India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படம், வரும் ஜூலை மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால், ஜூலை மாதத்தில் ‘இந்தியன் 2’ படமும் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இரண்டும் ஒரே தேதியில் வெளியாகுமா அல்லது வெவ்வேறு தேதிகளில் வெளியாகும் என்பது இனிமேல் தான் தெரியவரும்.
ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹160 குறைந்துள்ளது. இதனால், சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ₹53,680க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹20 குறைந்து ₹6,710க்கும் விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ₹2 குறைந்து ₹98க்கு விற்பனையாகிறது.
மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 57 தொகுதிகளில் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 11.31% வாக்குகள் பதிவாகியுள்ளன. பிஹார் – 10.58%, சண்டிகர் – 11.64%, இமாச்சலப் பிரதேசம் – 14.35%, ஜார்க்கண்ட் – 12.15%, ஒடிசா – 7.69%, பஞ்சாப் – 9.64%, உத்தரப் பிரதேசம் – 12.94%, மேற்கு வங்கம் – 12.63% வாக்குகள் பதிவாகியுள்ளன.
57 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.யுமான ஹர்பஜன் சிங், பஞ்சாப்பில் வாக்கு செலுத்தினார். அதேபோல், பீகாரில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், ஹிமாச்சலில் எம்.பி. அனுராக் தாகூர், கொல்கத்தாவில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்டோரும் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடியில் நாளை நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, ₹5 முதல் ₹20 வரை அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இந்த புதிய கட்டண உயர்வானது நாளை நள்ளிரவு (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. லாரி உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் இந்த கட்டண உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சூதாடிய குற்றத்திற்காக, இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2017 முதல் 2019ஆம் ஆண்டு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில், அவர் 303 முறை சூதாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஐசிசி விதிப்படி அது குற்றம் என்பதால், சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க அவருக்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், டி20 உலகக் கோப்பையில் அவரால் விளையாட முடியாது.
ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டது தனி ஒருவன் படம். அந்த படத்தை ஜெயம் ரவியின் சகோதரர் மோகன் ராஜா இயக்கியிருந்தார். அண்மையில் பேட்டியளித்துள்ள மோகன் ராஜா, தனி ஒருவன் திரைக்கதை ஜெயம் ரவிக்காக எழுதப்பட்டதல்ல, பிரபாசுக்காக எழுதப்பட்ட கதை, ஆனால் அவர் ஆர்வம் காட்டாததால் ஜெயம் ரவியை வைத்து படத்தை எடுத்தேன் எனக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஜூன் 3ஆவது வாரத்தில் பள்ளிகளைத் திறக்க ஆவன செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். கடந்த சில மாதங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதாகக் கூறிய அவர், அரசே வெளியில் செல்ல வேண்டாம் எனக் கூறும் அளவுக்கு வெயிலின் தாக்கம் இருப்பதாகத் தெரிவித்தார். இதனால், மாநிலத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறப்பதை மீண்டும் தேதி மாற்றி அறிவிக்கும்படி அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாலின் முக்கியத்துவத்தை உணர்த்த ஐ.நா. சபையால் ‘உலக உணவு’ என அங்கீகரிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ஆம் தேதி ‘உலக பால் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. உலக நாடுகளில், பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. காலையில் காபியில் தொடங்கி, மதிய உணவில் தயிர், வெப்பத்தைத் தணிக்க மோர், சுவையைக் கூட்ட நெய் எனப் பால் இல்லாத நாளே இல்லை. 5-40 வயதுக்குட்பட்டோர் தினமும் 400ml பால் அருந்துவது நல்லது.
டி20 உலக கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் 9ஆம் தேதி நியூயார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அந்த மைதானம், 34,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்டது. இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டிகளுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. அதேபோல் தற்போதும் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. போட்டிக்கு 8 நாள்கள் உள்ள நிலையில், ஒரு டிக்கெட் விலை ₹8.4 லட்சத்துக்கு விற்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.