India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இலங்கைக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், தென்னாப்பிரிக்கா வீரர் அன்ரிச் நோர்ட்ஜே புதிய சாதனை படைத்துள்ளார். அபாரமாக பந்துவீசிய அவர், 4 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மிகக்குறைவான எகானமி ரேட்டுடன் (1.75) பந்துவீசிய முதல் பவுலர் என்ற பெருமையை பெற்றார். மேலும், போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்று (ஜூன் 4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
சுங்க கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். பாஜக ஆட்சியில் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணம், தேர்தல் முடிந்த உடன் மீண்டும் உயர்த்தப்பட்டிருப்பது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. கட்டணத்தைத் திரும்பப் பெறவில்லையெனில், பாதிக்கப்பட்ட மக்களே அந்தந்த சுங்கச்சாவடிகளில் போராட வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற, மீண்டும் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி அமைக்க வேண்டும் என நடிகை ரோஜா சாமி தரிசனம் செய்தார். ஆந்திராவில் சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தொண்டர்களுடன் வந்த ரோஜா, அங்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். தொடர்ந்து ரோஜாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
இன்று (ஜூன் 4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
▶மக்களவைத் தேர்தலில் தன்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: ஓ.பி.எஸ்
▶வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம்: மின்சார வாரியம் வலியுறுத்தல்
▶தமிழகத்தில் புதிதாக 10 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்க முடிவு
▶தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பொய்க்கும்: சோனியா காந்தி
▶ஒட்டுமொத்த தமிழினத்தையும் பாஜக அவமதித்துள்ளது: ஜெயக்குமார்
▶T20 WC: நமீபியா அணி வெற்றி
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகிவந்த நிலையில், இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு இடத்தில் கூட 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகவில்லை. அதிகபட்சமாக ஈரோட்டில் 98.6, நுங்கம்பாக்கம் – 96.8, கரூர் பரமத்தி – 97.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
டி20 உலகக் கோப்பைக்கு பிறகு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதை ராகுல் டிராவிட் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நடப்பு டி20 உலகக் கோப்பையுடன் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாகவும், புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கௌதம் கம்பீரை தலைமை பயிற்சியாளராக்க பிசிசிஐ முயற்சித்து வருகிறது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நேற்று வரலாறு காணாத மழை பெய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 111.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது. 133 ஆண்டுகளுக்குப் பின் ஜூன் மாதத்தில் அதிகபட்ச மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. முன்னதாக, கடந்த 1891ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி பெங்களூருவில் 101.6 மி.மீ மழை பதிவானது குறிப்பிடதக்கது. விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால், பல இடங்கள் வெள்ளக்காடானது.
தென்னிந்திய சினிமாவில் திருமணமான நடிகைகளை ஓரங்கட்டுவதாக காஜல் அகர்வால் வேதனை தெரிவித்துள்ளார். இந்தி சினிமாவில் திருமணத்திற்குப் பின்னும் தீபிகா படுகோனே, ஆலியா பட் போன்ற நடிகைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் கூறிய அவர், தென்னிந்தியாவில் அத்தகைய வாய்ப்பு நயன்தாராவுக்கு மட்டுமே கிடைப்பதாக கூறியுள்ளார். மேலும், தங்களின் இந்த நிலை விரைவில் மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.