India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹரியானா எம்.எல்.ஏ கிரண் செளத்ரி காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் நாளை காலை பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹரியானா முன்னாள் முதல்வர் பன்சி லாலின் மருமகளான இவர், 4ஆவது முறையாக எம்.எல்.ஏவாக தேர்வானவர். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், கிரண் செளத்ரியின் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
சென்னையில் நேற்று கார் மோதியதில், சூர்யா என்பவர் பலியானார். அது தொடர்பாக கைதான ஆந்திர MP பீடா மஸ்தானின் மகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். சில நாள்களுக்கு முன், புனேவில் சிறுவன் ஓட்டிய சொகுசு கார் மோதி இருவர் இறந்தபோதும், அவர் கைதாகி உடனடியாக ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனால் சாமானியர்கள், பணக்காரர்கள் என சட்டத்தில் பாகுபாடு காட்டப்படுகிறதா என்ற கேள்வியை மக்கள் முன்வைத்துள்ளனர்.
கடந்த சில நாள்களாக தவெக – நாதக கூட்டணி அமைக்கப்போவதாக செய்திகள் பரவியது. இதனால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜய்யின் ரசிகர்கள் நாதகவிற்கு வாக்களிப்பார்கள் என பேசப்பட்டது. ஆனால், விஜய் இன்று வெளியிட்ட அறிவிப்பில் 2026 சட்டமன்ற தேர்தல் வரை, இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்பதை திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இது நாதகவினருக்கு சற்று அதிர்ச்சியாக மாறியுள்ளது.
நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரி, ‘விடுதலை’ படத்திற்கு பிறகு கதையின் நாயகனாக மாறியுள்ளார். தற்போது கதாநாயகனாக பல படங்களை கைவசம் வைத்துள்ள அவர், மற்றுமொரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ‘விலங்கு’ வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இந்த படத்தை இயக்க, சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் படத்தைத் தயாரிப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
“கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தை ஜூலை மாதம் முதல் தொடங்கவும், பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகளை வரும் 25ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் தலா ₹3.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். கூடுதல் நிதிக்கு, கூட்டுறவு வங்கிகள் வாயிலாக ₹1 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். வீடுகள் அனைத்தும் 360 சதுரடி அளவில் சமையலறையுடன் இருக்க வேண்டும்.
சென்னையில் கார் விபத்து ஏற்படுத்திய, ஆந்திர MP பீடா மஸ்தானின் மகள், மாதுரி ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். பெசன்ட் நகர் அருகே மாதுரி ஓட்டிச் சென்ற கார் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானதில், நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்த பெயிண்டர் சூர்யா பலியானார். இது தொடர்பாக மாதுரி கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். பீடா மஸ்தான் YSR காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராவார்.
உணவகத்தில் வாங்கிய உணவில் கரப்பான் பூச்சி, பூரான், பிளேடு இருந்ததாக அடிக்கடி வெளியாகும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வரிசையில், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள உணவகத்தில் வாங்கிய பீஃப் ஃப்ரையில் பல்லி இருந்ததாக புகார் எழுந்துள்ளது. இதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், மாதிரிகளை சோதனைக்கு எடுத்து சென்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க், FD திட்டங்களுக்கான வட்டியை உயர்த்தியுள்ளது. அதன்படி, 180 நாள்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான வைப்புத் தொகைக்கான வட்டியை 0.25% அதிகரித்துள்ளது. இதனால், 180 நாள்கள் முதல் 210 நாள்களுக்கான வட்டி 6%இல் இருந்து 6.25%ஆகவும், 211 நாள்கள் முதல் ஒரு வருடத்திற்கு குறைவான நாள்களுக்கான வட்டி 6.25%இல் இருந்து 6.50%ஆகவும் அதிகரித்துள்ளது.
பாபா விஸ்வநாத், கங்கா தேவி, காசி மக்களின் அன்பால், தான் 3ஆவது முறையாக நாட்டின் தலைமை சேவகனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வாரணாசியில் பேசிய அவர், வரலாற்று வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்றில் எழுதப்பட்டிருப்பதாகவும், ஜனநாயக நாட்டில் ஒரு கட்சி 3ஆவது முறையாக தேர்வாவது அரிதானது என்றார்.
இந்தியாவில் தங்க நகைகளின் தேவை மந்தமாக இருப்பதாக, ICRA தர நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை தங்கம் 19% விலை உயர்ந்துள்ளதாக கூறும் பொருளாதார நிபுணர்கள், இதன் எதிரொலியாக பெரும்பாலான மக்கள் தங்கம் வாங்குவதை தள்ளிப்போடுவதாக தெரிவித்துள்ளனர். தங்கத்தின் விற்பனை மதிப்பு அடிப்படையில் 6-8% உயர்ந்தாலும், எடை அடிப்படையில் 4%ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.