India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உ.பி.,யின் நகினா தொகுதியில் ஆசாத் சமாஜ் கட்சியின் தலைவர் ‘பீம் ஆர்மி’ சந்திரசேகர் ஆசாத் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். 5,12,552 வாக்குகளைப் பெற்ற அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ஓம் குமாரைவிட 1,51,473 வாக்குகள் அதிகம் பெற்று வென்றுள்ளார். அம்பேத்கர், கன்ஷிராம் ஆகியோரை வழிகாட்டியாக ஏற்ற ஆசாத், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்க களப்பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை. இந்நிலையில், எந்த பிரதிபலனும் பாராமல் அதிமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு இபிஎஸ் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், அல்லும் பகலும் அயராத உழைத்த தொண்டர்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன் என கண் கலங்குகிறேன் எனக் கூறினார். மேலும், தேர்தல் முடிவு சோர்வடைய செய்யாது. 2026இல் மகத்தான வெற்றி பெறுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தென்காசி திமுக வேட்பாளர் ராணி, சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேல், தென்காசியில் ஆதிக்கம் செலுத்தி வந்த கிருஷ்ணசாமிக்கு 2ஆவது இடமே கிடைத்துள்ளது. அரசியல் பின்புலம் இல்லாத சாதாரண தொண்டரான ராணி, வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது பலரும் ஆச்சரியமடைந்தனர். ஆனால், தென்காசி திமுக நிர்வாகிகளின் கடின உழைப்பு, இந்த வெற்றியை சாத்தியமாக்கியுள்ளது.
கேரளாவின் மலப்புரம் தொகுதியில் பாஜக சார்பில் அப்துல் சலாம் போட்டியிட்டார். பாஜகவின் ஒட்டுமொத்த வேட்பாளர்களில் இவர் ஒருவர் தான் முஸ்லிம் ஆவார். தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், அவர் 85,361 வாக்குகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலிலும், பாஜக ஒரு முஸ்லிம் வேட்பாளருக்குக் கூட வாய்ப்பளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென் சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக நட்சத்திர வேட்பாளர் தமிழிசை 2ஆவது இடத்தையும், அதிமுகவின் முகமாக இருந்த ஜெயவர்தன் 3ஆவது இடத்தையும், நாம் தமிழர் கட்சியின் தமிழ்செல்வி 4ஆவது இடத்தியும் பிடித்துள்ளனர்.
தூத்துக்குடியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் சிவசாமி வேலுமணி, தமாகாவின் விஜயசீலன் உள்ளிட்ட 27 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். இதன் மூலம், நடப்பு தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்த வேட்பாளர் என்ற பெருமையை கனிமொழி பெற்றுள்ளார்.
2014 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் குமரியில் வெற்றி பெற்ற பொன் ராதாகிருஷ்ணன், மத்திய இணையமைச்சராக பதவி வகித்தார். பிறகு, குமரியில் வெற்றி பெற அவர் தொடர்ந்து போராடி வருகிறார். கடந்த 2019 தேர்தலில் காங்கிரஸின் வசந்த குமாரிடன் தோல்வியுற்ற அவர், அவரது மறைவுக்கு பின் நடந்த இடைத்தேர்தலில், அவரது மகன் விஜய் வசந்திடம் தோற்றோர். தற்போதும், பொன் ராதாகிருஷ்ணன் தோல்வியடைந்துள்ளார்.
இந்தியாவில் 30க்கும் அதிகமான தொகுதிகளை உடைய எந்த மாநிலத்திலும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் உள்ளிட்ட கட்சிகள் முழுமையான வெற்றியை பெறாத நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணி அனைத்து இடங்களையும் வென்றுள்ளது. 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும் என்று ஸ்டாலின் கூறிவந்த நிலையில், அதை தற்போது அவர் சாதித்து காட்டியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் INDIA கூட்டணியின் முக்கிய முகமாக மாறியுள்ளார்.
நீலகிரியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனை வீழ்த்தி, திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி பெற்றுள்ளார். 2009 தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா, 2ஜி பிரச்னையால் 2014 தேர்தலில் அத்தொகுதியில் தோற்றார். அதனைத் தொடர்ந்து 2019, 2024 தேர்தகளில் வெற்றி பெற்றுள்ளார். எல்.முருகன் கடும் போட்டியளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆ.ராசா வென்றுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் தனது தாயுமான சோனியா காந்தி ரேபரேலியில் பெற்றிருந்த வாக்குகளைக் காட்டிலும் ராகுல் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். 2019இல் சோனியா 1.67 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார். இந்நிலையில், 2024 தேர்தலில் 6,84,261 வாக்குகளைப் பெற்ற ராகுல், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் தினேஷ் பிரதாப் சிங்கை 3,88,615 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.