India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்த சத்யராஜின் மகள் திவ்யாவின் பதிவு பேசுபொருளாகியுள்ளது. தந்தையின் கொள்கை மற்றும் அரசியல் பார்வையால் ஈர்க்கப்பட்ட திவ்யா, அரசியலில் இறங்க ஆர்வம் காட்டி வருதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், திமுக கூட்டணியின் வெற்றி குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “40/40, இது திராவிட மண். எப்போதும் வெற்றி நமக்கே” எனக் குறிப்பிட்டிருப்பது கவனம் ஈர்த்து வருகிறது.
மக்களவைத் தேர்தலில் வெற்றியை இழந்திருக்கிறோமே தவிர களத்தை அல்ல என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே நமது இலக்கு 2026 சட்டப்பேரவை தேர்தல் தான் என்று கூறியிருந்ததை நினைவுப்படுத்திய அவர், அதை நோக்கி நம்முடைய வெற்றி பயணத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றார். 2026இல் வலுவான அணி அமைத்து பாமக தலைமையில் ஆட்சி அமையும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாஜக 10 ஆண்டுகளாக பெரும்பான்மையோடு ஆட்சி செய்ததால், நாடாளுமன்றத்தில் அதிகாரம் மிக்கதாக இருந்தது. ஆனால், தற்போதைய நிலை தலைகீழாக மாறியுள்ளது. காங்., வலுவான எதிர்க்கட்சியாக இருப்பதோடு, பாஜக மைனாரிட்டி அரசு அமைக்க வேண்டிய சூழலில் உள்ளது. இந்நிலையில், அக்னிபாத் திட்டம், வேலையில்லாத் திண்டாட்டம், நீட் உள்ளிட்ட பல பிரச்னைகளை முன்வைத்து, நாடாளுமன்ற அவை களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால் உயர் நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி தேமுதிக சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து பேசிய சத்யபிரத சாஹு, “விருதுநகர் வாக்கு எண்ணிக்கை தொடர்பான தேமுதிகவின் இதுவரை புகார் தேர்தல் ஆணையத்திற்கு வரவில்லை” என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளதையடுத்து மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி புறப்படுகிறார். மேலிட அழைப்பைத் தொடர்ந்து இன்று மதியம் 2.30 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார் அண்ணாமலை. தேர்தல் தோல்வி குறித்து மேலிடத் தலைமைக்கு அண்ணாமலை விளக்கமளிக்கச் செல்வதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்தியில் கூட்டணி ஆட்சி அமைவதால் பாஜகவின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நெருக்கடி நிலை ஏற்படும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். 2014-2024 வரை பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் நீக்கம் உள்ளிட்டவற்றை அமல்படுத்தியது. ஆனால், பாரத் பெயர் மாற்றம், மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு ரத்து, சிஏஏ, அக்னிவீர் உள்ளிட்டவற்றை பாஜகவால் தன்னிச்சையாக நடைமுறைப்படுத்த முடியாது.
‘தங்கலான்’ படத்தைத் தொடர்ந்து, பா.ரஞ்சித் ‘வேட்டுவம்’ படத்தை இயக்கவுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில், அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும், அசோக் செல்வன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளதாகவும், இப்படம், கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தைத் தொடர்ந்து, ‘சார்பட்டா 2’ படத்தை அவர் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்னிவீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென பாஜகவுக்கு ஜேடியு தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ்குமார் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிஹார் மாநிலத்தில் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவோர் அதிகம். ஆனால், 2022இல் அக்னிவீர் திட்டத்தால் ராணுவத்தில் சேருவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதன் காரணமாகவே நிதிஷ், இந்த நிபந்தனையை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சந்திரபாபு, நிதிஷ் குமார் ஆகியோருக்கு INDIA கூட்டணி கதவு திறந்திருப்பதாக விசிக எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், சொந்த கட்சியை பாஜகவிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ளவே அவர்கள் சபாநாயகர் பதவி கேட்பதாகவும், பாஜகவுடன் பயணிப்பது ஆபத்து என்பதால், அக்கூட்டணி நீடிக்காது என்றும் கூறினார். அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற ஆசை INDIA கூட்டணிக்கு இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.
பாஜக அரசு மீது வரும் 21ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் 292 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான NDA கூட்டணி நாளை மறுநாள் ஆட்சி அமைக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து, அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளன.
Sorry, no posts matched your criteria.