India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகாராஷ்டிராவில் சிவசேனாவில் இருந்து பிரிந்து அக்கட்சியையும், சின்னத்தையும் பெற்ற முதல்வர் ஷிண்டே அணி 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. INDIA கூட்டணியில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணி 11 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தேசியவாத காங்.,இல் இருந்து பிரிந்த அஜித் பவாரின் அணி 1 இடத்திலும், சரத்பவார் அணி 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பிளவுபட்ட அணிகளுக்கு சின்னங்களைத் தவிர எதுவும் மிஞ்சவில்லை.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ‘திராவிட மாடல் ஆட்சி’ என்ற பெயரில் உருவாக்கிய திட்டங்கள் மக்களவைத் தேர்தலில் எதிரொலித்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். உரிமைத் தொகை, விடியல் பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் ஆகிய திட்டங்கள் பெண்கள் மத்தியில் திமுகவின் செல்வாக்கை அதிகரிக்க செய்துள்ளதாகவும், மகளிரின் பலத்த ஆதரவோடு திமுக வரலாற்று வெற்றியை நோக்கி பயணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராஜ்குமார் முன்னிலை வகிப்பதால் அக்கட்சித் தொண்டர்கள் மட்டன் பிரியாணி செய்து கொண்டாடினர். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை இரண்டாம் இடத்திலும் அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். திமுகவினரின் கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா போட்டியிட்டார். அங்கு அவருக்கும் சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரசீத் சேக்கிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முடிவில் அப்துல் ரசீத் சேக் வெற்றி பெற்றார். இதையடுத்து சேக்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள உமர் அப்துல்லா, ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சகஜமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவின் பின்னடைவுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்ய வேண்டுமென்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார். மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தன்னை மிகப்பெரும் தலைவராக மோடி காட்டிக் கொண்டதாகவும், ஆனால் மோடியோ முன்னாள் பிரதமர் ஆக போகிறார் என்றும், இதுதான் தேர்தல் முடிவு அளிக்கும் செய்தி என்றும் தெரிவித்தார்.
பஞ்சாப்பின் ஜலந்தர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அம்மாநில முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி வெற்றி பெற்றுள்ளார். 1,75,993 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 13 மக்களவைத் தொகுதிகளில், காங்கிரஸ் 7 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சி 3 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் இடையே கடுமையான இழுபறி நீடிக்கிறது. மாணிக்கம் தாகூர் நீண்ட இழுபறிக்கு பின் முன்னிலைக்கு வந்த நிலையில், சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளார். விருதுநகர், தருமபுரி ஆகிய தொகுதிகள் தொடர்ந்து இழுபறி தொகுதிகளாக இருந்து வருகின்றன.
உ.பி மீரட் தொகுதியில் பிரபல தொலைக்காட்சித் தொடரான ராமாயணத்தில் ராமராக நடித்த நடிகர் அருண் கோவிலை பாஜக களம் இறக்கியது. அயோத்தி கோயில் மூலமும், ராமராக நடித்தவரை வேட்பாளராக களமிறக்கியது மூலமும் வெற்றி பெறலாம் என்ற பாஜகவின் கணக்குகள் தோல்வியில் முடிந்தது. அங்கு சமாஜ்வாதி வேட்பாளர் சுனிதா வெர்மா 21,105 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி பின்னடைவை சந்தித்துள்ளார். 6ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணியை விட, திமுக வேட்பாளர் மணி 2 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். இதன் மூலம் திமுக கூட்டணி 40 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி, 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 1 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்று 2ஆவது இடத்தில் உள்ளார். 2019 தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி, 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.