India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென் மாவட்டத்தின் குக்கிராமத்தில் இருந்து ஹார்மோனியத்துடன் சென்னைக்கு வந்த இளைஞன், இன்று ஒவ்வொரு தமிழரின் நெஞ்சங்களிலும் நிறைந்திருக்கிறார் என்றால், அது சாதாரண விஷயமல்ல. எந்தவொரு தமிழனும் எதோவொரு இடத்தில், எதோவொரு சூழலில் இளையராஜாவின் பாடலைக் கேட்காமல் ஒரு நாளைக் கூட கடத்த முடியாது. நம் அனைவரது நெஞ்சங்களிலும் இசையால் நிறைந்திருக்கும் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
தெலங்கானாவில் காங்கிரசை பின்தள்ளி பாஜக 14 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும், ஆந்திராவில் ஓய்எஸ்ஆர் காங்கிரசை பின்தள்ளி பாஜக கூட்டணி 25 தொகுதிகள் வரை வெல்லக்கூடும் எனக் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதுபோல பாஜக வெற்றி பெற்றால், தென்மாநிலங்களில் முதல்முறையாக அக்கட்சி வலுவாக காலூன்றும் நிலை உருவாகும். இது தென்மாநிலங்களில் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
தேர்தல் குறித்து வெளியான பெரும்பாலான கருத்து கணிப்புகளில் தமிழகத்தில் 2ஆவது இடத்தை பாஜக கூட்டணி கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியை பின்னுக்குத் தள்ளி 23-25 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் முதல்முறையாக பாஜக கூட்டணி 3 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ரயில் நிலையத்திற்குள் பயணிகள் அல்லாதோர் செல்ல வேண்டுமெனில் நடைமேடை டிக்கெட் கட்டாயம் எடுக்க வேண்டும். அந்த டிக்கெட் 2 மணி நேரம் மட்டுமே செல்லும். அதன்பிறகு அந்த டிக்கெட் இருந்தாலும் ரூ.250 அபராதம் விதிக்கப்படும். நடைமேடை டிக்கெட் இல்லாமல் பிடிபட்டாலும் ரூ.250 அபராதம் விதிக்கப்படும். டிடிஆரிடம் பிடிபட்டால் கடைசியாக புறப்படும், வரும் ரயிலில் வசூலிக்கப்படும் கட்டணம் அபராதமாக விதிக்கப்படும்.
18ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ள புதிய எம்.பி.க்களை வரவேற்க நாடாளுமன்ற வளாகத்தில் முக்கிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது . ஹவுஸ் கமிட்டியால் தங்குமிடம் வழங்கப்படும் வரை, எம்.பி.க்கள் தங்க அரசு விருந்தினர் இல்லங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், அவர்கள் பயணப்பட போக்குவரத்து வசதிகள் & மருத்துவ வசதிகளை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
டி20 உலகக் கோப்பை தொடரில் கனடா அணிக்கு எதிரான முதல் போட்டியில், அமெரிக்க அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. முதலில் களமிறங்கிய கனடா அணி 20 ஓவர் முடிவில் 194 ரன்கள் எடுத்தது. 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை குறிவைத்து அமெரிக்க அணி பேட்டிங் செய்யத் தொடங்கியது. ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய அந்த அணி , 17.4 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்களை எடுத்து கனடாவை வீழ்த்தியது.
வாஜ்பாய் அரசுக்கான ஆதரவை ஜெயலலிதா வாபஸ் பெற்றபோது, 1 வாக்கு வித்தியாசத்தில் அரசு கவிழ்ந்தது. அதையடுத்து வாஜ்பாய் அரசுக்கு திமுக ஆதரவளித்தது. இதை ராஜ்நாத் சிங் போன்ற தலைவர்கள் மனதில் வைத்திருப்பதாகவும், ஆதலால் திமுக மீது பாஜகவுக்கு ஒருவித சாப்ட் கார்னர் உண்டென்றும், அதிமுகதான் பாஜகவின் குறி, அக்கட்சிக்கு பதிலாக மாற்று சக்தியாக உருவெடுப்பதுதான் பாஜக திட்டம் எனச் சொல்லப்படுகிறது.
நாடு முழுவதும் கடந்த மே மாதத்தில் மக்கள் யுபிஐ மூலம் ₹20.45 லட்சம் கோடி பரிமாற்றம் செய்துள்ளனர். ஏப்ரலில் அதிகபட்சமாக ₹19.64 லட்சம் கோடி பரிமாற்றம் நடந்த நிலையில், அது இப்போது முறியடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு நாளொன்றுக்குச் சராசரியாக ₹65,966 கோடி மதிப்பிலான 44.3 கோடி பரிவர்த்தனைகள் செய்திருப்பதும் புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.
அருணாச்சலில் முதல்வர் பெமா காண்டு தலைமையிலான ஆளும் பாஜக, பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலை வகிப்பதால் மீண்டும் ஆட்சியமைக்கிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவைப்படும் நிலையில், 42 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. ஏற்கெனவே, 10 பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தேசிய மக்கள் கட்சி 6 இடங்களிலும், காங்., 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளது.
சர்வதேச ஓபன் தடகள கான்டினென்டல் போட்டியில், தமிழக வீராங்கனை நித்யா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். தைவானில் பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டம் நேற்று நடந்தது. அதில், இந்தியா சார்பில் பங்கேற்ற நித்யா, 13.23 வினாடியில் ஓடி, 2ஆவது இடம் பெற்று, வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் விஸ்மாயா, 53.49 வினாடியில் பந்தய தூரத்தைக் கடந்து வெண்கலப்பதக்கத்தை தன் வசப்படுத்தினார்.
Sorry, no posts matched your criteria.