India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மகளிர் உலகக் கோப்பை ஐசிசி கனவு அணியில் 3 இந்திய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய வீராங்கனைகளை வைத்து இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி மந்தனா, லாரா வோல்வார்ட் (C), ஜெமிமா ரோட்ரிக்ஸ், KAPP, ஆஷ் கார்ட்னர், தீப்தி சர்மா, டி கிளெர்க், சிட்றா நவாஸ் (WC), அலனா கிங், சோஃபி எக்லெஸ்டோன், சதர்லேண்ட் ஆகியோர் உள்ளனர். 12-வது ஆக நாட் ஸ்கிவர் ப்ரண்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

CBSE 10-ம் வகுப்பு தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 2-ம் பாடமாக இந்தியை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு சாதகமாகவும், தமிழ் மாணவர்களுக்கு பாதகமாகவும் அட்டவணை இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தி தேர்வுக்கு முன்னும் பின்னும் 2 மற்றும் 4 நாள்கள் விடுமுறை இருப்பது போல, தமிழுக்கும் குறைந்தது 3 நாள்கள் இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

▶நவம்பர் 5, ஐப்பசி 19 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: பவுர்ணமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை

கோவை கொடூரத்தில் பாதிக்கப்பட பெண்ணுக்கு, நாம் உறுதுணையாக நிற்க வேண்டும் என துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். உண்மையிலேயே எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத கொடூரமானது கொங்கு மண்ணில் நடந்தது தாங்க முடியாத வேதனையை தருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தருவது போலீசின் பொறுப்பு என்று சிபி ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.

கோவை கொடூரத்தில், குற்றம் செய்தவர்களை கடும் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் என கனிமொழி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, பாதுகாப்பான சூழலை உறுதிசெய்யாமல் நாம் பண்பட்ட சமூகம் என்று சொல்லிக் கொள்ள முடியாது என X-ல் அவர் பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ள கனிமொழி, பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம் என்றும் கூறியுள்ளார்.

இன்று (நவ.5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க..

காயம் காரணமாக ஆஸ்திரேலிய BBL டி20 தொடரில் இருந்து ரவி அஷ்வின் விலகியுள்ளார். சிட்னி தண்டர்ஸ் அணியில் விளையாட ஓப்பந்தம் செய்யப்பட்டிருந்த அஷ்வின், தொடருக்கு தயாராகும் விதமாக சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, முழங்காலில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் ஹாங்காங் சூப்பர் சிக்ஸ் தொடரில் இருந்தும் விலகியுள்ளார்.

ஒவ்வொரு 40 நாள்களுக்கும், ஒரு போர்க்கப்பல் அல்லது நீர்மூழ்கி கப்பல், படையில் சேர்க்கப்படுவதாக கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி தெரிவித்துள்ளார். 2035-க்குள் 200-க்கும் மேற்பட்ட போர் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை கடற்படையில் சேர்ப்பதே இலக்கு எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தற்போதைய நிலவரப்படி, கடற்படையில் 142 போர் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று (நவ.5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க..

இந்தியா ஒரு சூப்பர்பவர் நாடு என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியான் சார் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு, கண்டுபிடிப்பு, தீவிரவாத ஒழிப்பு, வர்த்தகம் என முன்னெப்போதும் இல்லாததை விட இந்தியா – இஸ்ரேல் இடையேயான நட்புறவு வலுப்பெற்று வருவதாகவும், அவர் கூறியுள்ளார். மேலும், ஹமாஸின் கொடூர தாக்குதலின் போது PM மோடி முதல் ஆளாக போன் செய்து ஆறுதல் கூறியதை என்றும் மறக்கமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.