India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமெரிக்க அணி முதன் முறையாக ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாடி வருகிறது. இதுவே அந்த அணியின் முதல் சர்வதேச கிரிக்கெட் தொடராகும். இதனால் ஆரம்பத்தில், சூப்பர் 8 சுற்றுக்காவது முன்னேறுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால் அந்த அணியோ நினைத்ததற்கு மாறாக சிறப்பாக விளையாடி சூப்பர் 8க்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதனால் சூப்பர் 8ல் விளையாடும் பாகிஸ்தான் ஆசை நிராசையானது.
துபாயில் கழிவுகளை பதப்படுத்தி சுகாதாரக் கேடு இல்லாமல் கையாளும் முறைகளை இந்தியாவிலும் செயல்படுத்த அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். துபாய் சென்று குப்பை மேட்டிற்கு அருகே புகைப்படம் எடுத்துள்ள அவர், ஊருக்கு வெளியே கொட்டப்படும் இந்த குப்பைகளால் சுகாதாரக்கேடு ஏற்படுவதில்லை என்றும், இது மக்கிய பின் தாவர எருவாக மாறும் சாத்தியம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதலை நிறுத்த 2 நிபந்தனைகளை புதின் விதித்துள்ளார். அதில் அவர், 2022இல் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட 4 மாகாண பகுதிகளுக்குள் நுழைந்த உக்ரைன் படைகள் வெளியேற வேண்டும், நேட்டோவில் சேரும் முயற்சியை உக்ரைன் கைவிட வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால் இது ஹிட்லரின் கெடுபோல இருப்பதால் ஏற்க முடியாதென உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நிராகரித்துள்ளார்.
தமிழக அரசு விரைவுப் பேருந்துகளில் 100% பணமில்லா பரிவர்த்தனை பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருச்சி, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு 1,100க்கும் மேற்பட்ட விரைவுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், கூகுள் பே, போன் பே, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வாயிலாக டிக்கெட் பெறும் வசதி முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சென்னை-நாகர்கோயில், மதுரை-பெங்களூரு இடையே புதிதாக 2 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைக்க சென்னைக்கு 19ஆம் தேதி மோடி வர இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவர் 20ஆம் தேதி சென்னை வருவதாகவும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் ரயில்கள், பேசின்பிரிட்ஜ் ரயில் பராமரிப்பு நிலையம், மேட்டுபாளையம்-நெல்லை இரட்டை வழித்தடம் உள்ளிட்டவற்றை திறந்து வைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த 7ஆம் தேதி நிலவரப்படி ₹54.72 லட்சம் கோடியாக உள்ளது. இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் ஏறத்தாழ ₹36,000 கோடி அதிகமாகும். இதுபோல அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரித்ததற்கு, இந்தியாவிடம் இருக்கும் வெளிநாட்டு கரன்சிகள் ₹31,000 கோடி அதிகரித்து, ₹48 லட்சம் கோடியாக உயர்ந்தது முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.
காலியாக உள்ள 2,553 அரசு மருத்துவர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 1,021 அரசு மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட்டதாகவும், இதுபோல் மற்ற இடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்றும், மருத்துவர் சேவை ஆட்சேர்ப்பு மையத்தால் மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டு, விரும்பும் இடத்தில் பணியமர்த்தப்படுவர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
T20 WCயில் நியூசிலாந்து அணி 5.2 ஓவரில் உகாண்டா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த உகாண்டா 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 40 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய நியூசி.,1 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றிபெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கான்வே 22 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு பங்காற்றினார். இரு அணிகளுமே நடப்பு T20 WC தொடரில் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளன.
துவரை, கடலை மற்றும் உளுத்தம் பருப்பு வகைகளின் விலை ஜூலை மாதத்தில் குறைய வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 6 மாதங்களாக பருப்புகளின் விலையில் பெருமளவிலான மாற்றங்கள் ஏற்படவில்லை. எனினும், அவற்றின் விலை வழக்கத்தை விட சற்று அதிகமாகவே இருந்தது. இந்நிலையில், பருவமழை மற்றும் இறக்குமதி அதிகரிப்பு போன்ற காரணங்களால் பருப்புகளின் விலை குறைவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பையில் நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 1 ரன்னில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தெ.ஆ., 115 ரன்கள் எடுத்த நிலையில், நேபாள் 114 ரன்கள் எடுத்து தோல்வியடைந்துள்ளது. கடைசிப் பந்தில் நேபாள் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில், குல்சன் ஜா ரன் அவுட்டானார். இந்த தோல்வி மூலம் நேபாள் T20 WC தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.