India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: பிறனில் விழையாமை
▶குறள் எண்: 148
▶குறள்: பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
▶பொருள்: வேறொருவன் மனைவியைக் தவறான எண்ணத்துடன் பார்க்காத குணம், மிகப்பெரிய அறம் மட்டுமின்றி, அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்.
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். அபாரமாக பந்துவீசிய அவர், 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து ரிஸ்வான், பாபர் அசாம், இஃப்திகார் ஆகிய 3 முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரது அதிரடியான பந்துவீச்சால், தோல்வி விளிம்பில் இருந்த இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில்லிங்கான வெற்றியை பதிவு செய்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, அதிரடியான தொடக்கத்தை கொடுத்தாலும் மிடில் ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி 2 ஓவர்களில் 21 ரன்கள் தேவைப்பட்ட போது, பும்ரா, அர்ஷ்தீப் அபாரமாக பந்துவீசி அணிக்கு மகத்தான வெற்றியைத் தேடித் தந்துள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (அதிகாலை 4 மணி வரை) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று (ஜூன் 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து விதமான சட்டப் போராட்டத்தையும் தமிழக அரசு தொடரும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தாண்டு நீட் தேர்வில் நிறைய குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், இதனால் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களால் கூட அரசு கல்லுாரிகளில் மருத்துவம் படிக்க முடியாமல் போகும் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஓமன் அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், ஸ்காட்லாந்துக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஓமன் அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்தது. மிடில் ஓவர்களில் சற்று சரிவை சந்தித்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 150 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, பிரதிக் 54, அயான் 41 ரன்களும் குவித்தனர். அபாரமாக பந்துவீசிய ஷரீப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இன்று (ஜூன் 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
▶கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு
▶அரசு ஊழியர்களும் இனி காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறலாம்: தமிழக அரசு
▶நீட் வினாத்தாள் கசிந்ததை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது: ராகுல் காந்தி
▶தமிழ்நாட்டில் அரசியல் பணிகளை தொடர உள்ளேன்: அண்ணாமலை
▶மத்தியில் ஒரு வலுவான எதிர்கட்சி அமைந்துள்ளது: ரஜினிகாந்த்
▶கூட்டணி குறித்து விரைவில் விஜய் அறிவிப்பார்: புஸ்ஸி ஆனந்த்
உணவு அருந்தியதும் உடற்பயிற்சி செய்யலாமா? கூடாதா? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு. இதற்கு உடல்நல ஆலோசகர்களும், பயிற்சியாளர்களும் சில ஆலோசனைகளை அளித்துள்ளனர். அதாவது, முழு உணவு அருந்தியதும் 2 முதல் 3 மணி நேரம் காத்திருந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும், நொறுக்குத் தீனி சாப்பிடும்பட்சத்தில், 30-60 நிமிடங்கள் பொறுத்திருந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.