India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சூரியன் மறைவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் விளக்கு ஏற்றுவது நல்லது. லட்சுமி தேவிக்காக விளக்கை வடக்கு திசையில் ஏற்றி வைக்க வேண்டும். அங்கே செருப்பு இருக்கக் கூடாது. விளக்கை நன்றாக சுத்தம் செய்து விட்டே விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கில் கரி படிந்திருந்தால், அதை மாற்ற வேண்டும். விளக்கு ஏற்றியவுடன் கதவை மூடக்கூடாது. வீட்டிற்குள் வரும் நல்ல சக்திகள் வெளியே தங்கிவிடும் என்பது ஐதீகம். SHARE IT.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று(அக்.23) காலையில் மழை தொடரும் என IMD தெரிவித்துள்ளது. இதனிடையே, மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் இயங்கும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், மறைந்த MLA EVKS இளங்கோவனின் நெருங்கிய நண்பருமான நாசே ராமச்சந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 2024 லோக்சபா தேர்தலில் கடலூர் (அ) மயிலாடுதுறை தொகுதிகளில் போட்டியிட விரும்பிய அவருக்கு சீட்டு கிடைக்காததால் அதிருப்தியில் இருந்தார். ஈரோட்டில் செல்வாக்கு மிகுந்தவர் என்பதால் அதிமுக, பாஜகவினர் தங்கள் கட்சியில் சேர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம்.

தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை கடந்து செல்லக்கூடும் என IMD கணித்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா, இன்று 2-வது ஆட்டத்தில் களமிறங்க உள்ளது. இந்தியா வெற்றி பாதைக்கு திரும்ப விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் பார்ம் ரொம்ப முக்கியம். இந்த போட்டியில் தோற்றால் சீரிஸை இழந்து விடுவோம் என்பதால் இந்திய அணி முழு திறனையும் வெளிக்காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல.

திமுக கூட்டணியை விட்டு வேறு கூட்டணியை சிந்திப்பதே கிடையாது என இந்திய யூனியன் முஸ்லீம் லீக்(IUML) தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு 6 தொகுதிகளை எதிர்பார்ப்பதாகவும், குறைந்தது 5 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைப்போம் என்றும் கூறியுள்ளார். கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற IUML 3 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

பார்வையில் ஆளை சாய்க்கும் கயாது லோஹர் தமிழ் ரசிகர்களின் ரிசன்ட் கிரஸாக வலம் வருகிறார். ‘டிராகன்’ படத்தில் இதயத்தை கொள்ளையடித்து சென்ற கயாது லோஹரின் அடுத்த படத்துக்காக பலரும் காத்திருக்கின்றனர். காத்திருக்கும் ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என இன்ஸ்டாவில் போட்டோஸை போட்டு ரசிகர்களை தனது விழிகளில் கட்டிப்போடுகிறார். மேலே உள்ள போட்டோஸை பார்த்து நீங்களும் என்ஜாய் பண்ணுங்க..

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளின் கனமழையால் விவசாயிகளின் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளையும், வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களையும் கணக்கு எடுத்து உரிய நிவாரணங்களை உடனடியாக தமிழக அரசு வழங்க அவர் வலியுறுத்தியுள்ளார். கொள்முதல் நிலையங்களின் மெத்தன போக்கால் விவசாயிகள் பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ரயில்வேயில் ஜூனியர் இன்ஜினியர் 2,570 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இன்ஜினியரிங் (அ) டிப்ளமோ முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் வயது 18-ல் இருந்து 33-க்குள் இருந்தால் வரும் அக்.31 – நவ.30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹29,300 – ₹38,400 வரை கிடைக்கும். இதுதொடர்பான முழுவிபரங்கள் அறிய <

நுரையீரலில் தேங்கியுள்ள சளியை கரைத்து வெளியேற்ற இந்த கசாயம் போதும். முதலில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் சுட வைக்க வேண்டும். அதில் கிராம்பு, மிளகு, ப்ளாக் சால்ட், சுக்கு பவுடர், ஓமம், வெல்லத்தை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து, பாதியாக சுண்டியதும், அதை இறக்கி வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும். இதனால் நெஞ்சு சளி, மூக்கடைப்பு, இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
Sorry, no posts matched your criteria.