India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சமீபத்தில் விஜய் நடித்த கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு, வசூலை வாரிக் குவித்தது. அந்த வகையில், ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏற்கனவே துப்பாக்கி படம் ரீ ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், விஜய்யின் மற்றொரு சூப்பர் ஹிட் படமான போக்கிரி, வருகிற 21ம் தேதி ரீ ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக வெளியான செய்தி தவறானது என நடிகரும், பாஜக எம்பியுமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். மோடி அமைச்சரவையில் தொடர்வது பெருமை என கூறியுள்ள அவர், இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். சுரேஷ் கோபி நேற்று மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற நிலையில், சினிமாவில் நடிக்க வேண்டியுள்ளதால், பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியானது.

பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடியை அவரது தாயார் ஹீராபென் ஆசீர்வதிப்பது போன்ற எடிட் செய்யப்பட்ட படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 2019இல் மோடியின் பதவியேற்பு விழாவை வீட்டில் இருந்தபடியே, டிவி.,யில் பார்த்து மகிழ்ந்த அவரது தாயார், 2022இல் மறைந்தார். கடந்த முறை நேரில் சென்று தாயிடம் ஆசி பெற்ற மகனை, இம்முறை தாயே பிரபஞ்சத்தின் வழியே ஆசீர்வதிப்பதாகக் கூறி, இப்படத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இதில், ஃபிரான்ஸ் நாட்டின் ஆளுங்கட்சி படுதோல்வியை சந்தித்தது. ஆட்சியில் உள்ள கட்சி, தங்களது வேட்பாளரை வெல்ல வைக்க முடியாத நிலையில், அக்கட்சியின் மீதான மக்களின் நம்பகத்தன்மை குறைந்தது. அதனால், நாடாளுமன்றத்தை கலைத்துள்ள அந்நாட்டின் அதிபர் மேக்ரான், தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தேர்தலில் வென்று மக்களின் நம்பிக்கையை பெறவே அவர் இதை செய்துள்ளார்.

நீட் தேர்வு குளறுபடியை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். நடப்பாண்டு நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, ஒரே தேர்வு மையத்தில் அடுத்தடுத்த பதிவெண்கள் கொண்ட 6 மாணவர்கள் முதலிடம் பிடித்தது போன்ற சர்ச்சைகள் எழுந்தன. இதனை கண்டித்து வள்ளுவர்கோட்டத்தில் நாளை ஆர்ப்பாட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 21 சட்டப்பேரவை தொகுதிகளிலும், 2 மக்களவை தொகுதிகளிலும் வென்றுள்ளது. இதனால், அடுத்த சில மாதங்களுக்கு அவர் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக, தான் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்புகளை அவர் தள்ளி வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தற்போது, ‘ஹரி ஹர வீரமல்லு, ஓஜி, உஸ்தாத் பகத்சிங்’ ஆகிய 3 படங்களில் நடித்து வருகிறார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலாவதாக, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார். இதன் காரணமாக, அம்மாவட்டத்திற்கு அரசு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கக் கூடாது என கூறிய அவர், ஏற்கெனவே செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு
தடை இல்லை என்றும் கூறியுள்ளார். அங்கு ஜூலை 10இல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, நாளை மறுநாள் ஆந்திரா முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கிறார். பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மனைவி லதாவுடன் டெல்லி சென்ற அவர், இன்று ஹைதராபாத் புறப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினியும், சந்திரபாபு நாயுடுவும் 30 ஆண்டுகளுக்கு மேலாக நண்பர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக பெரிதும் எதிர்பார்த்த உ.பி.,யில் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஏற்படுத்தியுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் 5 இடங்களில் மட்டுமே வென்ற சமாஜ்வாதி, இந்த தேர்தலில் 37 தொகுதிகளில் வென்றுள்ளது. இது குறித்து அகிலேஷ் யாதவ் தனது X பதிவில், சில தேர்தல்கள் வரைபடத்தை மாற்றுகின்றன எனக் குறிப்பிட்டு, 2019 & 2024 தேர்தல் வெற்றியை ஒப்பிட்டு காட்டும் படத்தை பகிர்ந்துள்ளார்.

ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் 35.71% பங்குகளை சந்திரபாபு நாயுடுவின் குடும்பம் வைத்துள்ளது. ஆந்திரா சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மெகா வெற்றியை பதிவு செய்த நிலையில், ஹெரிடேஜ் நிறுவனத்தின் பங்குகள் 105% விலை உயர்ந்தன. அந்த வகையில், கடந்த 12 நாள்களில் மட்டும், சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு ₹1,225 கோடி உயர்ந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.