News June 3, 2024

முதல் கையெழுத்து என்னவாக இருக்கும்?

image

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பது நாளை தெரிந்துவிடும். அது மோடியாகவே இருந்தாலும் சரி, வேறு யாரேனும் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் சரி முதல் கையெழுத்து என்னவாக இருக்கப் போகிறது என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அரசியல் தலைவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மிக முக்கிய விவகாரத்தில் கையெழுத்திடுவது வழக்கம். அது என்ன விவகாரமாக இருக்க வேண்டும்? கமெண்ட்டில் சொல்லுங்க.

News June 3, 2024

APPLY NOW: 459 காலிப் பணியிடங்கள்

image

ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுக்கு விண்ணப்பிக்க, நாளையே கடைசி நாளாகும். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், இந்தியாவில் உள்ள ராணுவப் படை, கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் காலியாக உள்ள 459 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இளங்கலை பட்டப்படிப்பு அல்லது இளங்கலை பொறியியல் படித்தவர்கள் <>upsc.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News June 3, 2024

தொங்கு நாடாளுமன்றம் என்றால் என்ன? (3/3)

image

1999 தேர்தலில் பாஜக கூட்டணி மெஜாரிட்டி இடங்களில் வென்று ஆட்சியமைத்தது. அந்த அரசு 2004 வரை நீடித்தது. பின்னர் மத்தியில் தொங்கு நாடாளுமன்றம் அமையவில்லை. ஏனெனில், வாஜ்பாய் அரசுக்கு பிறகு மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு 10 ஆண்டுகளும், மோடி அரசு 10 ஆண்டுகளும் மெஜாரிட்டியுடன் ஆட்சியமைத்தன. இந்த முறை எப்படி இருக்கும் என்பதை நாளைய (ஜுன் 4) வாக்கு எண்ணிக்கையே தீர்மானிக்கும்.

News June 3, 2024

தொங்கு நாடாளுமன்றம் என்றால் என்ன? (2/3)

image

1996இல் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாததால், தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டது. வாஜ்பாய், தேவ கவுடா, குஜ்ரால் என 2 ஆண்டுகளில் 3 பேர் பிரதமராகினர். குஜ்ரால் அரசுக்கான ஆதரவை காங்கிரஸ் வாபஸ் பெற்றதால், 1998இல் தேர்தல் நடத்தப்பட்டது. அதிலும் தொங்கு நாடாளுமன்றமே ஏற்பட்டது. இதையடுத்து தெலுங்கு தேசம் ஆதரவுடன் வாஜ்பாய் பிரதமரானார். அதிமுக ஆதரவை வாபஸ் பெற்றதால் ஓராண்டில் அரசு கவிழ்ந்தது.

News June 3, 2024

தொங்கு நாடாளுமன்றம் என்றால் என்ன? (1/3)

image

மக்களவையில் உள்ள 543 தொகுதிகளில் 272 தொகுதிகளில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணியே மத்தியில் ஆட்சியமைக்க முடியும். அதுபோல இடம் கிடைக்கவில்லையெனில் அது தொங்கு நாடாளுமன்றம் எனக் கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், மீண்டும் தேர்தல் நடைபெற்று வரிப்பணம் வீணாவதை தவிர்க்க அதிக இடங்களில் வென்ற கட்சி அல்லது கூட்டணித் தலைவரை அழைத்து குடியரசுத் தலைவர் பேசுவார்.

News June 3, 2024

வெள்ளியங்கிரி மலையேற அதிக ஆர்வம்

image

சமூக வலைதளங்களில் வரும் வீடியோக்களைப் பார்த்து வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 3 மாதத்தில் 2.5 லட்சம் மக்கள் மலையேறியிருக்கின்றனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2 லட்சம் பக்தர்கள் மட்டுமே மலையேறினர். உரிய பாதுகாப்பு இல்லாமலும் பயிற்சி இல்லாமலும் மலையேறிய பக்தர்களில் 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

News June 3, 2024

முதல் சுற்று, 2ஆவது சுற்று என்றால் என்ன?

image

தேர்தலில் ஒவ்வொரு பூத்திலும் ஒரு EVM இருக்கும். அந்த இயந்திரம், வாக்கு எண்ணும் மையத்தில் இருக்கும் 14 மேஜைகளில் வைத்து எண்ணப்படும். உங்கள் தொகுதியில் 140 பூத்துகள் உள்ளது எனத் தோராயமாக எடுத்து கொண்டால், அவற்றில் உள்ள 140 EVM இயந்திரங்கள், 14 மேஜைகளில் தலா ஒன்று விதம் முதலில் 14, அடுத்து 14 என வரிசையாக எண்ணப்படும். இதுவே முதல் சுற்று, 2ஆவது சுற்று, 3ஆவது சுற்று எனக் கணக்கிடப்படுகிறது.

News June 3, 2024

தமிழகத்தில் புதிதாக 10 சுங்கச்சாவடிகள்

image

தமிழகத்தில் புதிதாக 10 இடங்களில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுங்கச்சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது RTI மூலம் தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் மொத்தம் 36 சுங்கச்சாவடிகள் பயன்பாட்டில் உள்ளன. இதனைக் குறைக்கும்படி பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேலும் 10 சுங்கச்சாவடிகளைத் திறக்கத் திட்டமிட்டிருப்பது, வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

News June 3, 2024

விரைவில் நாய்கள் கணக்கெடுக்கும் பணி

image

சென்னையில் இன்னும் ஒரு மாதத்தில் நாய்கள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அண்மையில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து பேசிய அவர், நாயை நாய் எனக் கூறவிடாமல் குழந்தை என்று கூறுவதாக வேதனை தெரிவித்தார். அது மற்றொரு குழந்தையை கடிப்பது நியாயமா? என்று கேள்வி எழுப்பிய அவர், நாய் வளர்ப்பவர்கள் உரிய லைசென்ஸ் பெறுவதில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

News June 3, 2024

வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம்

image

வாக்கு எண்ணும் மையங்களில் 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. நாளை மறுநாள் வரை துணை மின் நிலையங்களில் உள்ள ஷிப்ட் ஆபரேட்டர்கள் அவசர நடவடிக்கைகளை கையாள அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், மின் விநியோகத்தை கண்காணித்தல், அவசரகால செயல்பாடு இருந்தால் கையாள தயாராக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!