India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஓசூர், Tata Electronics நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் விடுதியில் ரகசிய கேமரா வைத்து வீடியோ பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 2,000 பெண் ஊழியர்கள் ஓசூர் – தருமபுரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பெண்களின் கண்ணியம் காக்க TN அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

தனது குழந்தைக்கு <<18204429>>மாதம்பட்டி ரங்கராஜ்<<>> தான் தந்தை என்பதை நிரூபிக்க DNA சோதனைக்கு தயார் என ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார். தனது குழந்தை தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும், இந்த நிலையிலும் மாதம்பட்டி மனசாட்சி இல்லாமல் பேசுவதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், மிரட்டி திருமணம் செய்ய மாதம்பட்டி ரங்கராஜ் என்ன சின்ன குழந்தையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

டயட்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் அரிசியை ஒதுக்கி விடுவார்கள். ஆனால், அப்படி செய்வது உடலுக்கு தீங்கானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எலும்பு, தசை, மூட்டுகள் சரியாக வேலை செய்ய, உடலுக்கு Glycogen அவசியம். இந்த Glycogen, கார்போஹைட்ரேட்டில் இருந்து தான் கிடைக்கிறது. எளிதில் செரிமானமாகும், கார்போஹைட்ரேட்டை கொடுக்கும் அரிசியை ஒதுக்குவதால், பல பிரச்னைகள் வரலாம். எனவே, கொஞ்சம் அரிசியை சாப்பிடுங்க.

1990 களில் பல வெற்றிப் படங்களில் நடித்த நடிகை கனகா ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன போட்டோ இணையத்தில் வெளியானது. அதன் பின்னர், நடிகர் ராமராஜன் அவரை நேரில் சென்று சந்தித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கனகா தனது தாயார் நடிகை தேவிகா மரணத்திற்கு பிறகு மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும், பழைய நினைவுகளை மறந்துவிட்டதாகவும் உருக்கமாக கூறியுள்ளார். மீண்டு வாருங்கள் கனகா என ரசிகர்கள் ஆறுதல் கூறுகின்றனர்.

சாலைகள் நன்றாக போடப்பட்டிருந்தால், வாகனங்கள் வேகமாக செல்லும். அதன் காரணமாகவே விபத்துக்கள் அதிகரிக்கும் என BJP MP கொண்டா விஸ்வேஸ்வர் ரெட்டி தெரிவித்துள்ளார். ஸ்ரீகாகுளத்தில் நிகழ்ந்த பஸ் விபத்து குறித்து பேசிய அவர், நெடுஞ்சாலைகள் பெரிய வளைவுகளின்றி, ஒரே நேர்கோட்டில் இருக்கும் வகையில் அமைக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார். இவரின் கருத்தை குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க?

<<18205152>>ஹரியானா வாக்கு திருட்டு<<>> குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை ECI அதிகாரிகள் மறுத்துள்ளனர். போலி வாக்காளர்களை நீக்கும் SIR நடவடிக்கையை ராகுல் ஆதரிக்கிறாரா இல்லையா என்பதை விளக்க வேண்டும். உண்மையில் போலி வாக்காளர்கள் இருந்தால், அவர்கள் பாஜகவிற்கு தான் வாக்களித்தார்கள் என்பதை ராகுல் எப்படி கூறுகிறார், ஏன் காங்கிரஸுக்கு வாக்களித்திருக்க மாட்டார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சென்னையில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் வசிப்போருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. அயனாவரம், கிண்டி, அமைந்தகரை, கொளத்தூர், மாம்பலம், பெரம்பூர், வேளச்சேரி தாலுகாக்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க ராதாகிருஷ்ணன், மணவாளன் ஆகிய தனி வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், மதுரை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனராம்.

விஷால் நடிப்பில் ‘மகுடம்’ படத்தை ரவி அரசு இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஷூட்டிங் தொடக்கத்திலேயே இருவருக்கும் முட்டிக்கொள்ள விஷாலே அப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. படத்தின் கதைக்காக ரவி அரசுக்கு ₹2.5 கோடி கொடுத்து செட்டில் செய்ததாக கூறப்பட்ட நிலையில், சொன்னபடி பணத்தை தராததால், அவர் இயக்குநர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் எந்த தலைவருக்கும் இல்லாத கட்டுப்பாடுகள் தனக்கு விதிக்கப்பட்டதாக விஜய் குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் நன்றாக பார்க்கும் வகையில் இடத்தை கேட்டுக் கொண்டே இருந்தோம். ஆனால், மக்கள் நெருக்கடியாக இருந்து பார்க்கும் இடத்தைத்தான் அரசு கொடுத்தது என சாடிய அவர், கரூர் விவகாரத்தில் முதல்வர் கூறியது அனைத்தும் வடிகட்டிய பொய் என்று விமர்சித்துள்ளார்.

தேர்தல் கூட்டணி பற்றி எங்கும் பேச வேண்டாம் என மாவட்ட செயலாளர்களுக்கு EPS அறிவுறுத்தியுள்ளார். கூட்டணி குறித்த கவலை உங்களுக்கு வேண்டாம் எனவும் அதனை தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். குறிப்பாக, பூத் கமிட்டி பணிகளை சரியாக கவனித்தாலே வெற்றி உறுதி எனவும் நிர்வாகிகளுக்கு நம்பிக்கையூட்டியுள்ளார். அதிமுக நிர்வாகிகளின் கூட்டணி அழைப்பை தவெக நிராகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.
Sorry, no posts matched your criteria.