India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
RCB அணிக்காக விளையாடியது போலவே டி20 உலகக் கோப்பை தொடரிலும் விராட் கோலி விளையாட வேண்டும் என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி வலியுறுத்தியுள்ளார். இந்தியா சிறப்பாக செயல்பட ரோஹித் & விராட் ஆகியோர் டாப் ஆர்டரில் விளையாட வேண்டும் என்ற அவர், அது நியூயார்க்கில் அவர்களுக்கு உதவும் எனக் கூறினார். அத்துடன், அவர்களை சுதந்திரமாக பேட்டிங் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
காலையில் தூங்கி எழுந்ததும் சாப்பிடும் உணவே நாள் முழுவதும் சக்தியளிக்கும். காலை 7 அல்லது 8 மணிக்கு சாப்பிடுகிறோம் எனில், அதிலிருந்து 4-5 மணி நேரத்திற்குள் மதிய உணவு உண்பது அவசியம். இல்லையெனில், மதியம் 2 மணிக்குள் சாப்பிடுவது நல்லது. இரவு உணவும் இதே இடைவெளியில் உண்பது சிறப்பு. இவ்வாறு, குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்பது, உடல் எடையை சீராக வைக்கவும், நோய் வராமல் காக்கவும் உதவும்.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதுவரை 4 வீரர்களை தக்க வைக்கலாம் என்று இருந்த சட்டத்தை 3 வீரர்களாக குறைக்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. இது சிஎஸ்கே அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தோனி, ஜடேஜா, ருதுராஜ், பதிரனா, துபே ஆகிய வீரர்கள் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடி வருகின்றனர். 3 பேரை மட்டுமே தக்க வைக்க முடியும் என்ற விதி வந்துவிட்டால், இதில் ஒருவரை CSK இழக்க நேரிடலாம்.
மோடி 3ஆவது முறையாக பிரதமராவதை எதிர்க்கட்சிகள் உணர்ந்துள்ளதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், INDIA கூட்டணியின் இன்றைய கூட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை எனவும், இதனால் எதிர்க்கட்சிகள் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மோடியின் தியானத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ட்ரெயின்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மிஷ்கின் இயக்கும் 11ஆவது படமான இது, ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை எனக் கூறப்படுகிறது. இதில், பப்லு பிரித்விராஜ், நாசர், பாவனா, கே.எஸ்.ரவிக்குமார், சிங்கம் புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கியது.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம், பெரம்பலூர், விருதுநகர், திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
டி.வி., லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு தேவையான காற்றோட்டம் கிடைக்காத போது, அவை சூடாகத் தொடங்கும். ஓய்வின்றி நீண்ட நேரம் பயன்படுத்துவதால், அதில் உள்ள பாகங்கள் சூடாகும். அதிக வெளிப்புற வெப்பநிலை, மின்னணு சாதனங்களை பாதிக்கும். அதாவது, சூரிய ஒளி படும் இடத்தில் செல்ஃபோன் உள்ளிட்ட பொருட்களை வைக்கும் போது சூடாகும். செல்ஃபோன், லேப்டாப் ஆகியவற்றில் கூலிங் சிஸ்டம் பழுதானால் அதிகளவில் சூடாகிறது.
மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49.68% வாக்குகள் பதிவாகியுள்ளன. பிஹார்- 42.95%, சண்டிகர்- 52.61%, இமாச்சல்- 58.41%, ஜார்கண்ட்- 60.14%, ஒடிஷா- 49.77%, பஞ்சாப்- 46.38%, உத்தரப் பிரதேசம்- 46.83%, மேற்கு வங்கம்- 58.46% வாக்குகளும், ஒடிஷா சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவில் 49.77% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
கெஜ்ரிவால் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஜூன் 5இல் வழங்கப்பட உள்ளது. உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமின் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், ஜாமின் கோரி டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். கெஜ்ரிவால் உடல்நிலையில் தவறான தகவல்களை கூறி ஜாமின் பெற முயற்சிப்பதாக அமலாக்கத்துறை குற்ற சாட்டுக்களை முன்வைத்தது. இந்நிலையில், நாளை காலை கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைய உள்ளார்.
நேற்று ஏற்பட்ட திருவள்ளூர் பெயிண்ட் ஆலை விபத்தில் 3 தொழிலாளர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது ஆலையின் சுவர் விழுந்து உயிரிழந்தார். இவர்கள் நான்கு பேரின் குடும்பத்தினருக்கும் முதல்வர் ஸ்டாலின் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். இவர்களது குடும்பத்தினருக்கு தேவையான நிவாரணத்தை அரசு செய்யும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.