India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 வரை ஊரக பகுதிகளில் ‘மக்களுடன் முதலமைச்சர் திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 15 துறைகள் சார்ந்த மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட உள்ளது. இம்மனுக்கள் மீது ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருக்கும் நிலையில், 1,768 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக ஜூன் 23ஆம் தேதி நடைபெறவிருந்த ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21ஆம் தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
2027ஆம் ஆண்டுக்குள் இந்தியா சுமார் 3 லட்சம் செமிகண்டக்டர் வல்லுநர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என TeamLease Degree Apprenticeship என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. செமிகண்டெக்டர் மார்க்கெட் வளர்ச்சிக்கு உதவ, இத்துறைக்கு மத்திய அரசு ₹76,000 கோடி ஊக்கத்தொகை அளித்துள்ளது. மேலும், 300 முன்னணி கல்வி நிறுவனங்களில் புதிதாக செமிகண்டெக்டர் Course அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018ஆம் ஆண்டு ‘மிர்சாபூர்’ பாலிவுட் இணையத் தொடரின் முதல் சீசன் வெளியானது. ஆக்சன் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான முதல் சீசனின் 9 எபிசோடுகளும் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து, 2ஆவது சீசன் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியாகி, அடுத்த சீசனுக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்த நிலையில், மிர்சாபூர் தொடரின் 3ஆவது சீசன் அமேசான் பிரைமில் ஜூலை 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவில் வாரிசுகளுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். குமாரசாமி, ராம்நாத் தாகூர், கிரண் ரிஜிஜூ, நட்டா, பியூஷ் கோயல் உள்ளிட்ட பலரது பெயரைக் குறிப்பிட்டு போராட்டம், சேவை, தியாகம்தான் எங்கள் மரபு எனக் கூறுவோர், வாரிசுகளுக்கு பதவி கொடுத்துள்ளனர் என சாடியுள்ளார். மேலும், பாஜகவினரின் சொல்லுக்கும், செயலுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் என்றும் தெரிவித்துள்ளார்.
இனி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இது குறித்து கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், பாஜக கட்சி அலுவலகத்தில் மட்டும்தான் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார். விமானத்தில் இருந்து இறங்குவதற்குள் சில விஷயங்கள் நடந்தது தெரியாமல் போக வாய்ப்புள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
முன்பதிவு செய்த ரயில் பெட்டிகளில், முன்பதிவு செய்யாதவர்கள் பயணிப்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மூச்சுக் கூட விடமுடியாத அளவில் கூட்டம் நிரம்பி வழிவதாக, முன்பதிவு செய்த பயணிகள் அவ்வப்போது புகார் அளித்தும் வருகின்றனர். இதே சூழல் வந்தே பாரத் ரயிலிலும் ஏற்பட்டிருப்பது, பயணிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில், கூடுதல் ரயில்களை இயக்க மத்திய அரசு முன்வருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் முதலாம் ஆண்டு தேர்வு ஜூன் 21 முதல் ஜூலை 9ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகள் ஜூன் 20 முதல் ஜூலை 8ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை www.dge.tn.gov.in-இல் தனித்தேர்வர்கள் நாளை முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய கர்நாடக காங்., மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறமுடியவில்லை. இந்நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவுகள் தங்களுக்கான எச்சரிக்கை மணி என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். விரைவில் தங்களை சரி செய்துகொள்ள இத்தேர்தல் சரிவு உதவும் எனக் கூறிய அவர், உட்கட்சி பூசலை தவிர்க்குமாறு மூத்த தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கிழக்கு ஆப்ரிக்க நாடான மலாவியின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா விமான விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று விமானம் மாயமான நிலையில், தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், விமான விபத்தில் சவ்லோஸ் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்து விட்டதாக, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அவரது மறைவிற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.