India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமரை காட்டி இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் பிரிக்க முடியாது என்பதை தேர்தல் முடிவு காட்டியுள்ளதாக மஜக தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பாஜகவுக்கு வாக்குகளை குறைந்தும், காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக வாக்குகள் கிடைத்ததாக கூறிய அவர், முதல் தலைமுறை வாக்காளர்கள் INDIA கூட்டணியை விரும்பியதாக அவர் தெரிவித்துள்ளார். அசைக்க முடியாத சக்தி என்ற பாஜகவை மக்களை அசைத்துள்ளனர் என்றார்.
மோடியின் புதிய அமைச்சரவையில் எல்.முருகன், நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்ட 36 இணையமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். ஜார்ஜ் குரியன், ரக்சனா கட்சே, பபித்ரா மார்கிரேட்டா, சுகந்தா மஜூம்தார், அஜய் தம்தா, பண்டி சஞ்சய் குமார், டோகன் சாஹு, கமலேஷ் பாஸ்வான், பகீரத் சவுத்ரி, சதீஷ் சந்திர தூபே, சஞ்சய் தத், ரவநீத் சிங், துர்கா தாஸ், ராஜ் பூஷன் சவுத்ரி, பூபதி ராஜ் சீனிவாஸ், ஜெயந்தி ராய் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் 16.5 ஆண்டுகளாக முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகான் தற்போது முதல் முறையாக மத்திய அமைச்சராகியுள்ளார். ம.பி.,யில் பாஜக சார்பில் அதிக காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்ற அவர், 1991 – 2006 வரை தொடர்ச்சியாக 5 முறை MPயாகவும் இருந்துள்ளார். அதன்பின் ம.பி முதல்வராக பதவி வகித்த அவர், சமீபத்தில் முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று 6வது முறையாக MP ஆகியுள்ளார்.
WC T20 போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்துள்ளது. ரிஷப் பண்ட் மட்டும் நிதானமாக ஆடி 42 ரன்கள் எடுத்தார். மற்ற அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். பாக்., தரப்பில் அபாரமாக பந்து வீசிய நஸீம் ஷா, ஹரிஸ் ரஃப் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
* மேஷம் – மறதி ஏற்படும், *ரிஷபம் – ஓய்வு தேவை, *மிதுனம் – ஆசை உண்டாகும், *கடகம் – ஜெயம் உண்டாகும், *சிம்மம் – கோபம் வரும், *கன்னி – புகழ் உண்டாகும், *துலாம் – தடங்கல் ஏற்படும், *விருச்சிகம் – பகை ஏற்படும், *தனுசு – பணம் வரவு, *மகரம் – அன்பானவர்களை சந்திப்பீர்கள் *கும்பம் – லாபம் கிடைக்கும், *மீனம் – திறமைக்கு மதிப்பு கிடைக்கும்.
மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அரசமைப்பை நிலைநிறுத்த, மதச்சார்பற்ற தன்மையை பராமரிக்கவும், கூட்டாட்சி தத்துவத்தை மேம்படுத்தவும், மாநில உரிமைகளை மதித்து செயல்படுவீர்கள் என நம்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
T20 WC: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 14.2 ஓவரில் 96-7 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித், கோலி சொற்ப ரன்களில் நடையைக் கட்டிய நிலையில், நிலைத்து நின்ற பண்ட் 43 ரன்களில் அவுட் ஆனார். அதனைத்தொடர்ந்து. அக்சர் படேல், சூர்யகுமார் யாதவ், ஜடேஜா என அடுத்தடுத்து வெளியேறினர். பாக்., அணியில் நசீம் ஷா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட 72 பேர் மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். நிதின் கட்காரி, சிவராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், அஷ்வினி வைஷ்ணவ், பியூஸ் கோயல், மனோகர் லால் கட்டார் உள்ளிட்ட பாஜகவைச் சேர்ந்த 61 பேரும், குமாரசாமி, ஜித்தன் ராம் மாஞ்சி, ராம் மோகன் நாயுடு உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்த 11 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் பக்தர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்திற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அவர், இந்த வெட்கக்கேடான தாக்குதல், ஜம்மு காஷ்மீரின் கவலைக்கிடமான பாதுகாப்பற்ற நிலையைக் காட்டுவதாகக் கூறியுள்ளார். மேலும், தீவிரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனால், அவருக்கு பதில் ம.பி., முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் தேசிய தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், திடீர் திருப்பமாக அவரும் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனால், அடுத்த புதிய தலைவர் யார் ( ஆர்.எஸ்.எஸ். காரர்) என்பதில் சஸ்பென்ஸ் உருவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.