India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விஜய் தலைமையில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கவிருக்கிறது. இதில் ‘கூட்டணி’ தொடர்பாக முக்கியமான தீர்மானத்தை நிறைவேற்றி, விஜய் புதிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசனை செய்யும் விஜய், கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வு, தேர்தல் பரப்புரை உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில், நாட்டின் மாநகரங்களின் பொருளாதார மதிப்புகள் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் எந்த மாநகரம் அதிக மதிப்பு கொண்டது என்பதை அறிய, மேலே உள்ள போட்டோவை வலது பக்கம் Swipe பண்ணுங்க. இதில், ஆச்சரிய விஷயம் என்னவென்றால், நாட்டின் 4-வது பணக்கார நகரமான பெங்களூருவை விட அம்பானியின் சொத்து மதிப்பு அதிகம்.

அமைச்சர் பதவி பறிபோன பிறகு அப்செட்டில் இருந்த செஞ்சி மஸ்தான், எப்படியோ விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியை வாங்கிவிட்டார். ஆனாலும், அவருக்கு பழையபடி கட்சியினர் மத்தியில் மவுசு இல்லையாம். இதனால், தலைமையிடம் வக்ஃபு வாரிய தலைவர் பதவியை அவர் கேட்டதாக பேசப்படுகிறது. ஆனால், தலைமை அசைந்துக் கொடுக்காததால் மஸ்தான் அதிருப்தியில் இருப்பதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

ரஜினியின் அடுத்த இயக்குநர்கள் பட்டியலில் லோகேஷ் கனகராஜ், நெல்சன், சுந்தர்.சி. இருக்கின்றனர். இதில், லேட்டஸ்ட்டாக ராஜமௌலி இணைந்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. தற்போது ராஜமௌலி இயக்கிக்கொண்டிருக்கும் மகேஷ் பாபு படத்தில் ஒரு முக்கியமான கெஸ்ட் ரோல் இருக்கிறதாம். அந்த ரோல் இந்திய ஆன்மிகம் குறித்தது என்று சொன்னவுடன் உற்சாகமான ரஜினி, கேரக்டர் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டியிருப்பதாக பேசப்படுகிறது.

தனிக்கட்சி தொடங்கினால் சொல்கிறேன் என அண்ணாமலை சொன்னதில் இருந்து தமிழக பாஜகவில் ஒருவித பரபரப்பு இருந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த பரபரப்பு இன்னும் அடங்கிய பாடில்லை என்கின்றனர். அதாவது, தற்போதைய பாஜக மாநில தலைவர் தன்னை ஓரங்கட்டும் நடவடிக்கையைத் தீவிரமாக்கி வருவதாக அண்ணாமலை ஆதங்கப்பட்டாராம். தனியே களமிறங்கும் திட்டத்துக்கு துணையாக, பிற கட்சி நிர்வாகிகள் சிலரிடமும் பேசுவதாக கூறப்படுகிறது.

இந்திய வீராங்கனை பிரதிகா ராவலுக்கு நடப்பது அநீதி என நெட்டிசன்கள் குரலெழுப்பி வருகின்றனர். WC தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் காயமடைந்த அவருக்கு, ஏன் எந்தவொரு மெடலும் வழங்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. 308 ரன்கள் அடித்து, தொடரில் அதிக ரன்கள் எடுத்த 2-வது இந்திய வீராங்கனையாக இருந்தும், அவரை புறக்கணித்தது சரியா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை என போதை மாநிலமாக தமிழகம் மாறியுள்ளதாக தங்கமணி குற்றம் சாட்டியுள்ளார். செல்லுமிடங்களில் திமுக ஆட்சி எப்போது முடியும்; அதிமுக ஆட்சி எப்போது வரும் என மக்கள் கேட்கின்றனர் எனக் கூறிய அவர், அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்பதால் திமுகவுக்கு பயம் வந்துவிட்டது என விமர்சித்தார். மேலும், 2 இன்ஜின் இருந்தால்தான் தமிழகம் வளர்ச்சி அடையும் எனவும் தெரிவித்துள்ளார்.

✱தேவை: கற்பூரவல்லி, பூண்டு, கிராம்பு, ஏலக்காய், மிளகு சீரகம், துளசி, இஞ்சி, மஞ்சள் தூள் ✱செய்முறை: மேலே குறிப்பிட்ட அனைத்தையும் (மஞ்சளை தவிர்த்து) நைசாக அரைத்து கொள்ளவும். பிறகு, மஞ்சள் சேர்த்து தண்ணீர் ஊற்றி, 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். இதனை இரவில் குடித்து வர நெஞ்சு சளி நீங்கும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அனைவருக்கும் இதை பகிருங்கள்.

வாடிக்கையாளர்களை ஈர்க்க, BSNL புதிய அதிரடி ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. Fiber கனெக்ஷன் மூலம், முன்னர் இருந்த ₹499 ரீசார்ஜ் பிளான் தற்போது ₹399 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த பிளானில், 60 Mbps வேகத்தில் மாதம் 3300 GB வழங்கப்படுகிறது. இதில் கூடுதல் சலுகையாக இந்த ரீசார்ஜ் ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால், முதல் 3 மாதங்களுக்கு ₹100 தள்ளுபடியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யூஸ் பண்ணிக்கோங்க?

தமிழகத்தில் கட்சிகளுக்குள் போட்டியில்லை; திராவிட கருத்தியலுக்கும் தமிழ் தேசிய கருத்தியலுக்கும் இடையேதான் போட்டி என்று சீமான் தெரிவித்துள்ளார். பார்ப்பனப் பெண்ணான ஜெ.,வின் தலைமையை திராவிடத் தலைவர்கள் எப்படி ஏற்றார்கள் என கேள்வி எழுப்பிய அவர், ஆரியத்தின் முன்பு திராவிடம் மண்டியிட்டது என விமர்சித்துள்ளார். மண்டியிட்டால் கூட பரவாயில்லை; குப்புறவிழுந்து கும்பிட்டது என கடுமையாக சாடினார்.
Sorry, no posts matched your criteria.