India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆப்கானிஸ்தான் – உகண்டா இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டி, இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இதில், டாஸ் வென்ற உகாண்டா அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இரு அணிகளும் முதல்முறையாக டி20 போட்டியில் நேருக்கு நேர் மோதவுள்ளதால், யார் வெற்றி பெறுவார்? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். போட்டியை டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனலில் நேரலையில் காணலாம்.
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாள்களுக்கு (ஜூன் 9 வரை) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆந்திரா மற்றும் அதனையொட்டிய வடதமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், நாளை நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா & மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரில், இன்று 3 போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் (காலை 6 மணிக்கு), ஆப்கானிஸ்தான்-உகாண்டா அணிகளும், 2ஆவது போட்டியில் (இரவு 8 மணிக்கு), இங்கிலாந்து- ஸ்காட்லாந்து அணிகளும், 3ஆவது போட்டியில் (இரவு 9 மணிக்கு), நேபாளம் – நெதர்லாந்து அணிகளும் மோதவுள்ளன. போட்டிகளை ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் காணலாம்.
▶ஜூன் – 4, வைகாசி – 22 ▶கிழமை – செவ்வாய்
▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM, 4:30 PM – 5:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM, 7:30 PM – 8:30 PM
▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM
▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM
▶குளிகை நேரம்: 12:00 PM – 1:30 PM
▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு
▶பரிகாரம்: பால் ▶திதி: த்ரயோதசி
▶நட்சத்திரம்: 10:35 PM வரை பரணி பிறகு கார்த்திகை
மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உறுதியளித்துள்ளார். வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. ஒவ்வொரு சுற்றுக்கும் வாக்கு எண்ணிக்கை குறித்து அரசியல் பிரமுகர்களுக்கு தெரிவிக்கப்படும். வாக்கு எண்ணும் மையங்களில் எந்தவிதமான பிரச்னைகளும், ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
பிசிஓஎஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இந்த பிரச்னையால் தன்னால் வேலைகளை சரியாக செய்ய முடியவில்லை என்றும், வேதனைகளை பொறுத்துக்கொண்டு படங்களில் சண்டை காட்சிகள், பாடல் காட்சிகளில் சிரித்தபடி நடித்து வருவதாகவும் கூறினார். இதனால் பல பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இல்லாமல் போவதாகவும் குறிப்பிட்டார்.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், இன்று பிற்பகல் 3 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வக இயக்ககம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து நகலினைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு நாளை முதல் 6ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
✍பிரபஞ்சத்தை விட அபார சக்தி கொண்டது உன் மூளை. பிறகென்ன கவலை? ✍நல்ல எண்ணங்கள் வளர, வளர உள்ளத்தில் வலுவான சக்திகள் உருவாகும். ✍நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. ✍சாவி இல்லாத பூட்டு இருக்காது. அதுபோல், தீர்வு இல்லாத பிரச்னையும் இருக்காது. ✍உங்கள் பழக்கவழக்கங்கள் உங்கள் எதிர்காலத்தையே மாற்றும். ✍சுறுசுறுப்பாக இருங்கள், பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில், அரசியல் கட்சி முகவர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகார அட்டை வழங்கப்பட்ட பணியாளர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணும் மையத்திற்குள், பத்திரிகையாளர்களுக்கு தொலைபேசி உபயோகிக்க அனுமதி கிடையாது. இவர்களை சீர் செய்வதற்காக, கம்புகளால் வரிசைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் மற்றும் நகரும் கழிப்பறை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி, 39 மையங்களில் நடைபெற உள்ளன. இந்த மையங்களில் 1 சட்டமன்ற தொகுதிக்கு 1 அறை வீதம், 234 அறைகளில் வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. ஒவ்வொரு அறையிலும் 14 மேஜைகள் வீதம், 3,300 மேஜைகளில் வாக்கு எண்ணும் பணி நடைபெறும். தேவையான இடங்களில் 14க்கும் அதிகமான மேஜைகள் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு சுற்று முடிவிலும் சுற்று வாரியாக வாக்குகளின் எண்ணிக்கை வெளியிடப்படும்.
Sorry, no posts matched your criteria.