India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
NDA கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதசார்பற்ற ஜனதா கட்சிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேவகவுடாவின் மகன் குமாரசாமியும், மருமகன் மஞ்சுநாத்தும் அப்பதவியை கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர். தான் சுகாதாரத்துறை அமைச்சராக வேண்டுமென மக்கள் நினைப்பதாக மஞ்சுநாத் கூறியிருந்த நிலையில், தனக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் நன்றாக இருக்கும் என குமாரசாமி தெரிவித்துள்ளார்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்கு ஜூலை 14ம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நுழைவுத்தேர்வுக்கு wwww.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 8 முதல் 23 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள், வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சி அல்லது SSC, ரயில்வே தேர்வுகளுக்கான பயிற்சி மேற்கொள்ள முடியும்.
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சி தரவில்லை என்றும், அதற்கு தான் பொறுப்பேற்பதாகவும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். அனைத்து தொகுதிகளை காட்டிலும் பாராமதி தொகுதியில் தனது மனைவி வெற்றி பெறுவார் என்று நினைத்தாக கூறிய அவர், இஸ்லாமிய வாக்குகள் எதிர்பார்த்த அளவு கிடைக்காததால் தோல்வி அடைந்ததாக தெரிவித்தார். சரத்பவார் மகள் சுப்ரியா சுலே அந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.
அரசமைப்புச் சட்டமும், ஜனநாயகமும் தற்காலிகமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பெரும்பான்மை இந்துக்கள் பாஜகவைப் புறக்கணித்துள்ளனர். பாஜக பெற்றுள்ள இவ்வெற்றியானது தோல்வியின் வலி சுமந்த வெற்றியே ஆகும். தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, பாஜகவிற்கு சரியான பாடம் புகட்டுவதாக அமைந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், கரூர், அரியலூர், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
*2020ஆம் ஆண்டு பாஜக மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகன், வேல் யாத்திரை மேற்கொண்டார். *சட்டப்பேரவை முடிந்தவுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரை மேற்கொண்டார். *காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் வாரணாசியில் கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. *நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செங்கோல் வைக்கப்பட்டது. *மோடி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகை புரிந்தனர்.
இறந்து போன பெரியாரையும், அண்ணாவையும் காட்டி திமுக மக்களை ஏமாற்றி வருவதாக இயக்குநர் தங்கர் பச்சான் விமர்சித்துள்ளார். திமுகவில் இன்றைக்கு இருப்பவர்கள் மன்னர்கள் போல வாழ்ந்து வருவதாக குற்றம் சாட்டிய அவர், புலி வருகிறது என்ற கதை போல, பாஜக வந்துவிடும் என்று கூறியே திமுக மக்களை ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டினார். கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அவர், மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.
தமிழ்நாட்டில் பாஜக தோல்வியைத் தழுவியபோதும், தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க பாஜக தலைமை முடிவு எடுத்துள்ளது. அதன்படி, மோடி தலைமையிலான அமைச்சரவையில் அண்ணாமலை, தமிழிசைக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலையின் பாத யாத்திரை, பாஜக தலைவர்களின் சூறாவளி பரப்புரை காரணமாக பாஜகவின் வாக்கு வாங்கி அதிகரித்துள்ளதால், இருவருக்கும் முக்கிய இலாக்கா ஒதுக்கப்படும் என தெரிகிறது.
அமெரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் புதிய சாதனை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில், 3 Four, 2 Six என விளாசி 44 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (4,067 ரன்கள்) குவித்த முதல் வீரர் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். மேலும், 4,038 ரன்களுடன் முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளினார்.
24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம் என்று காபந்து பிரதமர் மோடி அறைகூவல் விடுத்துள்ளார். பிரேக்கிங் செய்திகளை நம்பி இந்த நாடு செயல்படாது என கூட்டணி கட்சிகளுக்கு இலாகா ஒதுக்கீடு கணிப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், 140 கோடி மக்களின் கனவை நிறைவேற்றுவேன் என்றும் நடுத்தர மக்களின் சேமிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளித்தார்.
Sorry, no posts matched your criteria.