India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

*1870–சுதந்திர போராட்ட தலைவர் சித்தரஞ்சன் தாஸ் பிறந்தநாள். *1888-தமிழ் இலக்கிய வரலாற்றை முதலில் எழுதிய அறிஞர் கா.சுப்பிரமணிய பிள்ளை பிறந்தநாள். *1930–மருத்துவர் பூ.பழனியப்பன் பிறந்தநாள். *1952–எழுத்தாளர் வந்தனா சிவா பிறந்தநாள். *2013–செவ்வாய் கோளுக்கு மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. *2007–ஆண்ட்ராய்டு இயங்குதளம் வெளியீடு.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டே செல்வதாக OPS விமர்சித்துள்ளார். கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அவர், திமுக அரசு காவல்துறையை செயலிழக்க வைத்துவிட்டதாகவும் சாடியுள்ளார். மேலும், தமிழகத்தில் சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், போலீசுக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆசிய கோப்பையில் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30% அபராதமும், 2 தகுதி இழப்பு புள்ளிகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சர்ச்சை சமிக்ஞை காட்டிய ஹாரிஸ் ராஃப்-க்கு மொத்தமாக 4 தகுதி இழப்பு புள்ளிகளுடன் 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

*உங்கள் இலக்கை அடைய நீங்கள் உண்மையிலேயே விரும்பினால், எந்த தடையாக இருந்தாலும் அதை அடைய வழி கிடைக்கும். *ஒவ்வொரு பிரச்சனையையும், அதை தீர்ப்பதற்கான வாய்ப்பாகப் பாருங்கள். *எப்போதும் சிறந்ததை பற்றி சிந்தியுங்கள். முடிந்ததைச் செய்யுங்கள். *படித்தல் என்பது மனதை ஒரு புதிய இடத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு வழியாகும்.

மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது வருத்தமளிப்பதாக TTV தினகரன் கூறியுள்ளார். 2026 தேர்தலில் EPS எதிர்கட்சி தலைவராக ஆவதற்கு வாய்ப்பில்லை என புரிந்து கொண்டு தான் நீண்ட காலமாக அதிமுகவில் இருந்த மனோஜ் பாண்டியன் திமுகவில் சேர்ந்திருப்பதாகவும் TTV தெரிவித்துள்ளார். EPS-ன் நடவடிக்கைகளை பார்த்து மனமுடைந்த காரணத்தால், திமுகவில் இணையும் முடிவை அவர் எடுத்திருப்பார் என்றும் TTV பேசியுள்ளார்.

பொருளாதார பலம் காரணமாக இந்தியா தனித்து சொந்தக்காலில் உயர்ந்து நிற்பதாக FM நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் இல்லை என்று சொல்பவர்களை நம்பி அடிபணியக்கூடாது என அவர் கூறியுள்ளார். உலகின் மிகப்பெரிய 3-வது பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்றும், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் நம் நாடு வேகமாக முன்னேறும் காலத்தில் இருப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.

தமிழ் சினிமா ஹீரோக்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்கள் நஷ்டமடைவதற்கு ஹீரோக்களின் சம்பளமும் ஒரு காரணம் என்றும், அதை குறைத்தால் படத்தின் மேக்கிங்கிற்கு கூடுதல் செலவு செய்யலாம் எனவும் அவர் கூறினார். தனது கடைசி 3 படங்கள் லாபம் ஈட்டியதாகவும் குறிப்பிட்டார். பல டாப் ஹீரோக்கள் படத்தின் பட்ஜெட்டில் 50-60% சம்பளமாக பெறுகின்றனர் என்பது கோலிவுட் வட்டார தகவல்.

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 510 ▶குறள்: தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும். ▶பொருள்: ஒருவனை ஆராயாமல் பதவியில் அமர்த்துவதும், அமர்த்தியபின் அவன்மீதே சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும்.

மகளிர் உலகக் கோப்பை ஐசிசி கனவு அணியில் 3 இந்திய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய வீராங்கனைகளை வைத்து இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி மந்தனா, லாரா வோல்வார்ட் (C), ஜெமிமா ரோட்ரிக்ஸ், KAPP, ஆஷ் கார்ட்னர், தீப்தி சர்மா, டி கிளெர்க், சிட்றா நவாஸ் (WC), அலனா கிங், சோஃபி எக்லெஸ்டோன், சதர்லேண்ட் ஆகியோர் உள்ளனர். 12-வது ஆக நாட் ஸ்கிவர் ப்ரண்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

CBSE 10-ம் வகுப்பு தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 2-ம் பாடமாக இந்தியை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு சாதகமாகவும், தமிழ் மாணவர்களுக்கு பாதகமாகவும் அட்டவணை இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தி தேர்வுக்கு முன்னும் பின்னும் 2 மற்றும் 4 நாள்கள் விடுமுறை இருப்பது போல, தமிழுக்கும் குறைந்தது 3 நாள்கள் இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.