India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாள் 9ஆக குறைக்கப்பட்டதற்கு மா.கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அதிருப்தி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டத் தொடர் நாள் குறைக்கப்பட்டு உள்ளதாகவும், ஏராளமான விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டிய நிலையில் இவ்வாறு குறைத்தது கவலை தரும் விஷயமென்றும், இதுகுறித்து அப்பாவுடன் பேசப்படும் அவர் கூறியுள்ளார்.
T20 WCயில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் உகாண்டா அணி 40 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. அந்த அணியில் கென்னத் வைஸ்வா மட்டும் இரட்டை இழக்க ரன்கள் (11) எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்கவே அந்த அணி 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 40 ரன்கள் எடுத்து. முன்னதாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கடந்த வாரம் உகாண்டா 39 ரன்கள் எடுத்ததே T20 WCல் எடுக்கப்பட்ட குறைவான ரன்னாக உள்ளது.
திருப்பத்தூரில் நேற்று பள்ளிக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய சிறுத்தை சுமார் 11 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பிடிபட்டது. மருத்துவர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்து கூண்டில் அடைத்தனர். பின்னர் உரிய மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அச்சிறுத்தை காட்டில் விடப்பட்டது. இந்த சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரஷ்மிகா மந்தனாவின் சமூகவலைதள பக்கத்தில் ஒருவர், அனிமல் பட காட்சியில் உள்ள “ஆண்களை நம்புவதை விட பயங்கரமானது வேறு இல்லை” என்று கூறும் காட்சியை பகிர்ந்திருந்தார். இதற்கு அவர், “முட்டாள்களை நம்புவது பயங்கரமானது. ஆனால் ஆண்களில் நிறைய பேர் நல்லவர்களாக இருக்கிறார்கள். அப்படிபட்டவர்களை நம்புவது மிகவும் முக்கியமானது” என பதிலடி கொடுத்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக பிஹாருக்கு பிரதமர் மோடி வந்தபோது, அவரின் காலில் முதல்வர் நிதிஷ்குமார் விழுந்தார். இதை பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஆட்சி அதிகாரத்துக்காக 13 கோடி பிஹார் மக்களின் கவுரவத்தை நிதிஷ்குமார் விற்று விட்டதாகவும், நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே (மோடி) காலில் விழுந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
T20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் கனடாவுடன் இன்று மோதுகிறது. இந்திய அணி தனது முதல் 3 லீக் ஆட்டங்களில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட அணிகளை வெற்றிகொண்டு 6 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி விட்டது. கனடா அணி 3 ஆட்டங்களில் விளையாடி 1 வெற்றி, 2 தோல்வியுடன் ஏற்கெனவே தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. லீக் சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்யுமா இந்தியா?
போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா, பிரான்ஸ் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்திய விமானப்படைக்கு பிரான்ஸிடமிருந்து ஏற்கெனவே ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டன. இந்நிலையில், ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, விக்ராந்த் உள்ளிட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் பயன்படுத்தப்படும் மிக் 29 ரக போர் விமானங்களுக்கு மாற்றாக ரஃபேல்
விமானங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற அமெரிக்கா மற்றும் அயர்லாந்து இடையேயான ஆட்டம் மழை காரணமாக ரத்தானது. இதனால் 1 புள்ளிகள் கூடுதலாகப் பெற்ற US அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றது. இதையடுத்து அடுத்தடுத்த இடங்களில் இருந்த பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து ஆகிய மூன்று அணிகளும் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து நடப்பு உலக கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறின.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் அபார வெற்றிபெற்றார். இதையடுத்து பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அவர், அதன்பின் தரிசனத்திற்காக கோவை ஈஷா மையத்திற்கு வருகை தந்தார். அங்கு மூன்று நாள்கள் தங்கியிருந்து ஆதி யோகியை வழிபட்ட அவர், நேற்று கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.
உகாண்டா அணிக்கு எதிரான லீக் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. சி பிரிவில் நியூசிலாந்து அணி ஏற்கெனவே தான் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. உகாண்டா அணி 1 வெற்றி , 2 தோல்விகளுடன் அந்த அணியும் வெளியேறியுள்ளது. சி பிரிவில் ஆப்கான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.