India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*சஞ்சய் சேத் – பாதுகாப்புத்துறை
*ரவனீத் சிங் – உணவு பதப்படுத்துதல்
*துர்கா தாஸ் – பழங்குடியினர் நலன்
*ரக்ஷா நிகில் – விளையாட்டு, இளைஞர் நலன்
*சுகந்தா – கல்வித்துறை
*சாவித்ரி – குழந்தைகள், பெண்கள் நலன்
*தோஹன் சாஹூ – வீட்டுவசதி
*ராஜ்பூஷண் – நீர்வளம்
*பூபதி ராஜு – கனரகத் தொழில்
*ஹர்ஸ் மல்ஹோத்ரா – சாலைப் போக்குவரத்து *நிமூ பென் ஜெயந்தி பாய் – உணவு பொது விநியோகம் *முரளிதர் – விமானப் போக்குவரத்து
*L.முருகன் – தகவல் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரம்
*சுரேஷ் கோபி – பெட்ரோலியம், சுற்றுலா
*எஸ்.பி.சிங் – கால்நடை, பால்வளம்
*ஷோபா – சிறு, குறு, நடுத்தர தொழில்
*கீர்த்தி வர்தன் – வனம், சுற்றுச்சூழல்
*பி.எல்.வர்மா – உணவுத்துறை
*சாந்தனு தாகூர் – கப்பல், துறைமுகம்
*அஜத் தம்தா – சாலைப் போக்குவரத்து
*கமலேஷ் பஸ்வான் – ஊரக வளர்ச்சி *சதீஷ் சந்திரா துபே – நிலக்கரி, சுரங்கம் *ஜார்ஜ் குரியன் – கால்நடை, மீன்வளம்
*ஜிதின் பிரசாதா – வர்த்தகம், தொழில்துறை
*ஸ்ரீபத் யசோ நாயக் – மின்சாரம்
*பங்கஜ் செளத்ரி – நிதித்துறை
*கிருஷ்ணன் பால் – கூட்டுறவுத்துறை
*ராம்தாஸ் அத்வாலே – சமூக நீதி
*ராம்நாத் தாகூர் – வேளாண்மை
*பகிரத் செளத்ரி – வேளாண்மை
*நித்யானந்த ராய் – உள்துறை
*பந்தி சஞ்சய்குமார் – உள்துறை
*அனுப்பிரியா பாட்டீல் – சுகாதாரம் *சோமண்ணா – நீர்வளம், ரயில்வே *சந்திரசேகர் பெம்மசானி – தொலைத்தொடர்பு, ஊரக வளர்ச்சி
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜியை ED கைது செய்தது. சுமார் ஓராண்டாக சிறையில் இருக்கும் அவர், இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தார். இன்று இறுதி வாதங்களை கேட்டறிந்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, ஜூன் 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார். இது செந்தில் பாலாஜி தரப்புக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது..
கங்கனா ரனாவத்தை பெண் காவலர் அறைந்த விவகாரத்தில் இருவர் மீதும் தவறு இருப்பதாக பஞ்சாப் முதல்வர் பகவத் மான் கூறியுள்ளார். டெல்லியில் போராடிய விவசாயிகளை கங்கனா பயங்கரவாதிகள் எனக் கூறியதால், பெண் காவலர் அவரை கோபப்பட்டு அடித்திருக்கலாம். இந்த சம்பவம் நடந்திருக்கக் கூடாதுதான், இருப்பினும் நடிகையோ, எம்.பி.,யோ விவசாயிகள் போராட்டம் நடத்தினால், அவர்களை பயங்கரவாதிகள் என அழைப்பது தவறு என்றார்.
ஆந்திராவில் ஜெகன் மோகன் மீண்டும் முதல்வராவார் என ₹30 கோடி பந்தயம் கட்டிய ஒய்எஸ்ஆர் காங்., நிர்வாகி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விஜயவாடாவை சேர்ந்த வேணு கோபால், பந்தயம் கட்டி தோற்ற நிலையில், அவரது வீட்டில் இருந்த பொருட்களை பந்தயம் கட்டியவர்கள் எடுத்துச் சென்றதை அடுத்து, மறுநாள் மாந்தோப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடும் நிதி நெருக்கடியில் அவர் கிராமத்தை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
*ஜிதேந்திர சிங் – அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவிசார் அறிவியல்
*இந்திரஜித் சிங் – புள்ளியியல், திட்ட அமலாக்கம்
*அர்ஜுன் ராம் மேவால் – சட்டம், நீதித்துறை
*ஜாதவ் பிரதாப் ராவ் – ஆயுஸ் சுகாதாரம்
*ஜெயந்த் செளத்ரி – திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் நலத்துறை
ரிஷப் பண்ட் சாலை விபத்தில் காயமடைந்ததை அறிந்து கண் கலங்கியதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுடனான நேற்றைய போட்டிக்குப் பின் பண்ட்க்கு சிறந்த ஃபீல்டருக்கான விருதை வழங்கிய பின் பேசிய அவர், டி20 உலகக்கோப்பையில் பண்டை பார்த்ததில் மகிழ்ச்சி எனவும், பண்ட் விபத்தில் இருந்து மன வலிமையுடன் மீண்டு வந்து, கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளிக்கிறார் என்றார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதவிக்கு ஆபத்து என்ற தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், வெற்றி வாய்ப்பு குறைந்த மாநிலங்களில் உள்ள பாஜக தலைவர்களை மாற்ற, டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளதாகக் தெரிகிறது. தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறாத நிலையில், அண்ணாமலையின் தலைவர் பதவியும் பறிபோகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன் உள்பட பலர் நடித்துள்ள படம் ‘கல்கி 2898 ஏடி’. இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், இதில் கமலின் தோற்றம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல் இதுவரை எத்தனையோ விதமான கெட்டப்புகளில் நடித்திருந்தாலும், கல்கி படத்தில் அவரது கெட்டப் முற்றிலும் வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த கெட்டப் குறித்து உங்கள் கருத்து என்ன?
Sorry, no posts matched your criteria.