India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சந்திரபாபு, நிதிஷ் குமார் ஆகியோருக்கு INDIA கூட்டணி கதவு திறந்திருப்பதாக விசிக எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், சொந்த கட்சியை பாஜகவிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ளவே அவர்கள் சபாநாயகர் பதவி கேட்பதாகவும், பாஜகவுடன் பயணிப்பது ஆபத்து என்பதால், அக்கூட்டணி நீடிக்காது என்றும் கூறினார். அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற ஆசை INDIA கூட்டணிக்கு இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.
பாஜக அரசு மீது வரும் 21ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் 292 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான NDA கூட்டணி நாளை மறுநாள் ஆட்சி அமைக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து, அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளன.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறு தென்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதிமுக மூத்த தலைவர்களான எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரின் பாஜக ஆதரவு பேச்சுகளும் இதையே உணர்த்துகின்றன. அதே நேரம், பாஜகவில் அண்ணாமலையின் தலைமையை மாற்ற அதிமுக தரப்பில் கோரிக்கை எழும் எனக் கூறப்படுகிறது.
அதிமுக, பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக கூட்டணி தொடர்ந்திருந்தால் 30 தொகுதிகளை வென்றிருப்போம் என்றார். எல்.முருகன், தமிழிசை ஆகியோர் தமிழக பாஜக தலைவர்களாக இருந்த போது தங்கள் கூட்டணியில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், பாஜக மைனாரிட்டி அரசு அமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சூழலை சாதகமாக்கி, நிதித்துறை, உள்துறை, ரயில்வே உள்ளிட்ட முக்கிய துறைகளை நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு கேட்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், முக்கிய துறைகளை விட்டுத்தர முடியாது என பாஜக கறார் காட்டுவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருச்சி, நாமக்கல், திருச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை 8 மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளது.
மத்திய அமைச்சரவையில் 6 கட்சிகளுக்கு இடம் கொடுக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பாஜக, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம், ஜன சேனா, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்), சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) ஆகிய கட்சிகள் மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த தீவிர ஆலோசனையில் பாஜக ஈடுபட்டுள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில், தமிழக மாணவ, மாணவிகள் 58.4% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மே 5ஆம் நடந்த இந்தத் தேர்வில், தமிழக மாணவர்கள் 1.3 லட்சம் பேர் எழுதினர். இதில், 85,000 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதோடு, 8 மாணவர்கள் 720/720 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தையும் பிடித்துள்ளனர். கடந்தாண்டு தமிழக தேர்ச்சி விகிதம் 54.4% ஆக இருந்தது. தற்போது 4% அதிகரித்து தேசிய சராசரியை (56.4%) முந்தியது.
மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் NDA கூட்டணிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவால் மாநில அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சரத் பவாரிடம் இருந்து பிரிந்து சென்று, பாஜக கூட்டணி அரசு உருவாக காரணமாக இருந்தவர் அஜித் பவார். அவரது அணி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் மனமாற்றம் அடைந்த அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 19 பேர் மீண்டும் சரத் பவாரிடமே செல்ல முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் நடைபெறவிருக்கும் காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டத்தில், அக்கட்சியின் மக்களவை குழுத் தலைவராக ராகுல் காந்தியை தேர்ந்தெடுக்க மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மாணிக்கம் தாக்கூர், விவேக் தங்கா வெளிப்படையாக கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.