News November 4, 2025

1% பணக்காரர்களின் சொத்து 62% ஆக உயர்வு

image

இந்திய மக்கள் தொகையில் 1% உள்ள பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கடந்த 23 ஆண்டுகளில் 62%ஆக உயர்ந்துள்ளதாக ஜி20 அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது சீனாவில் 54% ஆக உள்ளது. மேலும், உலகளவில் உள்ள 1% பெரும் பணக்காரர்கள், கடந்த 23 ஆண்டுகளில் 41% புதிய சொத்துக்களை சேர்த்துள்ளனர். அதேசமயத்தில், உலகின் பாதி மக்கள் வெறும் 1% மட்டுமே சொத்துக்களை சேர்த்துள்ளனர். இதுபற்றி உங்கள் கருத்து?

News November 4, 2025

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: EPS

image

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 31 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம், EPS வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின்பும் இந்நிலை தொடர்வதாக கூறிய அவர், இலங்கை அரசை தொடர்பு கொண்டு, பிரச்னைக்கு தீர்வுகாண மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய உதவிகளை வழங்க திமுக அரசையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News November 4, 2025

FLASH: தங்கம் விலை மளமளவென குறைந்தது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $54 குறைந்து $3,948-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 22 கேரட் தங்கம் இன்று சவரனுக்கு ₹800 குறைந்த நிலையில், நாளையும் கணிசமாக விலை குறையலாம். SHARE IT

News November 4, 2025

உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க… PHOTOS

image

தற்காலத்தில் சிறுவர்கள் எப்போதும் போனுடனே இருக்கின்றனர். இதனால் அவர்களின் கவனக்குவிப்பு திறனும் நினைவாற்றலும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், உங்கள் குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும் உணவுகளை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு தெரிந்த ஐடியாவையும் கமெண்ட் பண்ணுங்க!

News November 4, 2025

தமிழகத்தை கலவர பூமியாக்கும் அன்புமணி: ராமதாஸ்

image

பாமக MLA <<18196872>>அருள்<<>> மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ராமதாஸ், நடைபயணம் என்ற பெயரில் தன்னுடன் உள்ள பாமகவினரை ஒழிக்க அன்புமணி திட்டமிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரியுள்ள அவர், அன்புமணியின் நடைபயணத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என கூறியுள்ளார். அன்புமணியின் கும்பலை தடை செய்யவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News November 4, 2025

இரவில் மழை பொளந்து கட்டும்.. வந்தது அலர்ட்

image

சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. மேலும், பல இடங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், இரவிலும் மழை தொடரும் என IMD கணித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூர், நாகை, வேலூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவனமாய் இருங்கள் நண்பர்களே!

News November 4, 2025

SIR வந்தால் தமிழ்நாடு இன்னொரு பிஹாராகும்: சீமான்

image

மக்களை பதற்றமாக வைத்திருக்கவே, SIR-ஐ பாஜக கொண்டு வருவதாக சீமான் விமர்சித்துள்ளார். போலி வாக்காளர்களை நீக்குவது சரி என்று கூறியுள்ள அவர், ECI கேட்கும் ஆவணங்களை கொடுத்தால் தான் வாக்காளர் பட்டியலில் பெயரே இருக்கும் என்றால், அது எப்படி சரி என கேள்வி எழுப்பியுள்ளார். SIR செயல்படுத்தப்பட்டால், விரைவில் தமிழ்நாடு இன்னொரு பிஹார் ஆகிவிடும் என்றும் விமர்சித்துள்ளார்.

News November 4, 2025

WC-யில் தோற்றாலும் முதலிடம் பிடித்த SA கேப்டன்

image

மகளிர் உலகக்கோப்பை தொடர் முழுவதும், ICC ODI தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முதலிடத்தில் இருந்தார். ஆனால், ஃபைனலில் இந்தியாவிடம் தோற்ற SA அணி கேப்டன் லாரா வோல்வார்ட், அவரை தற்போது பின்னுக்கு தள்ளியுள்ளார். செமி ஃபைனல், ஃபைனல் என 2 போட்டிகளிலும் சதம் விளாசி அவர் முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் முதல்முறையாக டாப் 10-க்குள் (10-வது இடம்) இடம்பிடித்துள்ளார்.

News November 4, 2025

திமுகவில் அடுத்தடுத்து இணையும் அதிமுக புள்ளிகள்

image

மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், அன்வர் ராஜா, கார்த்திக் தொண்டைமான் என அதிமுகவில் இருந்த முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து திமுகவில் இணைந்து வருகின்றனர். சொந்த ஊரில் மிகவும் செல்வாக்கு பெற்ற இவர்களின் வருகை திமுகவுக்கு பலம் சேர்க்கும் என்பது உண்மைதான். அதே நேரம், புதிதாக இணையும் மாற்றுக் கட்சியினருக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்பட்டால், திமுகவினர் அதிருப்தி அடையவும் வாய்ப்புண்டு. உங்க கருத்து?

News November 4, 2025

₹1,000 மகளிர் உரிமைத் தொகை… வந்தாச்சு அப்டேட்

image

ஜூலை 15 முதல் தற்போது வரை 30 லட்சத்திற்கும் அதிகமானோர் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர். புதிய பயனர்களுக்கு டிச.15-ல் ₹1,000 வரவு வைக்கப்படும் என உதயநிதி அறிவித்திருந்தார். ஆனால், திட்டத்திற்கு தகுதியானவர்கள் குறித்த அறிவிப்பு இன்னமும் வெளியாகாததால் பலரும் கலக்கத்தில் இருந்தனர். இந்நிலையில், தகுதியானோர் விவரம் நவ.30-க்குள் தெரிவிக்கப்படும் என உதயநிதி மீண்டும் உறுதியளித்துள்ளார்.

error: Content is protected !!