India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரும்பான்மை இல்லாமல், மாநிலக் கட்சிகளை நம்பி பாஜக ஆட்சியமைப்பது, மாநில அரசுகளுக்கான வெற்றி என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மாநில அரசுகளுக்கு முன்பு இருந்த குடைச்சல் குறையும் எனவும், பாஜகவால் முன்பு போல் மாநில அரசுகளை எளிதாக அணுக முடியாது என்றும் கூறுகின்றனர். இந்துத்துவா செயல்திட்டத்தை புகுத்துவது, மாநிலக் கட்சிகளை ஒடுக்குவது போன்றவற்றை சந்திரபாபு விரும்ப மாட்டார் எனத் தெரிவிக்கின்றனர்.
“ஓபிஎஸ் தேற மாட்டார் என்று தெரிந்ததால் அவரிடம் இருந்து விலகியிருக்கிறேன்” என்று முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் விமர்சித்திருக்கிறார். அதிமுக பிரிவுக்குப் பின் ஓபிஎஸ்-உடன் நெருக்கமாக இருந்த முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவர். ஆனால், ஓபிஎஸ் சுயேச்சையாக போட்டியிட்டது பிடிக்காமல் விலகியிருக்கிறார். அதிமுக மீண்டும் ஒன்றிணைவதுதான் கட்சி வெற்றிபெற ஒரே தீர்வு என்று அவர் பேட்டியளித்திருக்கிறார்.
விஜய் நடித்த ‘போக்கிரி’ திரைப்படம், வரும் 21ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக கனகரத்னா மூவிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் 22ஆம் தேதி விஜய் தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனைக் கொண்டாடும் வகையில், ஒருநாள் முன்னதாக விஜய்யின் படங்களை தமிழகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அந்தவகையில், ‘துப்பாக்கி’ படத்தைத் தொடர்ந்து, ‘போக்கிரி’ படமும் ரீ-ரிலீஸ் ஆகிறது.
விருதுநகரில் விஜய பிரபாகரனை திட்டமிட்ட சூழ்ச்சியால் வீழ்த்தியுள்ளனர் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குற்றம்சாட்டியுள்ளார். மதிய உணவு இடைவேளைக்குப் பின் 2 மணி நேரம் வாக்கு எண்ணிக்கையை ஆட்சியர் நிறுத்தியதாகக் கூறிய அவர், மறு வாக்கு எண்ணிக்கை கோரியதை தேர்தல் அதிகாரிகள் ஏற்கவில்லை என்று சாடினார். அத்துடன், ஆட்சியருக்கு அழுத்தம் கொடுத்தது யார் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்தில் தேமுதிக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “13ஆவது சுற்றுக்குப் பின் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. ஆட்சியரே வந்து வாக்கு எண்ணிக்கையை நிறுத்தத் சொல்லி இருக்கிறார். அங்கு நடந்த குளறுபடிகள் குறித்து புகார் அளித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
தொழில்நுட்பக் காரணங்களால் ‘செட்’ தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நாளை, நாளை மறுதினம் நடைபெறவிருந்த ‘செட்’ தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறு தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியிட சேர்க்கைக்காக ‘செட்’ தேர்வு நடத்தப்படுகிறது.
ஓமன் அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பையில், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் புதிய சாதனை படைத்துள்ளார். இன்றைய போட்டியில், 6 Four, 1 Six என விளாசி 56(51) ரன்கள் குவித்தார். இதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (3155 ரன்கள்) குவித்த முதல் ஆஸி., வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதனால், முதலிடத்தில் இருந்த முன்னாள் வீரர் ஆரோன் ஃபின்ச், (3120 ரன்கள்) 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
அதிமுகவை முடக்க மற்ற கட்சித் தலைவர்களை ஓபிஎஸ் சந்தித்ததாக அக்கட்சியின் மூத்த தலைவர் கே.பி.முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்க ஓபிஎஸுக்கு உரிமையில்லை என தெரிவித்தார். அதிமுகவை முடக்க நீதிமன்றம் சென்றவர்தான் ஓபிஎஸ் எனவும், அதிமுகவுக்கு எதிராக பாஜகவுடன் இணைந்து ராமநாதபுரத்தில் போட்டியிட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
அதிமுகவில் குழப்பத்தை விளைவிக்க சிலர் அறிக்கை விடுவதாக, சசிகலாவை அக்கட்சியின் மூத்த தலைவர் கே.பி.முனுசாமி மறைமுகமாக சாடினார். மக்களவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் அழைப்பு விடுத்தனர். இது குறித்து பேசிய கே.பி.முனுசாமி, ஓபிஎஸ் பெயரை குறிப்பிட்டு நேரடியாக பதிலடி கொடுத்தார். அதே நேரம், சசிகலாவின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக சாடினார்.
சித்தார்த் நடிக்கும் ‘மிஸ் யூ’ (Miss You) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘களத்தில் சந்திப்போம்’ பட இயக்குநர் ராஜசேகர் இயக்கும் இப்படத்திற்கு, ஜிப்ரான் இசையமைக்க உள்ளார். இந்தப் படம், முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தில் உருவாகவுள்ளது. ‘சித்தா’ பாடத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நீண்ட நாள்களுக்கு பிறகு காதல் கதைக்களத்தில் நடிக்க உள்ளதால், ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.