India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக 3ஆவது முறையாக ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில், பங்குச்சந்தை 3%க்கும் மேல் உயர்ந்து உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக இருப்பதால் வர்த்தகர்கள் கவனமாக இருக்க வேண்டுமென நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருந்தால், சந்தை சற்று ஏறலாம் என்றும், கணிப்புகள் தவறினால் சந்தை சரியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் +2 துணைத் தேர்வு ஜூன் 24 முதல் ஜூலை 1ஆம் தேதி வரையும், +1 துணைத் தேர்வு ஜூலை 2 முதல் 9ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது. இத்தேர்வுகள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா அறிவித்துள்ளார். 12ஆம் வகுப்பில் 94.56% மாணவர்களும் 11ஆம் வகுப்பில் 91.17% மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகும் படத்திற்கு ‘வடக்கன்’ என பெயரிடப்பட்டது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில், ‘வடக்கன்’ என்ற பெயருக்கு தணிக்கைக் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, தற்போது படத்தின் பெயர் ‘ரயில்’ என மாற்றப்பட்டுள்ளது. மேலும், படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
மெக்சிகோ நாட்டின் 200 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். மெக்சிகோ இடதுசாரி கட்சியான மொரேனா கட்சி சார்பில் போட்டியிட்ட கிளாடியா ஷீன்பாம் 60.7% வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இவர் டிசம்பர் மாதம் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெற்றி மூலம் மெக்சிகோ ஒரு ஜனநாயக நாடு என்பதை நிரூபித்துள்ளதாக கிளாடியா தெரிவித்துள்ளார்.
சொற்ப வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கக் கூடிய இடத்தில், தபால் வாக்குகள் முக்கியத்துவம் பெறுகின்றன. உதாரணமாக, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அப்பாவு, அதிமுக வேட்பாளரை விட 49 வாக்குகள் குறைவாகப் பெற்று தோற்றார். அப்போது, தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது போன்ற குளறுபடிகளைத் தவிர்க்கவே, தபால் வாக்குகளை முதலில் எண்ண திமுக கோருகிறது.
இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் சுகுமார் சென்னின் வாழ்க்கை வரலாறு படமாக தயாராகவுள்ளது. 18ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்வியறிவற்ற மக்களும் எளிதாக வாக்களிக்கும் வகையில், சின்னங்களை அறிமுகம் செய்தது, ஆள் மாறாட்டத்தை தவிர்க்க அழியாத மையினை உருவாக்கியது என 1951-52 மக்களவைத் தேர்தலில் அவரது பங்களிப்பு அளப்பறியது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் எதிரொலியாக, பங்குச்சந்தை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. பங்குச்சந்தை வரலாற்றில் முதல்முறையாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 2,507 புள்ளிகள் உயர்ந்து, 76,468 புள்ளிகளிலும், நிஃப்டி 733 புள்ளிகள் உயர்ந்து 23,263 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. இதனால், முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு சுமார் ₹12 லட்சம் கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை பார்த்த பின் தூக்கமில்லை, மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேதனையுடன் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஆதாரமற்றவை, அதிமுகவினரை பலவீனப்படுத்தி சோர்வடைய செய்யும் நோக்கில், இந்த கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், 25 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என்றும் சூளுரைத்தார்.
சென்னை ஆர்.கே.நகரில் தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட தாய்ப்பாலை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஒரு வருடத்திற்கு கெட்டுப் போகாது என்று கூறி ஒரு பாட்டில் ₹1300க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அவை அனைத்தும் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டதாக விற்றவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்தத் தேர்தலே அடுத்து மத்தியில் ஆட்சியமைக்க போவது யார் என்பதை தீர்மானிக்கும் என்பதால் இந்த வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் முன்னணி நிலவரம், இறுதிக்கட்ட முடிவு உள்பட அனைத்து விவரங்களும் உடனுக்குடன் WAY2NEWSஇல் மிகத் துல்லியமாக வெளியிடப்படவுள்ளது.
Sorry, no posts matched your criteria.