India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஷ்மீரின் ரியாஸி பகுதியில் பாக்., தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் 10 யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர். உரி, புல்வாமாவில் முன்பு நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக உரியில் துல்லியத் தாக்குதல், பாலாகோட்டில் விமானப்படை தாக்குதலை இந்தியா நடத்தியது. இந்நிலையில், மோடி 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற நாளில், நடந்த இத்தாக்குதலுக்கு இந்தியா என்ன பதிலடி கொடுக்க போகிறது என்று கேள்வி எழுந்துள்ளது.
தமிழில் பிரெண்ட்ஸ், சூரிய வம்சம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள தேவயாணி, உச்சத்தில் இருந்தபோதே இயக்குநர் ராஜகுமரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது, 49 வயதாகும் நிலையிலும் இளமையாக அவர் காட்சியளிக்கிறார். திருமண நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதைக்கண்ட ரசிகர்கள், தேவயாணியை புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
மோடியின் அமைச்சரவையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இடம் பிடிக்கும் ஒரே பெண் என்ற சாதனையை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். 64 வயதாகும் அவருக்கு இந்த முறையும் முக்கியத்துவம் வாய்ந்த நிதித்துறை வழங்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு அவர் தொழிற்சாலைத் துறை அமைச்சராகவும், 2017ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவியேற்றார். பின்னர், 2019ஆம் ஆண்டு முதல் நிதித்துறையை நிர்வகித்து வருகிறார்.
சென்னை எழும்பூரில் உள்ள அபார்ட்மெண்டில் குடும்பத்துடன் வசித்து வரும் நயன்தாரா, சூட்டிங் இல்லாத நேரத்தில் அபார்ட்மெண்டுக்கு வெளியே 2 குழந்தைகளை விளையாட விடுவாராம். அண்மையில், அப்படி குழந்தைகளை அவர் விட்டிருந்தபோது, அபார்ட்மெண்டுக்குள் வேகமாக ஆட்டோ வேகமாக வந்ததாகவும், இதனால் குழந்தைகள் அச்சமடைந்ததை கண்ட நயன்தாரா, ஆட்டோக்காரரிடம் சென்று வேகமாக வந்ததற்காக சண்டை போட்டதாகவும் கூறப்படுகிறது.
மாலவி நாட்டின் துணை அதிபர் பயணித்த ராணுவ விமானம் காணாமல் போனதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 51 வயதாகும் துணை அதிபர் சிலிமா உள்ளிட்ட 10 பேருடன் விமானம் நேற்று புறப்பட்டது. ஆனால், மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் தவித்ததால், திரும்பிச் செல்ல கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்பின், விமானம் மாயமானது.
தமிழகத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் மின்சாரப் பயன்பாட்டுக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு மின்வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டபோது வெளியான செய்தித்தாள் நகல், தற்போது தவறாகப் பரப்பப்படுகிறது எனவும் இந்தாண்டு மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை எனவும், அரசு விளக்கமளித்துள்ளது.
இளநிலை பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இன்று. மே 6 முதல் ஜூன் 6 வரை நடைபெற்ற விண்ணப்பப்பதிவில் 2,49,918 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். அதன்பின், பெற்றோரின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பம் செய்வதற்கான தேதியை இன்று (11.06.2024) வரை நீட்டித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தெற்கு ரயில்வேயால் இயக்கப்படும் 8 மலை ரயில் உள்பட 296 ரயில்களின் எண்களும் கொரோனா காலத்தில் சிறப்பு ரயில்களாக அறிவிக்கப்பட்டு, 0 என்று தொடங்கும் வகையில் எண்கள் மாற்றப்பட்டன. இதையடுத்து, அந்த எண்களிலேயே ரயில்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில், மீண்டும் ஜூலை 1 முதல் பழையபடி 5,6,7 என்று தொடங்கும் வகையில் ரயில்களின் எண்கள் மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஒடிஷா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. ராஜ்நாத் சிங் முன்னிலையில் நடக்கும் இக்கூட்டத்தில், ஒடிஷா முதல்வர் தேர்வு செய்யப்படவுள்ளார். அந்தப் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் அடிபடுகிறது. இந்நிலையில் நாளை மாலை 5 மணிக்கு புதிய அரசு பதவியேற்கவுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 24ஆம் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு ஏற்கெனவே அறிவித்திருந்தார். ஆனால், ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் கூட்டத் தொடரின் தேதி மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. கூட்டத் தொடர் நடைபெற்றால், கட்சியினரால் தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்பதால் உறுப்பினர்கள் தேதியை மாற்ற கோரிக்கை வைக்கவுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.