India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கையில் தபால் வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார். மற்ற கட்சி வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில், பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றன. பகுஜன் சமாஜ் கட்சி, கோண்ட்வானா கணதந்திர கட்சி ஆகிய இரு கட்சிகளும் அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 20 தொகுதிகளில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. . INDIA கூட்டணி 4 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
கர்நாடகாவில் பாஜக, மஜத ஆகியவை கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதில் காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக, மஜத கூட்டணி 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. அவர்களில் மஜத வேட்பாளர் பிரஜ்வாலும் ஒருவர்.
பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 301 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. INDIA கூட்டணி 137 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் முன்னிலையில், இருந்து வந்த பாஜக தற்போது 300க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலை பெற்றுள்ளார். தபால் வாக்குகளில் எப்போதும், திமுக ஆதிக்கம் செலுத்தும். ஆனால், நெல்லையில், முதல்முறையாக பாஜகவின் கை ஓங்கியுள்ளது. 23 தொகுதிகளில் பாஜக போட்டியிட்ட நிலையில் எல்.முருகன், தமிழிசை, பின்னடைவை சந்தித்துள்ளனர். ஆனால், நயினார் நாகேந்திரன் மட்டும் முன்னிலையில் இருக்கிறார்.
ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. சற்றுமுன் கிடைத்த தகவலின் படி, ஆளும் கட்சியான YSR காங்., மற்றும் பாஜக ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை. இதுவரை எண்ணப்பட்ட தபால் வாக்குகளில், தெலுங்கு தேசம் 4 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜன சேனா 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 27 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கூட்டணி 18 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. விழுப்புரம் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையில், விசிக வேட்பாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்து வருகிறார். பாமக வேட்பாளர் முரளி சங்கர் 2ஆவது இடத்திலும், அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
மதுரையில் தபால் வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன், அதிமுக வேட்பாளர் சரவணன் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.