News June 23, 2024

43.34 கோடியாக அதிகரித்த ஜியோ வாடிக்கையாளர்கள்

image

செல்போன் நிறுவனங்கள் கடந்த ஏப்ரலில் சேர்த்த புதிய வாடிக்கையாளர் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, ஜியோ 30 லட்சம் வாடிக்கையாளரை சேர்த்துள்ளது. ஏர்டெல் 20 லட்சம், வோடாபோன் 6.3 லட்சம் இழந்துள்ளன. இதன்மூலம் ஜியோவில் பயன்பாட்டில் உள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை 43.34 கோடியாக அதிகரித்த நிலையில், ஏர்டெல் 38.33 கோடியாகவும், வோடாபோன் 19.26 கோடியாகவும் குறைந்துள்ளது.

News June 23, 2024

ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் மாணவர்கள்

image

இன்று நடைபெறவிருந்த முதுநிலை NEET தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக, தேசிய தேர்வு முகமை நேற்று இரவு அறிவித்தது. கடைசிநேர அறிவிப்பால், தேர்வுக்கு தயாரானவர்கள் கடும் பாதிப்படைந்தனர். குறிப்பாக, தேர்வு எழுதுவதற்காக ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து நீண்டதூரம் பயணித்தவர்கள், ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர். இதுபோன்ற அறிவிப்புகளை முன்கூட்டியே வெளியிட மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News June 23, 2024

ஆஸ்திரேலியாவுக்கு 149 ரன்கள் இலக்கு

image

T20 உலகக் கோப்பை தொடர் சூப்பர் 8 சுற்றில், ஆஸ்திரேலியாவுக்கு 149 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஃப்கன் அணி. டாஸ் வென்ற AUS, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய AFG அணி, 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்கள் குர்பாஸ் 60, இப்ராஹிம் 51 ரன்கள் எடுத்தனர். AUS தரப்பில் கம்மின்ஸ் 3, ஜம்பா 2, ஸ்டாய்னிஸ் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

News June 23, 2024

3,500 சதுர அடி வரை அனுமதி தேவையில்லை

image

தமிழகத்தில் 3, 500 சதுர அடி வரை குடியிருப்பு கட்டடங்களுக்கு இனி கட்டட அனுமதி தேவையில்லை என அமைச்சர் முத்துச்சாமி அறிவித்தார். சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், 2,500 சதுர அடி நிலத்தில் 3,500 சதுர அடி வரை கட்டப்படும் கட்டடங்களுக்கு கட்டட அனுமதி பெற தேவையில்லை என்றாலும் சுயசான்று மூலம் அனுமதி வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும், கட்டட விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

News June 23, 2024

71,000 டன் வெங்காயம் கொள்முதல்

image

வெங்காய விலையைக் கட்டுப்படுத்த 71,000 டன் வெங்காயத்தை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு மொத்தம் 5 லட்சம் டன் வெங்காயத்தை ஒவ்வொரு ஆண்டும் கொள்முதல் செய்து இருப்பு வைப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டில் ஜூன் 20ஆம் தேதி நிலவரப்படி 70,987 டன் வெங்காயத்தை கொள்முதல் செய்துள்ளது. கடந்தாண்டு, இதே கால கட்டத்தில் 74,071 டன் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.

News June 23, 2024

2 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை

image

கோவை, நீலகிரி மாவட்ட மலை பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளிலும், குமரி மாவட்டத்தில் சில இடங்களிலும் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழை பெய்யும் போது வெளியில் செல்வோர் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News June 23, 2024

விஷச்சாராய பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு

image

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, 100க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கவலைக்கிடமாக இருந்த பலரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 33 பேரும், சேலம் மருத்துவமனையில் 17 பேரும், விழுப்புரத்தில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

News June 23, 2024

‘வந்தே மெட்ரோ’ ரயில்கள்: ம.பி. முதல்வர் அறிவிப்பு

image

ம.பி.யில் சிம்ஹஸ்தா கும்பமேளா 2028-ஐ முன்னிட்டு இந்தூர் – உஜ்ஜைனி இடையே ‘வந்தே மெட்ரோ’ ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். அண்மையில் ரயில்வே அமைச்சரிடம் பேசிய போது, மாநிலத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் வந்தே மெட்ரோ ரயில் சேவை வழங்க அவர் ஒப்புதல் அளித்ததாகவும், அதற்கேற்ப பெருநகரங்களின் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

News June 23, 2024

ஷமியுடன் 2ஆவது திருமணமா? சானியா மிர்சா ட்விட்

image

கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமியை சானியா மிர்சா 2ஆவது திருமணம் செய்ய இருப்பதாகத் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. தற்போது ஹஜ் யாத்திரை சென்றுள்ள சானியா, அங்கிருந்து இன்ஸ்டா பக்கத்தில் இதற்கு பதிலளித்து பதிவு வெளியிட்டுள்ளார். அதில், அமைதி காக்குமாறு கேட்டுள்ளார். வதந்தி என்ற அர்த்தத்தில் பதிவிட்டுள்ளாரா, வதந்தி பரப்ப வேண்டாம் என்று வெளியிட்டுள்ளாரா என்று தெரியாததால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

News June 23, 2024

பெண்களுக்கு 40 நாட்டின கோழி குஞ்சுகள்

image

ஏழ்மையில் உள்ள பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 50% மானியத்தில் 40 நாட்டின கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், விவசாயிகளுக்கு 50% மானியத்தில் புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்படும் என்றும், சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் மாணவியிருக்கு விடுதி கட்டப்படும் என்றும் கூறினார்.

error: Content is protected !!