதுமான நேரம் கிடைத்ததாக ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். சர்வதேச அளவிலான போட்டிகளில், விளையாடிய அனுபவம் மிக்க வீரராக கோலி இருப்பதாகக் கூறிய அவர், யாராலும் அதை முறியடிக்க முடியாது என்றார். அத்துடன், இந்திய அணியில் உள்ள யாருக்கும் தான் அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

News June 9, 2024

பிரஜ்வாலின் காதலிக்கு நோட்டீஸ்

image

கர்நாடக மாநிலத்தை அதிர வைத்த பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜேடிஎஸ் முன்னாள் எம்பி பிரஜ்வால் ரேவண்ணாவின் காதலிக்கு எஸ்.ஐ.டி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஏப்ரல் 26ஆம் தேதி ரேவண்ணா நாட்டை விட்டு ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார். அங்கு, அவருக்கு பிரஜ்வாலின் காதலி உதவியதை போலீசார் கண்டறிந்தனர். இந்த வழக்கில் எஸ்.ஐ.டி விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

error: Content is protected !!