India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஐதராபாத்தில் உள்ள அணு எரிபொருள் நிறுவனத்தில் 405 காலிபணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிட்டர், கணினி ஆப்ரேட்டர், வெல்டர், டர்னர், எலக்ட்ரீசியன், கெமிக்கல் பிளான்ட், மெக்கானிக் உள்ளிட்ட 19 பணிகளுக்கு ஐடிஐ படித்திருந்தால் போதுமானது. 18-25 வயதுக்கு உட்பட்டவர்கள் nfc.gov.in தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

கோவை கொடூரத்தால் எல்லோரும் வெட்கி தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக இதுபோன்ற பாலியல் குற்றங்கள் நடப்பதாகவும், நமது சமூகம் வாழ்வதற்கு வாய்ப்பற்ற நரகமாக வருகிறதோ என நினைக்க தோன்றுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால், கல்லூரிக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோருக்கு பாதுகாப்பற்ற சூழலில் வாழ்கிறோமா என்ற நடுக்கம் ஏற்படும் என்றும் சீமான் பேசியுள்ளார்.

*1870–சுதந்திர போராட்ட தலைவர் சித்தரஞ்சன் தாஸ் பிறந்தநாள். *1888-தமிழ் இலக்கிய வரலாற்றை முதலில் எழுதிய அறிஞர் கா.சுப்பிரமணிய பிள்ளை பிறந்தநாள். *1930–மருத்துவர் பூ.பழனியப்பன் பிறந்தநாள். *1952–எழுத்தாளர் வந்தனா சிவா பிறந்தநாள். *2013–செவ்வாய் கோளுக்கு மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. *2007–ஆண்ட்ராய்டு இயங்குதளம் வெளியீடு.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டே செல்வதாக OPS விமர்சித்துள்ளார். கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அவர், திமுக அரசு காவல்துறையை செயலிழக்க வைத்துவிட்டதாகவும் சாடியுள்ளார். மேலும், தமிழகத்தில் சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், போலீசுக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆசிய கோப்பையில் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30% அபராதமும், 2 தகுதி இழப்பு புள்ளிகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சர்ச்சை சமிக்ஞை காட்டிய ஹாரிஸ் ராஃப்-க்கு மொத்தமாக 4 தகுதி இழப்பு புள்ளிகளுடன் 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

*உங்கள் இலக்கை அடைய நீங்கள் உண்மையிலேயே விரும்பினால், எந்த தடையாக இருந்தாலும் அதை அடைய வழி கிடைக்கும். *ஒவ்வொரு பிரச்சனையையும், அதை தீர்ப்பதற்கான வாய்ப்பாகப் பாருங்கள். *எப்போதும் சிறந்ததை பற்றி சிந்தியுங்கள். முடிந்ததைச் செய்யுங்கள். *படித்தல் என்பது மனதை ஒரு புதிய இடத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு வழியாகும்.

மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது வருத்தமளிப்பதாக TTV தினகரன் கூறியுள்ளார். 2026 தேர்தலில் EPS எதிர்கட்சி தலைவராக ஆவதற்கு வாய்ப்பில்லை என புரிந்து கொண்டு தான் நீண்ட காலமாக அதிமுகவில் இருந்த மனோஜ் பாண்டியன் திமுகவில் சேர்ந்திருப்பதாகவும் TTV தெரிவித்துள்ளார். EPS-ன் நடவடிக்கைகளை பார்த்து மனமுடைந்த காரணத்தால், திமுகவில் இணையும் முடிவை அவர் எடுத்திருப்பார் என்றும் TTV பேசியுள்ளார்.

பொருளாதார பலம் காரணமாக இந்தியா தனித்து சொந்தக்காலில் உயர்ந்து நிற்பதாக FM நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் இல்லை என்று சொல்பவர்களை நம்பி அடிபணியக்கூடாது என அவர் கூறியுள்ளார். உலகின் மிகப்பெரிய 3-வது பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்றும், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் நம் நாடு வேகமாக முன்னேறும் காலத்தில் இருப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.

தமிழ் சினிமா ஹீரோக்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்கள் நஷ்டமடைவதற்கு ஹீரோக்களின் சம்பளமும் ஒரு காரணம் என்றும், அதை குறைத்தால் படத்தின் மேக்கிங்கிற்கு கூடுதல் செலவு செய்யலாம் எனவும் அவர் கூறினார். தனது கடைசி 3 படங்கள் லாபம் ஈட்டியதாகவும் குறிப்பிட்டார். பல டாப் ஹீரோக்கள் படத்தின் பட்ஜெட்டில் 50-60% சம்பளமாக பெறுகின்றனர் என்பது கோலிவுட் வட்டார தகவல்.

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 510 ▶குறள்: தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும். ▶பொருள்: ஒருவனை ஆராயாமல் பதவியில் அமர்த்துவதும், அமர்த்தியபின் அவன்மீதே சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும்.
Sorry, no posts matched your criteria.