India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை அடுத்த மாங்காட்டில் 11வயது சிறுவனை ராட்வீலர் நாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாயின் உரிமையாளர் நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றபோது, வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்த சிறுவனை அந்த நாய் கடித்துக் குதறியுள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மைக் காலமாக சென்னையில் நாய்க்கடி சம்பவங்கள் தொடர் கதையாகி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் வென்றதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை ஆஸ்திரேலிய படைத்துள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து அதிக வெற்றிகள் பெற்ற அணிகளின் வரிசையில் 8 வெற்றிகளுடன் ஆஸி., முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா 7 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளன.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். சம்பவம் தொடர்பாக 2 நாள்களில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், போதைப் பொருள்களை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது என்பதில் திட்டவட்டமாக இருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், இந்த சம்பவம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது எனவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 ஆட்டத்தில் இன்று இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன. முந்தைய சூப்பர் ஆட்டங்களில் இரு அணிகளும் முறையே வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்க அணிகளை வீழ்த்தி தலா 2 புள்ளிகளை பெற்றுள்ளது. இரண்டு அணிகளுமே வலுவான அணிகள் என்பதால், இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் தலா ₹5000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடையும் வரை, பாதுகாவலர்களின் பராமரிப்பு செலவுக்காக இந்தத் தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். பெற்றோர் இருவரையும் அல்லது ஒருவரை இழந்துள்ள குழந்தைகளுக்கு இந்தத் தொகை கிடைக்கும்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் இதுவரை 50க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தில், தாய்-தந்தையை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். குறிப்பாக, அவர்கள் பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் என அனைத்து கட்டணங்களையும் தமிழக அரசே வழங்கும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்புக்கு பிறகு பேசிய அக்கட்சி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், கள்ளச்சாராயத்தை தடுப்பதில் அரசு தோல்வி அடைந்துவிட்டதாக குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டில் இனி இதுபோன்ற மரணங்கள் நிகழக்கூடாது என்ற அவர், தமிழக அரசு அதில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
கள்ளச்சாராய விவகாரத்தில் கடந்த ஓராண்டாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மரக்காணத்தில் 14 பேர் பலியான போதும் எப்படி தொடர்ந்து விஷச்சாராயம் விற்க அனுமதி அளிக்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், மனித உயிர்கள் தொடர்பான பிரச்னை என்பதால் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது எனக் கூறியது. மேலும், தமிழக அரசு இவ்விவகாரத்தில் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘THE GOAT’. யுவன் இசையில் இப்படத்தில் விஜய் பாடிய 1st சிங்கிள் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், விஜய்யின் பிறந்தநாளையொட்டி, நாளை மாலை 6 மணிக்கு இப்படத்தின் ‘சின்ன சின்ன கண்கள்’ என்ற 2வது பாடல் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன், இப்பாடலை விஜய் பாடியுள்ளதையும் உறுதி செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் சிபிஐ விசாரணையை வலியுறுத்தி, பாமக எம்எல்ஏ.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இதையடுத்து பேசிய ஜி.கே.மணி, சந்துக்கடை என்ற பெயரில் சாராய விற்பனை நடப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், மதுக்கடைகளை மூடுவோம் என திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? என கேள்வி எழுப்பியதுடன் மதுபானம் போலவே கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் விற்பனையால் மாணவர்கள் சீரழிவதாக வேதனை தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.