India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘தங்கலான்’ படத்தைத் தொடர்ந்து, பா.ரஞ்சித் ‘வேட்டுவம்’ படத்தை இயக்கவுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில், அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும், அசோக் செல்வன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளதாகவும், இப்படம், கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தைத் தொடர்ந்து, ‘சார்பட்டா 2’ படத்தை அவர் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்னிவீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென பாஜகவுக்கு ஜேடியு தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ்குமார் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிஹார் மாநிலத்தில் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவோர் அதிகம். ஆனால், 2022இல் அக்னிவீர் திட்டத்தால் ராணுவத்தில் சேருவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதன் காரணமாகவே நிதிஷ், இந்த நிபந்தனையை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சந்திரபாபு, நிதிஷ் குமார் ஆகியோருக்கு INDIA கூட்டணி கதவு திறந்திருப்பதாக விசிக எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், சொந்த கட்சியை பாஜகவிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ளவே அவர்கள் சபாநாயகர் பதவி கேட்பதாகவும், பாஜகவுடன் பயணிப்பது ஆபத்து என்பதால், அக்கூட்டணி நீடிக்காது என்றும் கூறினார். அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற ஆசை INDIA கூட்டணிக்கு இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.
பாஜக அரசு மீது வரும் 21ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் 292 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான NDA கூட்டணி நாளை மறுநாள் ஆட்சி அமைக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து, அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளன.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறு தென்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதிமுக மூத்த தலைவர்களான எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரின் பாஜக ஆதரவு பேச்சுகளும் இதையே உணர்த்துகின்றன. அதே நேரம், பாஜகவில் அண்ணாமலையின் தலைமையை மாற்ற அதிமுக தரப்பில் கோரிக்கை எழும் எனக் கூறப்படுகிறது.
அதிமுக, பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக கூட்டணி தொடர்ந்திருந்தால் 30 தொகுதிகளை வென்றிருப்போம் என்றார். எல்.முருகன், தமிழிசை ஆகியோர் தமிழக பாஜக தலைவர்களாக இருந்த போது தங்கள் கூட்டணியில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், பாஜக மைனாரிட்டி அரசு அமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சூழலை சாதகமாக்கி, நிதித்துறை, உள்துறை, ரயில்வே உள்ளிட்ட முக்கிய துறைகளை நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு கேட்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், முக்கிய துறைகளை விட்டுத்தர முடியாது என பாஜக கறார் காட்டுவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருச்சி, நாமக்கல், திருச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை 8 மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளது.
மத்திய அமைச்சரவையில் 6 கட்சிகளுக்கு இடம் கொடுக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பாஜக, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம், ஜன சேனா, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்), சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) ஆகிய கட்சிகள் மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த தீவிர ஆலோசனையில் பாஜக ஈடுபட்டுள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில், தமிழக மாணவ, மாணவிகள் 58.4% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மே 5ஆம் நடந்த இந்தத் தேர்வில், தமிழக மாணவர்கள் 1.3 லட்சம் பேர் எழுதினர். இதில், 85,000 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதோடு, 8 மாணவர்கள் 720/720 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தையும் பிடித்துள்ளனர். கடந்தாண்டு தமிழக தேர்ச்சி விகிதம் 54.4% ஆக இருந்தது. தற்போது 4% அதிகரித்து தேசிய சராசரியை (56.4%) முந்தியது.
Sorry, no posts matched your criteria.