India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில், வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக பூட்டி வைத்திருந்த அறையின் சாவியை அதிகாரிகள் தொலைத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், வாக்கு எண்ணும் மையத்தின் பூட்டை உடைத்து அதிகாரிகள் உள்ளே சென்றனர். இந்த சம்பவம் அரசியல் கட்சியினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
கேரளா முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. திருவனந்தபுரத்தில் முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் முன்னிலை வகித்து வருகிறார். பாஜக வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் 2ஆவது இடத்தில் இருந்து வருகிறார். சிபிஐ வேட்பாளர் பன்னியன் ரவீந்திரன், அடுத்த இடத்தில் உள்ளார் .
தபால் வாக்குகள் எண்ணும் பணியில் தற்போது வரை பாஜக கூட்டணி 231 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 123 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதனால், இருமடங்குக்கு மேல் அதிகமாக பாஜக கூட்டணி முன்னிலை வகிப்பது அதற்கு சாதகமாக அமைந்துள்ளது.
புதுச்சேரியில் உள்ள 2 வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரியில் இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவில்லை. நாடு முழுவதும் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை தொடங்காததால் அரசியல் கட்சிகளின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையங்களில் காத்திருக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளர் செல்வம் முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 2ஆவது இடத்தில் உள்ளார்.
கேரளா முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வயநாட்டில் முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ராகுல் காந்தி முன்னிலை வகித்து வருகிறார். சிபிஐ வேட்பாளர் அனி ராஜா 2ஆவது இடத்தில் இருக்கிறார். பாஜக வேட்பாளர் சுரேந்திரன், பி.எஸ்.பி வேட்பாளர் பி.ஆர் கிருஷ்ணன்குட்டி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர் .
மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியின் வெற்றி கவனிக்கத் தக்கதாக இருக்கும். திமுக சார்பில் எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் களம் காண்கிறார். அதிமுக சார்பில் ஜெயவர்தன் போட்டியிட்டார். இவர் ஏற்கெனவே இங்கு எம்.பியாக இருந்தவர். பாஜக சார்பில் தமிழிசை செளந்தரராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தேர்தல் அரசியலுக்கு வந்துள்ளார். இதனால், இத்தொகுதி முக்கியத்துவம் பெறுகிறது.
புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சற்றுமுன் தொடங்கியுள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் திமுக கூட்டணி 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக +, பாஜக +, நாதக ஆகிய கட்சிகள் இதுவரை எந்த இடத்திலும் முன்னிலை பெறவில்லை.
மக்களவைத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் பயாஸ் அகமது மிர் களம் கண்டார். இதில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் உமர் அப்துல்லா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். அவரைக் காட்டிலும் பயாஸ் அகமது மிர் பின்தங்கியே உள்ளார்.
மக்களவைத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி களம் காண்கிறார். அவரை எதிர்த்து தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில் மியான் அல்ஃடாப் அகமது லார்வி போட்டியிடுகிறார். இத்தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. முதல் சுற்றில் மெஹபூபா முப்தி முன்னிலை வகிக்கிறார். அகமது லார்வி பின்தங்கியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.