India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பான X பதிவில், “இந்திய நாட்டின் பிரதமராக 3ஆவது முறையாக பதவியேற்க உள்ள மோடிக்கு, அதிமுக மற்றும் தனது சார்பில் வாழ்த்து” எனத் தெரிவித்துள்ளார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் அந்தக் கூட்டணி முறிந்து இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன.
இன்று (ஜூன் 8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான NDA கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில், NDA கூட்டணியின் தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். தேர்தலில் வெற்றி பெற்ற 293 எம்.பிக்களும் அவரை ஒருமனதாக தேர்வு செய்தனர். அதைத் தொடர்ந்து, மோடியை தேர்வு செய்ததற்கான கடிதத்தை, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் ஜெ.பி.நட்டா, சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்டோர் நேரில் வழங்கினர்.
‘ஹமாரே பாரா’ என்ற இந்தி படத்திற்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. கமல் சந்ரா இயக்கத்தில் அனு கபூர், அஷ்வினி உள்ளிடோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில், இஸ்லாமிய வெறுப்பை விதைக்கும் கருத்துகள் இடம்பெற்றிருப்பதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், சமூக நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு, மறு உத்தரவு வரும் வரை இப்படத்தை திரையரங்குகளில் திரையிட தடை விதிப்பதாக கர்நாடக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து இந்திய அணி வீரர் ஷ்ரேயஸ் ஐயர் பிசிசிஐ மீது குற்றம் சாட்டியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், ரஞ்சி கோப்பையில் விளையாடமல் போனதால் தான் ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை என்றும், அதற்காகவே ரஞ்சி மற்றும் ஐபிஎல் கோப்பைகளை வென்று பிசிசிஐ எடுத்த முடிவுக்கு பதிலடி கொடுக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணி ஆட்சியில் நிச்சயம் குழப்பம் வரும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது என்று தெரிவித்த அவர், INDIA கூட்டணி தேர்தலில் அதிக இடங்கள் பெற ராகுலின் பங்கு மிக அதிகம் என்று பாராட்டு தெரிவித்தார். விசிக மாநில அந்தஸ்து பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார்.
இன்று (ஜூன் 8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
மோடி வென்றிருந்தாலும் ’மேன் ஆஃப் தி மேட்ச்’ ராகுல் காந்திதான் என எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியும், கார்கேவும் நாடு முழுக்க செய்த பரப்புரை மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்த அவர், ராகுல் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மோடி – அமித் ஷா இருவருக்குமே இம்முறை ஆட்சி நடத்துவது பெரும் சவாலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: 13ஆவது லீக் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி கனடா அணி அபார வெற்றி பெற்றது. நியூ யார்க் மைதானத்தில் முதலில் விளையாடிய கனடா அணி, 7 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
மக்களவைத் தேர்தலில் முஸ்லிம் வாக்குகள் திருப்புமுனையாக இருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. காங்., கட்சியின் முஸ்லிம் வாக்கு 33%இல் இருந்து 38%ஆக அதிகரித்துள்ளதாக கூறும் ஆக்சிஸ் மை இந்தியா ஆய்வு நிறுவனம், INDIA கூட்டணியில் மற்ற கட்சிகளின் முஸ்லிம் வாக்கு வங்கி 19%இல் 42%ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிடுகிறது. ஒட்டுமொத்தமாக, INDIA கூட்டணிக்கான முஸ்லிம் வாக்குகள் 28% உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டுகிறது.
Sorry, no posts matched your criteria.